Monday, April 30, 2018

வியட்நாம்

வியட்நாம்:

வியட்நாம் அல்லது உத்தியோகபூர்வமாக வியட்நாம் சமவுடைமைக் குடியரசு என்பது தென்கிழக்காசியாவின் இந்தோசீனக் குடாவில் கிழக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும். 2012ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 90.3 மில்லியன் மக்களைக் கொண்டு மக்கள் தொகை அடிப்படையில் உலகளவில் 13ம் இடத்திலும், ஆசியாவில் 8வது இடத்திலும் உள்ளது. வியட்நாம் என்பதன் கருத்து "தெற்கு வியட்" (நாம் வியட் எனும் பண்டைய சொல்லுக்கு ஒத்ததாக உள்ளது.) என்பதாகும். 1802ல் பேரரசர் ஜியா லோங்கினால் இப் பெயர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டதோடு பின்னர் 1945ல் ஹோ சி மின்னின் தலைமையில் வியட்நாம் சனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டபோது இப்பெயர் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. இந் நாட்டின் வடக்கே சீனாவும், வடமேற்கே லாவோசும், தென்மேற்கே கம்போடியாவும், கிழக்கே தென்சீனக்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன. 1976ல் வட மற்றும் தென் வியட்நாம்கள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதன் தலைநகராக ஹனோய் உள்ளது.

கி.பி. 938ல் பாதாங் நதிப் போரில் பெற்ற வெற்றியை அடுத்து சீனப் பேரரசிடமிருந்து வியட்நாம் சுதந்திரமடைந்தது. பல்வேறு வியட்நாமிய அரச வம்சங்களும் இங்கு தோன்றி நாட்டை வளப்படுத்தியதோடு வியட்நாம் புவியியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தென்கிழக்காசியா நோக்கி விரிவடைந்தது. 19 ஆம் நூற்றாண்டில் இந்தோசீனத் தீபகற்பத்தை பிரான்சியர் அடிமைப்படுத்தும்வரை இது தொடர்ந்தது. 1940களில் சப்பானிய ஆதிக்கத்தைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வியட்நாமியர் முதலாவது இந்தோசீனப் போரை நடத்தினர். இதன்மூலம் 1954 பிரான்சியர் வெளியேறினர். அதன்பிறகு வியட்நாம் அரசியல் அடிப்படையில் வட, தென் வியட்நாம்களாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு பகுதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்தமையினால் வியட்நாம் போர் ஏற்பட்டது. ஐக்கிய அமெரிக்க ஆதரவுடனான தென் வியட்நாமை எதிர்த்து வட வியட்நாமும் வியட்கொங் படைகளும் போர்புரிந்தன. 1975 இல் வட வியட்நாமின் வெற்றியை அடுத்து போர் நிறைவடைந்தது.

வியட்நாம் முழுவதும் பொதுவுடைமை ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. எனினும் வியட்நாம் ஏழ்மை நாடாகவும் அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும் தொடர்ந்தது. 1986 இல், அரசாங்கம் தொடர்ச்சியான பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டமையின் விளைவாக உலகப் பொருளாதாரத்துடன் வியட்நாம் ஒன்றிணையத் தொடங்கியது. 2000ம் ஆண்டளவில் பலநாடுகளுடன் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. 2000 ஆம் ஆண்டிலிருந்து வியட்நாமின் பொருளாதார வளர்ச்சி வீதம் மிக உயர்வாகக் காணப்பட்டதோடு, 2011 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சிச் சுட்டெண்ணில் ஏனைய 11 பாரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளுடன் இடம்பெற்றது. இதன் சிறந்த பொருளியல் சீர்திருத்தங்கள் காரணமாக 2007 இல் உலக வணிக அமைப்பில் இணைந்து கொண்டது. எவ்வாறாயினும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சுகாதாரச் சேவைகளில் சமத்துவமின்மை மற்றும் பாலியல் சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்:

பழங்கற்காலத்திலிருந்தே வியட்நாம் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைத்துள்ளன. கி.மு. 500,000 வருடங்கள் பழமையான ஹோமோ எரெக்டசு மனித எச்சங்கள் வடக்கு வியட்நாமின் லாங் சான் மற்றும் ஙே ஆன் மாகாணங்களிலுள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்கிழக்காசியப் பகுதியிலிருந்து பெறப்பட்ட மிகமுந்திய ஹோமோ சேப்பியன் எச்சங்கள் நடுப் பிளைத்தோசீன் காலத்தின் ஆரம்பப் பகுதிக்குரியனவாகும். இவற்றுள் தாங் ஓம் மற்றும் ஹாங் ஹும் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற பற்சிதைவு எச்சங்களும் உள்ளடங்கும். பின் பிளைத்தோசீன் கால ஹோமோ சேப்பியன் பல் எச்சங்கள் டொங் கான் பகுதியிலும்,முன் ஹோலோசீன் பகுதிக்குரிய பல் எச்சங்கள் மாய் தா தியூ, லாங் காஓ மற்றும் லாங் கௌம் ஆகிய இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெண்கலக் காலம்:

கிமு 1000 ஆம் ஆண்டளவில், மா ஆறு, செவ்வாறு ஆகியவற்றின் படுக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட அரிசிப் பயிர்ச்செய்கையும் வெண்கல வார்ப்புத் தொழிலும் காரணமாக தொங் சோன் பண்பாடு வளர்ச்சி பெற்றது. இப்பண்பாட்டில் உருவாக்கப்பட்ட வெண்கல மேளங்கள் புகழ்பெற்றவை. இக்காலத்தில், முந்தைக்கால வியட்நாமிய அரசுகளான வான் லாங் மற்றும் ஔ லாக் என்பன தோற்றம் பெற்றன. கி.மு. முதலாயிரவாண்டில் இப்பண்பாட்டின் தாக்கம் தென்கிழக்காசியக் கடலோர அரசுகள் உட்பட்ட தென்கிழக்காசியாவெங்கும் பரவியது.

1946–54: முதல் இந்தோசீனப் போர்:

1945 செப்டம்பர் 2 ஆம் திகதி வியட்நாம் சுதந்திர நாடாக ஹோசிமின் தலைமையிலான புரட்சிகர அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் பிரெஞ்சு அரசு தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வியட்நாமை தங்கள் காலனியாதிக்கத்திற்குள் தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதற்கெதிராக வியட்நாம் மக்கள் கடுமையான நேரடிப் போரில் ஈடுபட்டனர். சுதந்திர பிரகடனத்திற்குப் பிறகு சுமார் ஒன்பது ஆண்டுகள் நீடித்த இப்போர் 1954 இல் வியட்நாம் மக்களின் விடுதலைப் படை வெற்றி பெற்றதன் மூலம் முடிவிற்கு வந்தது. 1954 மே மாதம் 5ம் நாள் பிரெஞ்சு படைத் தளபதியும் கூட்டாளிகளும் சிறைபிடிக்கப்பட்டனர். 10000 பிரெஞ்சுப் படையினர் சரணடைந்தனர்.1954 ஜூலை 21 ஜெனிவா ஒப்பந்தம் மூலம் வியட்நாம் சுதந்திரத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.ஆனாலும் பிரச்சினை தொடர்ந்தது. வியட்நாம் நாடு தற்காலிகமாக இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இரண்டாண்டுகளுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு அவை ஒன்றிணைக்கப்படும் என்பது ஒப்பந்தத்தின் பகுதியாகும் .

Sunday, April 29, 2018

பல் வலி புழுக்களை வெளியேற்றும் வைத்திய முறை

பல் வலி புழுக்களை வெளியேற்றும் வைத்திய முறை:

தேவையான பொருட்கள்:

(1) அகலமான அரிவாள் 1,
(2) தட்டு (plate) 1,
(3) கொட்டான்குச்சி எனும் ஒரு ஓட்டையுள்ள தேங்காய் சிரட்டை 1,
(4) கண்டங்கத்திரி விதை - கொஞ்சம்,
(5) சுத்தமான வேப்ப எண்ணெய் ,
(6) சிறிது தண்ணீர்.


செய்முறை: 

அகலமான தட்டில்  சிறிது தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். தட்டின்  மீது நன்கு பழுக்கக் காய்ச்சிய அரிவாளை வைக்கவும். அரிவாளின் அகலமான பகுதியில் சிறிது வேப்ப எண்ணெயை விடவும். புகை வரும். அதில் சிறிது கண்டங்கத்திரி விதையைப் போட்டு உடனடியாக ஒற்றை ஓட்டை உள்ள தேங்காய் சிரட்டையை (கொட்டான்குச்சி) கவிழ்த்து வைக்கவும்.

புகை நேரடியாக வாய்க்குள் செல்வதற்காகவே சிரட்டை உபயோகிக்கப்படுகிறது. 

சிரட்டை ஓட்டை வழியாக வரும் புகையை  வாயைத்திறந்து எல்லா பற்களிலும் படும் படி மூச்சை அடக்கிக் கொண்டு ஆவி பிடிக்கவும்.

புகையை வாயுடன் நிறுத்திக்கொள்ளவும். வாய் வழியாக சுவாசிக்க கூடாது.

மீண்டும் அரிவளை பழுக்கக் காய்ச்சி 2,3 தடவை செய்யவும். 

பின் தட்டில் உள்ள நீரில் பார்க்கவும். பல் சொத்தை  புழுக்கள் அதில் விழுந்து இறந்து கிடப்பதை காணலாம்.

இதனை தொடர்ந்து 3 நாட்கள் செய்யவும். நல்ல பலன் கிடைக்கும்.

பல்வலி,அரணை வீக்கம் குறைந்து முற்றிலும் குணமாகிவிடும்.

இந்தியன் பீனல் கோட் - இந்திய தண்டனைச் சட்டம்

1. ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)


2.  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217


3.நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404


4. அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166


5. எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம். 


6. சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2)


7.  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.


8. இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.


9. இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43


10. ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.


11. காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)


12. கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.


13. தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.


14. காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)


15. அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)


16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)


17. பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம். 


18. பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.


19. முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267


20. அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403


21. குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.


22. தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96


23. பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை. IPC-295


24. மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295


25. ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை IPC-419


26. ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.


27. சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484


28. கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494


29. முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை. IPC-495


30. IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட


இதில் IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

Saturday, April 28, 2018

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்

உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உ ன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல்கள் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய் !!!

பேரிக்காயின் நன்மைகள்

ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் பேரிக்காயில் அதீத நன்மைகள் அடங்கியுள்ளன. நாம் மேற்கத்திய பழங்களின் மீது கொண்ட ஈர்ப்பால் நம் நாட்டு பழங்களை அதிகமாக கண்டுகொள்வதில்லை. பேரிக்காயில் சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் பஞ்சம் இல்லை என்றே கூறலாம்.

இந்த பழம் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகளும் அடங்கியுள்ளன. 

1. வாய்ப்புண் மற்றும் வயிற்று புண்:

வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

2. இதயப் படபடப்பு நீங்க:

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

3. சிறுநீரக கல்:

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது. உடல் சூட்டைத் தணிக்கும்.

5. இரும்பு சத்து:

குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

6. வயிற்றுப் போக்கு:

நாம் சாப்பிடும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் 
போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

7. கர்ப்பிணிப் பெண்களுக்கு:

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.

Friday, April 27, 2018

இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற உதவுகிறது கூகுள்


கூகுள் நிறுவனத்தின் தேடல் முடிவுகளில் வேலைவாய்ப்பு தேடலும் உட்படுத்தப்பட்டு, அதில் பல்வேறு தளங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் திரட்டி இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கூகுள் நிறுவனத்தின் தேடல் இன்ஜினிலேயே உங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற முடிகிறது. புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், வேலைவாய்ப்புகளுக்கான தேடலை வெளியிடப் போவதாக இந்த தேடல் ஜாம்பவான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அம்சம், ஒரு புதிய தேடல் அனுபவமாக கூகுள் ஐ/ஓ 2017 இல் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது இந்திய பயனர்களுக்காக இந்த அம்சம் களமிறக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளுக்கான கூகுளின் ஒரு பகுதியான இந்த வேலைவாய்ப்பு தேடல், வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களை நிறுவன வாரியாக இணைக்கும் முயற்சியை மையப்படுத்தி செயல்படுகிறது. இதற்காக வேலைவாய்ப்பு பொருத்தம் அளிக்கும் தொழில்துறை உடன் ஒரு நெருக்கமான கூட்டுறவைக் கொண்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு வேலைவாய்ப்பு தொழில்துறையை தேடுவதே ஒரு கடினமான செயல் என்ற நிலையில், நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு வேலையைக் கண்டுபிடிப்பது பெரும்பாலும் சிக்கல் மிகுந்ததாகவே உள்ளது. வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் இணையதளங்கள், செய்தித்தாள்கள் மற்றும் நோட்டீஸ் போர்டுகள் என்று எல்லா இடங்களிலும் பரவி கிடைக்கிறது. ஆனால் கூகுளை பொறுத்த வரை, "உங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் திறமைகளுக்கு சரியாக பொருந்தும் வேலைவாய்ப்புகளைக்" கண்டறியும் முதன்மை இடமாக வேலைவாய்ப்பு தேடல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. தேடல் இன்ஜினியரிங் அணியின் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் தலைவரான ஆச்சின்ட் ஸ்ரீவாஸ்தவா ஒரு பிளாக் இடுகையில் கூறியுள்ளதாவது, "நாடெங்கும் உள்ள எண்ணற்ற வேலை வாய்ப்புகளுடன் இந்தியர்களை இணைக்க, இந்த புதிய அனுபவத்தின் மூலமாக நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் யார் என்பதோ, எந்த மாதிரியான வேலைவாய்ப்பை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதோ ஒரு பொருட்டு அல்ல. உங்களுக்கு தேவையான மற்றும் திறமைக்கு பொருந்தும் வகையிலான வேலைவாய்ப்புகளைக் கண்டறிவது, தற்போது எளிதாகி உள்ளது" என்று தெரிவித்துள்ளார். இந்த புதிய அம்சத்தின் அறிமுகம் மூலம், "எனக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகள்", "புதியவர்களுக்கான வேலைவாய்ப்புகள்" அல்லது அதற்கு நிகரானது உள்ளிட்ட தேடல் சொற்தொடர்களைப் பயன்படுத்தி, தங்களைச் சுற்றிலும் உள்ள வேலைவாய்ப்புகளைக் குறித்து, வேலை தேடுபவர்கள் அறிந்து கொள்ள முடியும். இணையதளத்தில் உள்ள வேலைவாய்ப்பு செய்திகளைக் குறித்து ஆழ்ந்து ஆராய்ந்து அறிந்த முடிவுகளை இப்போது பெற முடிகிறது. இதற்காக ஏசியன்ஜாப்ஸ், பிரஷர்ஸ்வேல்டு, ஹெட்ஹோன்சோஸ், ஐபிஎம் டெலண்டு மேனேஜ்மெண்டு சோலியூஷன்ஸ், லிங்கிடுஇன், க்யூஸ்எக்ஸ், க்யூக்கர்ஜாப்ஸ், Shine.com, டி-ஜாப்ஸ், டைம்ஸ்ஜாப்ஸ் மற்றும் விஸ்டம்ஜாப்ஸ் உள்ளிட்ட எண்ணற்ற நிறுவனங்களுடன் பணியாற்றி, மிகவும் விரிவான வேலைவாய்ப்பு பட்டியல்களை அளிப்பதாக, கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், உங்களுக்கு தொடர்புடைய வேலைவாய்ப்பை நிறுவனங்களின் இணையதளங்கள் உட்பட பல்வேறு தளங்களில் இருந்து மிக விரைவில் அவற்றை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளோம். இந்தியாவைப் பொறுத்த வரை, தற்போது 90 ஆயிரத்திற்கும் அதிகமான வேலை அளிப்போரிடம் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பல்வேறு வேலைவாய்ப்பு வகைகள் மற்றும் தொழில்துறைகள் இருப்பதாக, கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு வேலை தேடுபவர்கள், வேலை வாய்ப்புகளைப் பார்த்து, அதன்பிறகு பணி பெயர், இருப்பிடம், அது முழுநேரம், பகுதி நேரம் அல்லது ஒரு பயிற்சிகாலம் போன்றவற்றின் அடிப்படையில் பிரித்தறியும் தேர்வுகள் அளிக்கப்படும். எதிர்காலத்தில் மேலும் பல தொடர்புடைய பிரித்தறியும் தேர்வுகளை அது கொண்டிருக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், கூகுள் கணக்கு மூலம் நீங்கள் ஒரு முறை உள்நுழைந்த உடனே, வேலை வாய்ப்பு இடுகையைச் சேமித்து கொள்ளக் கூடிய தேர்வு, ஒரு முக்கியமான அம்சமாக அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு வேலைவாய்ப்பு தேர்வை அறிமுகம் செய்து, தனது 500 மில்லியன் பயனர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் அவர்களுடைய இணைப்புகளை பரிந்துரைச் செய்யவும் உரிய வாய்ப்புகளை அளித்த லிங்கிடுஇன் செயல்பாட்டிற்கும் சவால் விடுவதாக கூகுள் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தேடல் அமைந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் 45 சதவீதத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு தேடல்கள் என்ற அபரிமித வளர்ச்சியைக் கண்டதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கேள்விகள் பெரும்பாலும் இணையதளத்தில் மட்டுமே நடந்துள்ளன என்பதால், மற்ற எந்தொரு இணையதள சேவையை விட பயனர்களுக்கான சிறந்த இடைமுகமாக கூகுள் நிறுவனத்தால் செயல்பட முடியும்.

Thursday, April 26, 2018

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஐயில் ஆய்வாளர் வேலை

மத்திய புலனாய்வு விசாரணை (சிபிஐ) ஆணையத்தில் காலியாக உள்ள 52 ஆய்வாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறையில் அதிகாரி தரத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களிடமிருந்து மே 15க்குள் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 52

பணி: Inspectors

சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி: பட்டதாரிகளாகவும், மத்திய, மாநில அரசின் காவல்துறைகளில் ஆய்வாளர்கள் தரத்தில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்:Bhopal, Chennai, New Delhi, Guwahati, Hyderabad|Secunderabad, Kolkata.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cbi.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.cbi.gov.in/employee/recruitments/contract_inspector_24042018.pdf

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பண்டக காப்பாளர் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுநர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Store Keeper - 01

சம்பளம்:மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 

Dy. Director (Rehab)-I/C, 
National Career Service Centre for Differently Abled, 
Nalanchira P.O., Thiruvananthapuram- 695015, 

தொலைபேசி எண்: 0471-2531175

பணியிடம்: திருவனந்தபுரம்

பணி: Vocational Instructor - 01

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

H.O.O, 
National Career Service Centre for Differently Abled, 
ATI Campus, Gill Road, Ludhiana-141003

பணியிடம்:பஞ்சாப் மாநிலம் லுதியானா

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_23105_1_1819b.pdf

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு - காதலிக்க நேரமில்லை

என்னை தேடி காதல்
என்ற வார்த்தை அனுப்பு 
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடும் முன் 
செய்தி அனுப்பு …ஹோ 
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும் 
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை 
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் 
சொல்லிஅனுப்பு ..ஹோ 
பூக்கள் உதிரும் சாலை வழியே 
பேசி செல்கிறேன் 
மரங்கள் கூட நடப்பதுபோலே 
நினைத்து கொள்கிறேன் 
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன் 
கனவில் மட்டும் காதல் செய்து 
இரவை கொல்கிறேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு 
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்திஅனுப்பு …ஹோ 

யாரோ உண் காதலில் வாழ்வது யாரோ 
உண் கனவினில் நிறைவது யாரோ 
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ 
ஏனோ என் இரவுகள் நீள்வதுஏனோ 
ஒரு பகல் என சுடுவது ஏனோ 
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ 
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு 
காதலிக்க அங்கு நேரம் இல்லையா 
கிளையை போல் என் இதயம் தவறிவிழுதே 

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு 
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்திஅனுப்பு …ஹோ 
பூக்கள் உதிரும் சாலை வழியே 
பேசி செல்கிறேன் 
மரங்கள்கூட நடப்பதுபோலே 
நினைத்து கொள்கிறேன்...

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள நிர்வாகம் தொடர்பான பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து மே 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:Faculty Member

பணியிடம்: Jind

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: பட்டம் மற்றும் விவசாயம், தோட்டக்கலை குறித்து பயிற்றுவிப்பதில் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய சுயசான்று செய்யப்பட்ட முழுமையான விவரங்கள், புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Circle Head. Punjab National Bank, 
Circle Office, Sandeep Chatha Complex, 
Pipli Road, Kurukshetra (Hr.)-136118.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.pnbindia.in/recruitments.aspx

Wednesday, April 25, 2018

செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடித்தால் இவ்வளவு நன்மைகளா...

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

செம்பு தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக இரவே செம்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.பேறு, நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.


செம்பு பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று' என்பது பழமொழி. இதன் பொருள் செம்பு பாத்திரம் கழுவிய நீரை செடிக்கு ஊற்றும்போது, அந்நீரை உறிஞ்சி வளரும் செடியின் வாயிலாக கிடைக்கும் காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவையாக இருக்கும். அக்காய்கறிகளை நாம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு மிகுந்த பயன்கிடைக்கும் என்பதுதான் பொருள். செப்பு பாத்திரத்தின் அருமை தெரிந்த நம் முன்னோர்கள் சொல்லிவைத்துச் சென்ற இப்பழமொழி...விஞ்ஞானக் காலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை கூற்று.

செம்பு எனப்படும் காப்பர் சத்துதான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது உப்பு. செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது. மேலும் செம்பு தாது, நல்ல இரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செம்பு கலந்த நீரைக் குடிக்கும்போது இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால் இரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட இரத்தம் சார்ந்த உடல்நலப் பிரச்னைகளின் வரவும் தடைபடும். 

செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் இரத்தசோகை பிரச்னையின் வரவை கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும். 

நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய எவர்சிலவர் பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள்தான் சிறந்தவை. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும், உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி அதிகமாகும். குறிப்பாக முந்தையக் காலங்களில் பெண்களை திருமணம் செய்து அனுப்பும்போது, செம்பு பாத்திரங்களை சீராக கொடுத்து அனுப்புவார்கள். புதுமணத்தம்பதிகள் செம்பு பாத்திரத்தைப் பயன்படுத்தி விரைவில் குழந்தைப் பேறு, நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகத்தான். 

நீரைக் குடிக்கும் முறை:

குடிநீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்ற மூலிகைகளை தினம் ஒன்றாக கலந்தும் குடிக்கலாம். உடலுக்கு கூடுதல் நன்மைக் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு:

முந்தைய காலங்களில் செம்பு கெண்டியில்தான் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் அந்நீரைக் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். காலப்போக்கில் அப்பழக்கம் மறைந்துபோய்விட்டதால், இன்றைய இளம் குழந்தைகளும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை அதிக அளவில் சந்திக்க நேரிடுகிறது. எனவே செம்புப் பாத்திரங்களில் நிரப்பிய நீரை, குழந்தைகளுக்கு பருகக் கொடுப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்வது எப்படி?

செம்பு பாத்திரத்தை, பாத்திரம் துலக்கும் சோப்பு கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. வெறும் அடுப்புச் சாம்பல் மற்றும் புளியைக் கொண்டு, தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்வதே சிறந்தது. சாம்பல் கிடைக்காதவர்கள், புளியை மட்டுமே பயன்படுத்தலாம். புளியில் இருக்கும் அமிலத்தன்மை, செம்பு தாதுவுடன் வினைபுரிந்து பளபளப்பைக் கொடுக்கும். பாத்திரத்தைக் கழுவியப் பின்னர், ஒன்றிரண்டு முறை நல்ல தண்ணீரைக் கொண்டு அலசி ஊற்றியப் பின்னர், குடிதண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கப் பயன்படுத்தலாம்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை - பழமொழி:

பழமொழி:- 

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

பொருள்:

உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.

தமிழ் விளக்கம்:

"உப்புத்தான் கொஞ்சம் ஏற-இறங்க இருந்தாலும் ஒரே கரிப்பு, அல்லது ஒரே சப்பு. ’உவர்ப்பு’ என்கிறதைப் பேச்சில் ’கரிப்பு’ என்றே சொல்லுகிறோம். இலக்கண சுத்தமான வார்த்தையாக ’உவர்ப்பு’க்குக் ’கார்ப்பு’ என்றும் பெயர் இருக்கிறது. அதுதான் பேச்சு வழக்கில் ’கரிப்பு’ ஆகிவிட்டது. ’உப்புக் கரிக்க’ என்கிறோம். அப்படி, உப்புப் போட்ட வியஞ்ஜனங்களில் அது கொஞ்சம் ஏறினாலும் ஒரே கரிப்பு, கொஞ்சம் குறைந்தாலும் ஒரே சப்பு என்று ஆகிவிடுகிறது. உப்பு ஏறிப் போய்விட்டால் ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாது. ஆனால், குறைந்தால் மற்ற ருசிகளைத் தருகிற புளி, மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே இல்லை. உப்பு ருசி குறைந்தால் மட்டும் அந்த உப்பையே கொஞ்சம் இலையில் சேர்த்துக் கலந்துகொண்டால் போதும். க்ஷணத்திலே அது கரைந்து ஸரிப் பண்ணிவிடும். நாம் ஆஹாரத்தில் ருசித் தப்பு நேர்ந்தால் மூல வஸ்துவை நேராகச் சேர்த்து, உடனே தப்பை ஸரியாகப் பண்ணிக்கொள்வது இது ஒன்றில்தான். ஆனபடியால் அந்த ஒரு குறைபாட்டை, சாப்பிடுபவர் தங்களிடம் சொல்லி, தாங்கள் பல பேருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காக்கவைத்து, அல்லது அவர்களுக்காக பிறத்தியாரைக் காக்கவைத்து, அவர்களுக்குப் போடுவதாக இருக்க வேண்டாமென்று நம்முடைய பூர்வகால முப்பாட்டிப் புத்திசாலி க்ருஹலக்ஷ்மிகள் நினைத்திருக்கிறார்கள். அதனால் சாப்பிடுபவரே உப்புப் போதாத குறையை நிவர்த்தி பண்ணிக்கொள்ள வசதியாக இலையில் மற்ற வ்யஞ்ஜனங்கள் பரிமாறுகிறதற்கு முந்தி முதலிலேயே கொஞ்சம் உப்புப்பொடி வைத்துவிடுவார்கள். அதைக் குறிப்பாக மனஸில் கொண்டுதான் நமக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறபோது ’உப்பிட்டவர உள்ளளவும் நினை’ என்றார்கள்."

Tuesday, April 24, 2018

Tamil Nadu Engineering Admissions (TNEA) counselling Notifications

Tamil Nadu Engineering Admissions (TNEA) counselling will be conducted online through Internet from 2018 onwards. Applicants can register their applications and take part in single window counselling for TNEA through Internet from anywhere or being at their home.

42 Tamil Nadu Engineering Admissions Facilitation Centres (TFCs) have been established to help the rural applicants and applicants who do not have access to internet facility. Such, facilitation centres will act as helping or guiding centres for Tamil Nadu Engineering Admissions 2018 and these centres are not distributed counselling centres. The original certificate verification for all the applicants will be verified at these TFCs only.

Application Registration:

The applicants can register their applications through the official TNEA portal from anywhere through the Internet or using the TFC by paying the required registration fee through online. The applicants are required to pay a sum of Rs. 500/- (Rs.250/- for SC/SCA/ST) towards application registration. A data preparation sheet for application registration is designed for the applicants and will be made available in the portal as well as at the TFCs for the benefit of the applicants. The applicants are encouraged to fill this data sheet prior to accessing the portal through internet or at TFCs for convenient and accurate data submission using the computer.

After application registration, all the applicants will be assigned a random number for breaking tie if it happens during preparation of merit list.

Original Certificate Verification:

The applicants then should visit the assigned TFC (applicants can choose their preferred TFC during application registration) along with a hard copy of the application, original certificates and photo copy of their original certificates where their originals will be verified against their registered application data

A booklet containing Information about Colleges will be given to the applicants for the applicants’ to prepare their choice list. Also, TFCs will screen videos demonstrating how to use the TNEA portal during various stages of counselling

Subsequently, a merit list will be prepared for the eligible applicants and published through the TNEA portal

A week is reserved for addressing applicants’ grievances if any after the publication of the merit list. Applicants are required to contact Office of Secretary, TNEA, Chennai for any grievance redressals
Counselling:

The applicants will be grouped based on merit list into rounds and each group of applicants will be allowed into the counselling system round wise. Each round comprises of the following:

Publication of list of eligible applicants for the round

Applicants are required to pay a sum of Rs.5000/- (Rs.1,000 for SC/SCA/ST) towards initial deposit for college admission through online before adding choices (college and branch) in preference order. Three days are provided in each round for applicants to decide, add and lock choices (third day till 5.00 pm only)

The seats are then allotted tentatively based on the merit list and order of preference of choices provided by the applicant. The applicant can see the tentative allotment details in their respective login itself on the next day

Applicants are required to confirm the tentative allotment by exercising any of the allotment options provided to them within the next two days (till 5.00 pm on the second day). Applicants, who could not be allotted based on merit list and choices, may opt to participate in the next round

After receiving the allotment options from the applicants of a round the final allotment will be done

Applicants who were not allotted in the current round or those who opted to participate in the next round can do so accordingly. Others, shall join in the respective college and branch that was allotted to them within the stipulated time period

The TFCs will provide the required support and guidance to the applicants for the TNEA process. Also, it will provide internet enabled computer facilities for all applicants, wherein the Government will bear the expenses. The applicant can use such TFCs to complete the different stages like registration of applications, providing college preferences and collection of allotment orders. TFC will start functioning after the TNEA schedule notification.

The special counselling like Eminent Sports persons, Differently Abled Person, Vocational, SC-SCA, and Supplementary will be held as in-person counselling at Chennai. Original certificate verification for eminent sports persons will also be held at Chennai only. SMS and email alerts to the applicants in their registered ids will be sent during each stage of counselling. All information regarding TNEA Counselling 2018 will be released through the official TNEA portal at URL https://tnea.ac.in or https://www.annauniv.edu only. To help applicants for any clarification regarding TNEA counselling process 20 helpline numbers is established. Applicants may call 044 2235 9901 -20 for help. These helpline numbers and official TNEA portal will start functioning after the announcement of TNEA schedule.

This new system will benefit all the applicants of Tamil Nadu Engineering Admissions and Anna University is entrusted with the design and implementation of the TNEA completely through internet.

Online Application Registration starts from 03-05-2018 09.00 am


For More Details : https://www.tnea.ac.in/

தேசிய விதை நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை

என்எஸ்சிஎல் என அழைக்கப்படும் தேசிய விதை கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 258 மேனேஜ்மென்ட் டிரெய்னி, சீனியர் டிரெய்னி, டிப்ளமோ டிரெய்னி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 258

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

MANAGEMENT TRAINEES (at Executive level):

பணி:Management Trainee (Materials Management) - 02
பணி:Management Trainee (Asst.Co. Secy.) - 01
பணி:Management Trainee (Production) - 27
பணி:Management Trainee (Marketing) - 09
பணி:Management Trainee (Agri.) Engineering - 03
பணி:Management Trainee (Civil) Engineering - 02
பணி:Management Trainee (HR) - 07
பணி:Management Trainee (F&A) - 07

SENIOR TRAINEES (Supervisory level):

பணி:Sr. Trainee (Marketing) - 48
பணி:Sr. Trainee (HR) - 01
பணி:Sr. Trainee (Accounts) - 06
பணி:Sr. Trainee (Agriculture) - 18
பணி:Sr. Trainee (Quality Control) - 02
பணி:Sr. Trainee (Horticulture) - 03

DIPLOMA TRAINEES:

பணி:Agriculture Engineering - 08
பணி:Civil Engineering - 04

TRAINEES (at Non-Supervisory level):

பணி:Trainee (Agri.) ;- 27
பணி:Trainee (HR) - 22
பணி:Trainee(Accounts) - 11
பணி:Trainee (Store) - 11
பணி:Trainee (Technician) - Electrician - 05
பணி:Trainee (Store) Engineering - 02
பணி:Trainee (Data Entry Operator) - 11

TRAINEE MATE (at Non-Supervisory level):

பணி:Trainee Mate (Agriculture) -21

தகுதி: 

எம்பிஏ., எம்.காம்., எம்.எஸ்சி (விவசாயம்) மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், பொறியியல் துறையில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் மற்றும் இதர துறைகளில் பட்டம் பெற்றவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு:

05.05.2018 தேதியின்படி 23 முதல் 25க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: 

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.525 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.05.2017 அன்று காலை மற்றும் மதியம் நடைபெறும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.indiaseeds.com/career/2018/NSC-Apr18.pdf

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் அதிகாரி வேலை

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 36 நிதித்துறை அதிகாரி, துறை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Finance Officer -15
பணி: Section Officer - 21

தகுதி: பட்டம் பெற்று தற்போது உதவியாளர், சுறுக்கெழுத்தாளர் கிரேடு-I பிரிவில் நான்கு ஆண்டு பணியாற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1jyLNyocyGuDqhc0j0jKrANlT7H5AIceQ/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பொதுத்துறை வங்கிகள் அதிகாரிகள் பணியிடங்களுக்கு அழைப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 158 கிரெடிட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 158

பணி: Officer (Credit)

இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 72 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 37 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 21 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 28 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், வணிகவியல், அறிவியல், பொருளாதாரவியல் சார்ந்த துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சி.ஏ., ஐசிடபுள்யுஏ., கம்பெனி செகரட்டரி படித்தவர்கள், எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofindia.co.in/pdf/BOIADVT-PROJECTNO-%202018-19-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


பரோடா வங்கியில் சீனியர் ரிலேசன்ஷிப் மேலாளர் பணி:

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் காலியாக உள்ள 424 மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தரத்திலான சீனியர் ரிலேசன்ஷிப் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: MSME-Sales/Relationship Management (SMG/S IV): - 25
பணி: MSME-Sales/Relationship management (MMG/S III): - 59
பணி: MSME-Monitoring/Processing of Loans (SMG/S IV): - 75
பணி: MSME-Monitoring Processing of Loans (MMG/S III): - 62
பணி: Finance/ Credit (MMG/S III): 100
பணி: Finance/Credit (MMG/S II): 40

வயதுவரம்பு: 6.5.2018 தேதியின்படி 23 முதல் 40க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 45 வயதுடையவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Advertisement-2018-19-Wealth-Management.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.



மாகோ வங்கியில் கிளார்க் வேலை:

மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் மாகோ வங்கியில் காலியாக உள்ள 8 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 08

பணியிடம்: மும்பை

பணி: கிளார்க்

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும், மராத்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறனும், ஆங்கிலம் மற்றும் மராத்தியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.600 + ஜிஎஸ்டி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிசி, என்டி பிரிவினர் ரூ.350 + ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும்.

விலாசம்: 

Maco Bank, Manora Aamdar Niwas, 
Free Press Journal Marg, Nariman Point, 
Mumbai - 400 021.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.macobank.com/UploadDocument/MACO-BANK-Advertisement-Apr-2018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Monday, April 23, 2018

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள்

உலக அளவில் நாம் நிலக்கடலை உற்பத்தியில் தனித்துவம் பெற்றிருந்தாலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தாவர எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எண்ணெய் வித்து பயிர்களில் சோயா மற்றும் கடுகுப்பயிருக்கு அடுத்த படியாக நிலக்கடலை நம் நாட்டில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது. நிலக்கடை சாகுபடியில், களை நிர்வாகத்தை முறையாக கடைபிடித்தால் அதிக மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம்.

இதுகுறித்து வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை உதவிப் பேராசிரியர் ம.மதன்மோகன் கூறும் ஆலோசனைகள்: அதிகரித்து வரும் வேளாண்மை தொழிலாளர்கள் பற்றாக்குறையைக் சமாளிக்க வேளாண் உற்பத்தியில் ஒரு முக்கிய தொழில்நுட்பம் களைக்கொல்லியை பயன்படுத்துதல் ஆகும். களைகள் பயிரை போன்றே நிலத்தில் உள்ள சத்துக்களையும், நீரையும் மற்றும் சூரிய ஒளியையும் பயன்படுத்தி வளர்கிறது. இதனால் நாம் விதைத்த பயிருக்கும், களைகளுக்கும் நிலத்தில் உள்ள பயிர்சத்துகள், நீர் மற்றும் சூரியஒளியை பெறுவதில் போட்டி ஏற்பட்டு, மகசூல் குறைவதற்கு வாய்ப்பாகிறது.

பயிரைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை பரப்பி மகசூலையும் பாதிக்கின்ற செயலில் களைகளின் பங்கு அதிகம். எனவே சரியான தருணத்தில் களைகளை நீக்குவதால் பயிர்கள் வேகமாக வளர்ந்து நல்ல விளைச்சலுக்கு உதவும். நிலக்கடையில் விதை விதைத்த 45 நாள்களில் களைச் செடிகளை கட்டுப்படுத்தினால் அதிக மகசூல் பெறலாம். விதைப்பதற்கு முன்பாக கோடை உழவு செய்யலாம். பயிற்சூழற்சி செய்தல், வயல் வரப்புகளை சுத்தம் செய்து வைத்திருத்தல் களைச்செடிகளை அழித்தல் போன்றவற்றை விதைப்பதற்கு முன்பாக செய்வதன் மூலம் களைச் செடிகளைக் கட்டுப்படுத்தலாம்.

ரசாயனக் களைக்கொல்லிகளை விதை விதைத்த நிலத்தில் களைகள் முளைப்பதற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ கட்டுப்படுத்தலாம். ராசயன களைக் கொல்லிகள் எந்த வகையை சார்ந்தது என்பதை நன்கு அறிந்து அவற்றைப் பயன்படுத்துவது நலம்.

ஒரு ஏக்கருக்கு புளுகுளோரலின் களைக்கொல்லியை 800 மி.லி. என்ற அளவில் விதைத்த மூன்று நாள்களுக்குள் 5- 6 சட்டி மணலுடன் கலந்து தூவலாம். அல்லது அகல வாய் தெளிப்புமுனை கொண்ட கைத்தெளிப்பானை பயன்படுத்தி புளுகுளோரலின் 800 மி.லி. அல்லது அளகுளோர் 800 மி.லி. அல்லது பெண்டிமெத்தலின் 1300 மி.லி. 200 மி.லி. நீரில் கலந்து மாலை வேளையில் மண் மீது தெளிக்க வேண்டும்.

அதாவது ஒரு ஏக்கருக்கு 20 டேங்க், ஒரு டேங்கிற்கு 40 மி.லி. களைக்கொல்லியை பயன்படுத்தலாம். (புளுகுளோரலின் அளகுளோர்) களைக்கொல்லியை தெளிக்கும் போதோ அல்லது தூவும்போதோ பின்னோக்கி நடந்து செல்ல வேண்டும். ரசாயனக் களைக்கொல்லியை பயன்படுத்தியவுடன் நிலத்துக்கு நீர்பாய்ச்சுவது அவசியம். முதல் களையை விதைத்த 30- 40 நாள்களில் களைகளை எடுத்தாலே நாம் திறம்பட கட்டுப்படுத்தலாம். இவ்வாறு களை மேலாண்மையை குறிப்பிட்ட நாள்களில் கையாண்டு அதிக மகசூல் பெறலாம்.

மருந்துசெய் உடனாளர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் காலியாக உள்ள மருந்துசெய் உடனாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 21 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் 25 மருந்துசெய் உடனாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு குறைந்தபட்சம் 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.16, 600 காலமுறை அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பம், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏப்ரல் 20 -ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அக்கால அவகாசம் மே 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான தேதி ஏப்ரல் 27 -இல் இருந்து மே 21 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, April 22, 2018

யோகா மருத்துவ அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறையில் உதவி மருத்துவ அலுவலர் அல்லது விரிவுரையாளர் நிலை - 2 பணியிடத்துக்கு 73 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தற்காலிக முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இணையதளம் மூலமாக மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்புவதற்கு 
மே 7 -ஆம் தேதி கடைசியாகும்.

எழுத்துத் தேர்வு மற்றும் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றி பணியிடங்கள் நிரப்பப்படும். எழுத்துத் தேர்வு ஜூன் 24 -ஆம் தேதி சென்னையில் நடைபெறும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்கள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள் ஆகியவை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

என்எல்சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு என்எல்சி சார்பில் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களின் வாரிசுகளுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மாற்றுக் குடியிருப்பை அந்த நிறுவனம் வழங்குவதுடன், வாரிசுகளுக்கு பல்வேறு சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகளையும் அளித்து வருகிறது. இதுதொடர்பாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் திறன் மேம்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அதன்படி, தற்போது முதியோர் பராமரிப்பு மற்றும் அலுவலகப் பராமரிப்புக்கான சிறப்புப் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. நெய்வேலி வட்டம் 6-இல் உள்ள ஆனந்தம் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, என்எல்சி மனித வளத் துறை தலைமைப் பொது மேலாளர் என்.சங்கர் தொடக்கி வைத்தார். சமூகப் பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொதுமேலாளர் ஆர்.மோகன், பொது மேலாளர் சேகர், துணைப் பொது மேலாளர் கே.ரமேஷ் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு மைய இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

முதியோரைப் பராமரித்தல் தொடர்பாக 3 மாதங்கள் நடைபெறும் பயிற்சியிலும், அலுவலகப் பராமரிப்பு தொடர்பாக 2 மாதங்கள் நடைபெறும் பயிற்சியிலும், மொத்தம் 60 பேர் இணைந்துள்ளனர். பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஆனந்தம் இல்லத்தில் நடைபெறும். முதியோர் பராமரிப்புப் பயிற்சி பெறுபவர்களுக்கு என்எல்சி பொது மருத்துவமனையிலும், அலுவலகப் பராமரிப்புப் பயிற்சி பெறுபவர்களுக்கு என்எல்சி விருந்தினர் இல்லம் மற்றும் அலுவலகங்களிலும் செய்முறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு உதவித் தொகையாக தினமும் ரூ.100 வழங்கப்படும். இதற்காக என்எல்சி நிறுவனம் ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டு மையம் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்கும். பயிற்சி வகுப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு மைய இயக்குநர்கள் வி.அருள்செல்வம், ஆர்.மாலதி, ஒருங்கிணைப்பாளர் ஜே.கிருஷ்ணன் ஆகியோர் நடத்த உள்ளனர்.

இணைய வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு திட்டத்தை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

சான்றிதழ் சரிபார்ப்புக்காக போட்டியாளர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க, இனி அந்தப் பணி இணைய வழியிலேயே மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

எழுத்துத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு உள்ளிட்டவை நடத்தப்படும். இப்போதுள்ள நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கென தரவரிசைப்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இருமுறை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்துக்கு வர வேண்டியுள்ளது.

தேர்வர்களுக்கு இதனால் ஏற்படும் பண விரயம், காலவிரயத்தினை வெகுவாகக் குறைக்கும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும், தங்களது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள அனைத்துத் தகுதிகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய மூலச்சான்றிதழ்களை (Original Certificate) ஸ்கேன் செய்து அவற்றை பதிவேற்றம் செய்யும் முறையினை தேர்வாணையம் தற்போது முதல்முறையாக அறிமுகப்படுத்துகிறது.

இந்த நடைமுறையானது, வரும் 23 -ஆம் தேதி நடைபெறும் குரூப் -2ஏ பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிலிருந்து தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், மே 4 -ஆம் தேதிக்கு முன்பாக தங்களது மூலச் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஐந்து ரூபாய் கட்டணம்:

தற்கென மூலச் சான்றிதழ்களின் (Original Certificate) ஸ்கேன் படிமத்தின் தரத்தை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் அனைத்து தாலுகா, தலைநகரங்களிலும் செயல்பட்டு வரும் இ -சேவை மையங்கள் வழியாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சான்றிதழை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 கட்டணமாக பொதுச் சேவை மையங்களில் வசூலிக்கப்படும்.

இந்தப் புதிய நடைமுறையில் இணையவழி மூலம் பெறப்படும் சான்றிதழ்கள், விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள கல்வித் தகுதிகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் தரவரிசைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒருமுறை தேர்வாணைய அலுவலகத்துக்கு மூலச் சான்றிதழ்களுடன் நேரில் வந்தால் போதுமானது. இதனால், விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் கால மற்றும் பண விரயம் வெகுவாகக் குறையும்.

பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்:

மூலச் சான்றிதழ்களின் தெளிவான வண்ணப்படிமம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படவேண்டும். விண்ணப்பதாரர்களின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் பொதுச் சேவை மையங்களின் பட்டியல் முகவரியுடன் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்வின் மூலம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட தேதியிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ சான்றிதழ்களின் படிமநகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்யும் முன்பு சான்றிதழ்களின் படிமநகல் தெளிவாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் கோரியுள்ள தகுதிக்கான சான்றிதழ்கள் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டுப்போனால் அவர் பதிவு செய்துள்ள விவரம் கணக்கில் கொள்ளப்படமாட்டாது.

அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது அவர் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களின் தகுதிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பதாரர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவருக்கு இந்த தெரிவில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்று கருதி அவரது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்களுக்கு மட்டுமே சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தால் போதுமானது. சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளுக்குப் பிறகு அதற்கான இணையப் பக்கம் முடக்கப்படும். இணைய வழியன்றி ஏனைய அஞ்சல் மற்றும் நேரில் பெறப்படும் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வு: வரும் 25-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 25-இல் நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

குரூப் 2 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-இல் நடத்தப்பட்டது. தேர்ச்சி பெற்றோருக்கு நேர்காணல் கடந்த ஜனவரி 22 முதல் பிப்ரவரி 19 வரையில் நடந்தது. 1,094 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த மார்ச் 19-இல் தொடங்கி ஏப்ரல் 3 வரையில் நடந்தது. 

முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பின்னர் நிரப்பப்படாமல் மீதமுள்ள 88 காலிப்பணியிடங்களில் 45 பதவிகளுக்கு மட்டும் தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதி நடத்த தேர்வணையம் முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு 1:5 என்ற விகிதத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் முறையே அழைப்புக் கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனித்தனியே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பாணையை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வருகைதரத் தவறும்பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன் பின்னர் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

விருதுநகரில் ஏப்.27 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏப். 27 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஏப். 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 5 முன்னணி நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.

இதில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ, பி.இ. (சிவில்) முடித்த ஆண்கள் மற்றும் தையல் தெரிந்த பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் முகவராக 30 வயது முதல் 45 வயது முடிய உள்ளவர்கள் தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பிற நிறுவனங்கள், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். 

தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றார்.




Saturday, April 21, 2018

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை

பரோடா வங்கியின் மனிவளத்துறையில் காலியாக உள்ள 424 Senior Relationship Manager பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 424

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Senior Relationship Manager - 375
பணி: Territory Head - 37
பணி: Group Head - 06
பணி: Operations Head - Wealth - 01
பணி: Operations Manager - Wealth - 01
பணி: Services and Control Manager - 01
பணி: Product Manager - Investments - 01
பணி: Compliance Manager (Wealth) - 01
பணி: NRI Wealth Products Manager - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பட்டதாரிகள் மற்றும் எம்பிஏ முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 06.05.2018 தேதியின்படி 23 முதல் 45க்குள் இருக்க வேண்டும். அறிக்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Advertisement-2018-19-Wealth-Management.pdf

செஞ்சி வட்டத்தில் கிராம உதவியாளர் பணி

செஞ்சி வட்டத்தில் காலியாக உள்ள 13 கிராமங்களுக்கு உதவியாளர்களை நேரடி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிட கிராமங்களின் விவரம்: அஞ்சாஞ்சேரி, இல்லோடு, கடம்பூர், கல்லாலிப்பட்டு, கள்ளப்புலியூர், காரியமங்கலம், கொரவனந்தல், மரூர், மேலத்திப்பாக்கம், மேல்கூடலூர் மேல்ஒலக்கூர், தையூர், வீரணாமூர்.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சமாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கக்கூடாது.

வயது வரம்பு: 1-1-2018 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் அருந்ததியர், பழங்குடியினர் 21 வயது நிறைவடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட மற்றும் சீர்மரபினர், முஸ்லிம் வகுப்பினர் 21 வயது நிறைவடைந்தவராகவும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


இதர வகுப்பினர் 21 வயது நிறைவடைந்தவராகவும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். பணி நியமனம் செய்யப்படும் கிராமத்தில் குடியிருக்க வேண்டும்.

11,100-என்னும் ஊதிய விகிதத்தில் ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும். நேர்காணலுக்கு வருபவர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படாது.

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் காலியாக உள்ள கிராமத்தை சேர்ந்தவராகவோ அல்லது 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை உள்ளிட்ட அனைத்து சான்றுகளை நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், அனைத்து சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்களையும் தவறாது இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை கைப்பட எழுதியோ அல்லது தட்டச்சு செய்தோ செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் 19-4-2018 முதல் 25-4-2018 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என செஞ்சி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டெக்னீசியன், உதவியாளர் வேலை

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள 2018-2019-ஆம் ஆண்டிற்கான 179 குரூப்-பிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 179

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

17 STIPENDIARY TRAINEE / TECHNICIAN- B
பணி: Plant Operator - 42
பணி: Electrician - 20
பணி: Electronic Mechanic - 03
பணி: Instrument Mechanic - 11
பணி: Fitter - 31
பணி: Turner - 02
பணி: Machinist - 02
பணி: Welder - 03
பணி: Draughtsman (Mechanical) - 02

தகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

62 STIPENDIARY TRAINEES / SCIENTIFIC ASSISTANT

பணி: Mechanical Engineering - 22
பணி: Electrical Engineering - 12
பணி: Chemical Engineering - 08
பணி: Electronics Engineering - 05
பணி: Instrumentation Engineering - 02
பணி: Computer Science - 01
பணி: Civil Engineering - 02

தகுதி: பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: B.Sc. Physics - 08

பணி: B.Sc. Chemistry - 02

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
\
Manager (HRM), HR Section, 
Kudankulam Nuclear Power Project, 
Kudankulam PO, Radhapuram Taluk, 
Tirunelveli District, Tamilnadu 627 106

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2018

மேலும் முழுமையான விவரங்களை அறிய:

Friday, April 20, 2018

நகங்கள் பராமரிப்பு | NAIL MAINTENANCE




காரணங்கள்:

நகங்கள் ஆரோக்கியமாக வளர அவை உறுதியுடன் இருத்தல் மிக மிக அவசியம். அவ்வாறு இல்லையெனில் மிகவும் கடினம். மேலும் உடையும் தன்மை கொண்ட நகங்கள் கொண்டவர்களின் நிலைமை இன்னும் மோசம். இதற்கு பல காரணங்கள் உள்ளன அதிக நாட்கள் நகபூச்சு உபயோகித்தல், நகங்களை அடிக்கடி தண்ணீரில் நனைத்தல், முதுமை, ஹைபர் அல்லது தைராய்டு பிரச்சினை, தோல் சம்பத்தப்பட்ட நோய்கள், நுரையீரல் பாதிப்பு, தோலழற்சி, இரத்த சோகை, பூஞ்சை தொற்று என அடுக்கி கொண்டே போகலாம்.

செய்ய வேண்டியது:

 1. பயோட்டின் நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், முட்டை, தக்காளி, பாதாம், காலிஃபிளவர், பருப்புகள், ஸ்ட்ராபெர்ரி, சோயாபான்ஸ், பால் போன்ற உணவுகளை உண்ண வேண்டும். தேவைபட்டால் உங்கள் மருத்துவரைப கலந்தாலோசித்து பிறகு பயோட்டின் உணவுகளை உண்ணலாம். 

2. பயோட்டின் நிறைந்த உணவுகள் மட்டும் அல்லது ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளான மீன், பால் பொருட்கள், இறைச்சி, விதைகள் மற்றும் கொட்டைகள், கீரை மற்றும் காய்கறிகள் என ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். 

3. தினமும் வாசலின் கொண்டு நகங்களை மசாஜ் செய்யுங்கள்.

4. தினமும் உடற்பயிற்ச்சி செய்யுங்கள், இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து நகங்கள் எப்பொழுதும் புது பொலிவுடன் இருக்கும். 

5. குறிப்பிட்ட இடைவேளையில் நகங்களை வெட்டி சுத்தம் செய்யுங்கள்.

6. சிறந்த தயாரிப்பு மற்றும் தரமான நக பூச்சுகளை பயன்படுத்துங்கள்.

7. நகங்களை சூரிய ஒளியில் சிறிது நேரம் காட்டுங்கள் தன்னால் வைட்டமின் டி நகங்களுக்கு எளிதாக கிடைக்கும். 

8. நிறைய தண்ணீர் குடியுங்கள். 

9. ஃக்யுடிசெல்சை வெட்டி எடுக்காமல் உள்ள தள்ளி விடுவது நோய் தொற்றை குறைக்கும். 

10. ஃக்யுடிசெல்சை ஈரப்பதத்துடன் வைத்திருக்க அதற்கான கிரீம் உபயோக படுத்துங்கள். 

11. நகங்களை மேல் பகுதியை தேய்த்து சுத்தமாக வையுங்கள், இதனால் நகம் உடைவதை தடுக்கலாம். 

12. வெளியில் செல்லும் போது, அதிக நேரம் நீரை கையாளும் பொழுது, ரசாயன பொருட்களை தொடும் பொழுது கையுறைகளை பயன்படுத்துங்கள்.

செய்யக்கூடாதவை:

1. அதிக நேரம் நீரை கையாளுதல் மற்றும் ரசாயன பொருட்களை கையாளுதல் ஆகியவற்றை தவிர்க்கவும். 

2. அசிட்டோன் மற்றும் பார்மால்டிஹைடு போன்ற ரசாயனம் கொண்ட நக பூச்சுகளை தவிருங்கள். 

3. செயற்கையான நகங்கள் உபயோகிப்பதை தவிருங்கள். 

4. ஆல்கஹால் கொண்ட ஹேண்ட் சானிடைசர் நகங்களின் ஈரப்பதத்தை எடுத்துவிடும் எனவே அவற்றை தவிருங்கள். 

5. நக பூச்சு நீக்கிகளை அதிகமாக உபயோகபடுத்த வேண்டாம் . 

6. கடைசியாக, நகங்களை கடிப்பதை முற்றிலுமாக விட்டு விடுங்கள், இது உங்கள் நகங்களுக்கு மட்டும் அல்ல உடலுக்கும் தீங்கானது.


'அவென்சர் வார்' -ஸ்பெசல் லேப்டாப்

விரைவில் வெளியாகவுள்ள 'அவென்சர் இன்பைனிடி வார்' என்ற திரைப்படத்தின் கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டு, மார்வெல் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து 3 ஸ்பெசல் எடிசன் லேப்டாப்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ஏசர்(Acer). 

கேப்டன் அமெரிக்கா வகை ஆஸ்பையர்6 லேப்டாப்பின் விலை ரூ63,999. தானஸ் வகை நிட்ரோ5 லேப்டாப்பின் விலை ரூ80,999 மற்றும் அயர்ன் மேன் வகை ஸ்விட் 3 லேப்டாப்பின் விலை ரூ79,999 ஆகும்.

இந்த 3 வகை லேப்டாப்களும் குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஏசர் டீலர் கடைகளிலும் ஏப்ரல் 20 முதல் கிடைக்கும். ஏப்ரல் 23 முதல் ஆன்லைன் சந்தையில் அமேசானில் மட்டும் கிடைக்கும்.




ஆஸ்பையர்6 - கேப்டன் அமெரிக்கா லேப்டாப்பில் சிறப்பம்சமாக, கேப்டன் அமெரிக்காவின் ஐகானான பென்டகிராம் அலுமினிய வெளிப்புறத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் இன்டெல் 8ம் தலைமுறை கோர் i5 8250U சி.பி.யூ உடன் 8GB DDR4 ரேம், 1TB ஹார்டு டிரைவ், நிவ்டியா ஜீபோர்ஸ் MX150 GPU மற்றும் எச்.டி வெப்கேமரா போன்ற வசதிகள் உள்ளன. டால்பி ஆடியோ வழங்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வைபை 802.11ac உடன் 2×2MIMO ஆண்டானா மற்றும் ஜிகாபிட் லேன் வசதியும் இந்த லேப்டாப்பில் உள்ளது. 15.6 இன்ச் முழு எச்.டி ஐ.பி.எஸ் திரை, யூ.எஸ்.பி டைப்-சி, 3.0, 2.0 போர்ட்களும் உள்ளன.

அடுத்ததாக, நைட்ரோ 5- தானஸ் லேப்டாப்பை பொறுத்தவரை சிறப்பம்சமாக, தானஸ் குறியீடு ஐ.எம்.ஆர் தொழில்நுட்பம் மூலம் செம்மையான வெளிப்புறத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் இன்டெல் 7ம் தலைமுறை கோர் i5 7300HQ சி.பி.யூ உடன்32GB வரை பயனர் மேம்படுத்தக்கூடிய 8GB DDR4 ரேம், 128GB SDD ப்ளஸ் உள்ள 1TB ஹார்டு டிரைவ், 4GB GDDR5 வி-ரேம் உள்ள நிவ்டியா ஜீபோர்ஸ் GTX 1050 போன்ற வசதிகள் உள்ளன. 15.6 இன்ச் முழு எச்.டி ஐ.பி.எஸ் திரை மற்றும் ஏசர்ஸ் கூல் பூஸ்ட் தொழில்நுட்பம் உள்ள இரட்டை எக்ஸாஸ்ட் பேன் உள்ளது.

கடைசியாக, ஸ்விட் 3 அயர்ன் மேன் லேப்டாப் வெறும் 1.6கிலோ எடையுடன் 17.95 மில்லிமீட்டர் அடர்த்தி கொண்டது. சிவப்பு நிறத்திலான இந்த லேப்டாப்பில், அயர்ன் மேனின் சிக்நேச்சர்ஆர்க் ரியேக்கடரும், பவர் ஆன் செய்திருக்கும் போது ஒளிரும் தன்மையும் கொண்டுள்ளது. இதில் இன்டெல் கோர் i5 8250U சி.பி.யூ உடன் 8GB ரேம், 256GB SSD,

கிராப்பிக்ஸ் மற்றும் 10மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரி போன்ற வசதிகள் உள்ளன. வைபை 802.11ac , 14 இன்ச் முழு எச்.டி ஐ.பி.எஸ் திரை, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வசதிகளும் உள்ளன.


இவற்றை வெளியிட்டு ஏசர் இந்தியாவின் சி.எம்.ஓ சந்திரஹாஸ் பனிகிரகி பேசுகையில், இந்த டிஸ்னி கதாபாத்திரங்கள் மூலம் மார்வெல் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுடன் மேலும் நெருக்கமாக்குகிறது. புதிய அனுபவம், பொழுதுபோக்கு மற்றும் அதீத கேமிங் அனுபவம் வேண்டுமென்பவர்கள், அவென்சர் மற்றும் மார்வெல் யுனிவெர்ஸ் ரசிகர்களை இது கவரும் என்றார்.


டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...