இந்திய கடற்படையில் பயிற்சியுடன் மாலுமி வேலை

இந்திய கடற்படையில் "செய்லர் பிப்ரவரி-2019" என்ற பயிற்சியுடன் மாலுமி பணி
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இந்திய இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது "செய்லர் பிப்ரவரி-2019" என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையிலான மாலுமி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் டூ முடித்த இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: செய்லர் பிப்ரவரி-2019

வயது வரம்பு: 1.2.1998 மற்றும் 31.1.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் அடங்கிய அறிவியல் பிரிவில் பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 22 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் அளிக்கப்படும். மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1  பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2018

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in
சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.