Showing posts with label தினம் ஒரு தகவல். Show all posts
Showing posts with label தினம் ஒரு தகவல். Show all posts

Sunday, November 23, 2025

தமிழ் மணி - Antique Tamil Bell

 

தமிழ் மணி என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி. இது மிசினரி வில்லியம் சேலேன்சோ என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்திவந்தனர்.


இந்த மணி 13 செமீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. 


மேலும் மாவோரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையலாம்.


இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய கண்காட்சியகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

Monday, November 17, 2025

கார்த்திகை மாதத்தின் முக்கிய சிறப்புகள்

🔥கார்த்திகை மாதம் – தமிழரின் ஒளி நிரம்பிய பாரம்பரியம்!

தமிழ் ஆண்டின் எட்டாவது மாதமான கார்த்திகை,
ஒளி, ஆன்மிகம், அன்பு மற்றும் தமிழர் பண்பாட்டின் மிகச் சிறப்பான காலம்.

இந்த மாதம் முழுவதும் தீ விளக்கு, திருவிழா, அறிவு — இவை ஒன்றோடொன்று கலந்திருக்கின்றன.

🌟 கார்த்திகை மாதத்தின் 7 முக்கிய சிறப்புகள்

திருக்கார்த்திகை தீபம்

இருளை அகற்றி ஒளியை வரவேற்கும் மிகப் பழமையான தமிழ் திருவிழா.
வீட்டின் முன், குளம், வாசல், தெரு—எங்கும் மண் விளக்குகள் ஏற்றப்படும்.

திருவண்ணாமலை மகாதீபம்

அருணாசல மலையின் உச்சியில் ஏற்றப்படும் “மகாஜோதி” —
சிவனின் அக்னி-தத்துவத்தை குறிக்கும் உலகப் புகழ்பெற்ற பாரம்பரியம்.

 முருகனின் சக்தி மிகும் மாதம்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த முருகப் பெருமானின் திருநாள்.
கந்த சஷ்டி அனுபவத்திற்குப் பின் வரும் ஆன்மீக நிறைவு.

விண்மீன் தொடர்பான தமிழர் அறிவு
கார்த்திகை நக்ஷத்திரம் = பிளையட்ஸ் (அழகிய தீ விண்மீன் குழு).
பழந்தமிழர்கள் நட்சத்திரங்களை வைத்து காலமும் வேளாண்மையும் கணித்தார்கள்.

வீடு, மனம், வாழ்க்கை – ஒளியின் சுத்தம்
இந்த மாதத்தில் விளக்கு ஏற்றுவது

👉 வீட்டு நலன்
👉 கிருமி நாசனம்
👉 மன அமைதி

என அனைத்தையும் குறிக்கும் ஒரு தமிழ்ச் சின்னம்.

பெண்களின் கார்த்திகை நோன்பு

குடும்ப நலன், செல்வம், நீண்ட ஆயுள், ஒற்றுமை
என பல நன்மைகளை வேண்டி பெண்கள் வழிபடும் நாள்.

உணவுப் பாரம்பரியம் – இனிப்புகள் & அன்பு

கார்த்திகை அப்பம்
பொரி உருண்டை
எல்லாத் தரப்பு மக்களும் சுவைப்பதற்கான மரபு உணவுகள்.


Sunday, July 15, 2018

முதல் ஆட்டோ பவுன்சிங் ஃப்ளாஷ். கேமரா கேட்ஜெட் | WORLD'S FIRST AUTO BOUNCING FLASH GADGET FROM CANON


Canon DSLR

இந்த ஃப்ளாஷின் தலைப் பகுதி ஆட்டோ முறையில் மேலும் கீழுமாக 120° டிகிரி அளவிற்கு இயங்கவும் மற்றும் இடது வலதாக 180° டிகிரி அளவிற்குச் சுழலும் திறன் கொண்டது. உயர் செயல் திறன் கொண்ட CPU இதில் பொருத்தப்பட்டுள்ளது.


DSLR கேமரா தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான கேனான் நிறுவனம் தன் புதிய படைப்பான உலகின் முதல் ஆட்டோ பௌன்ஸிங் ஸ்பீடுலைட் 470 எஸ் ஃப்ளாஷை அறிமுகப்படுத்தியுள்ளது. புதியதாகப் புகைப்படங்கள் எடுக்கப் பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கும், ஆரம்ப நிலை புகைப்படக் கலைஞர்களுக்கும் ஏற்ற வகையில் செயற்கை நுண்ணறிவு (Auto Intelligent) பௌன்ஸிங் முறையில் வெளியாகியுள்ளது கேனான் ஸ்பீடுலைட் 470 எஸ் ஃப்ளாஷ். இதுவே உலகின் முதல் ஆட்டோ பௌன்ஸிங் பிளாஷ்.


இதற்கு முன்னதாக வெளிவந்த கேனான் ஸ்பீடுலைட் 430 EX III-RT, ஸ்பீடுலைட் 580 ex ii, marrum ஸ்பீடுலைட் 600 EX II-RT, இவை அனைத்தும் மேனுவல் (manual) மற்றும் E-TTL முறைகளைக் கொண்டது. இந்த வகை ஃப்ளாஷ்களை தலைப் பகுதியை நம் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் மேலும் கீழுமாக திருப்பிக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த ஸ்பீடுலைட் 470 எஸ் ஃபிளாஷ் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது. தானாகவே சுவரில் அல்லது மேற் கூரையுடனான தூரத்தைக் கணக்கிட்டு அதன் தானியங்கி திறன் மூலம் ஃப்ளாஷ் செயல்படுகிறது. ஸ்பீடுலைட் 470 எஸ் ஃபிளாஷ் முழுக்க முழுக்க இண்டோர் போட்டோ ஷூட்டுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது.


இதன் முக்கிய அம்சங்கள்:

இந்த ஃப்ளாஷின் தலைப் பகுதி ஆட்டோ முறையில் மேலும் கீழுமாக 120° டிகிரி அளவிற்கு இயங்கவும் மற்றும் இடது வலதாக 180° டிகிரி அளவிற்குச் சுழலும் திறன் கொண்டது. உயர் செயல் திறன் கொண்ட CPU இதில் பொருத்தப்பட்டுள்ளது. CPU வேகமாக, தூரத்தின் அளவுகளைக் கணக்கிட்டு செயல்படுகிறது.

முழுமையாகத் தானியங்கி (AI.B Full-auto) மற்றும் அரை தானியங்கி (AI.B Semi-auto) பவுன்ஸ் முறைகளிலும் செயல்படவும், முன்னால் இருக்கும் பொருளுக்கு ஏற்றார் போல் பவுன்ஸ் கோணத்தை கணக்கிட்டுச் செயல்படும் விதத்திலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னாள் இருந்த ஃப்ளாஷ்களை விட முழுவதும் தானியங்கி முறையில் ஜூம் செட்டிங் செயல்படுகிறது. ஜூம் முறையில் ஓளி செலுத்தும் வரம்பு 24-105mm2. இந்தச் செயல்முறை ஃப்ரேம்களின் நான்கு மூலைகளிலும் ஒளியைச் செலுத்துவதற்கு உதவுகிறது. வைட் ஆங்கிள் லென்ஸ் பயன்படுத்தினாலும் கேமராவுக்கு முன்னால் இல்லாத பொருட்களின் மீதும் இதன் வெளிச்சம் பரவலாக கிடைக்கிறது.

மற்ற ஃப்ளாஷ்களை காட்டிலும் அதிகப்படியான வெளிச்சத்தைச் செலுத்தக்கூடிய திறன் கொண்டது. Gn 47 (ஐஎஸ்ஓ 100 / மீட்டர்) ஒளியின் செயல் திறன் மிகுந்த தாராளமான மற்றும் மென்மையான வெளிச்சத்தை வழங்குகிறது.




சமீபத்திய தொழில்நுட்பம் பெரும்பாலும் கொஞ்சம் பழைய மாடல்களில் பொருத்துவதில் சில சிக்கல்களோடு வருகிறது, மேலும் EOS ரெபெல் T5 / 1200D, EOS ரெபெல் SL1 / 100D, EOS ரைபிள் T5i / 700D, EOS 70D, EOS 6D, EOS 5D Mk III மற்றும் EOS-1D X உட்பட 2014-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கப்பட்ட கேமராக்களைப் பயன்படுத்தும்போது தானாக AI தானியங்கி முறையில் கிடைக்காது.

புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவந்த EOS ரெபேல் T6 / 1300D மற்றும் mirrorless EOS M3, EOS M5 மற்றும் EOS M6 கேமராக்களில் புகைப்படங்கள் எடுக்கும்போது நீங்கள் அரை தானியங்கி (AI.B Semi-auto) முறையில் AI பவுன்ஸ் பயன்படுத்த முடியும்.

Thursday, July 5, 2018

பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச பயிற்சி | FREE TNPSC GROUP EXAM COACHING SPONSORED BY PERIYAR IAS ACADEMY

பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் ஜூலை 8, 14 ஆகிய தேதிகளில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெறவுள்ளது.

தொடக்கப் பள்ளி, இடைநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வரும் அக்டோபர் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இதற்கான இலவசப் பயிற்சி முகாம், சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் செயல்பட்டு வரும் பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் ஜூலை 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2: தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர், சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான 1,600-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பட்டப்படிப்பை அடிப்படையாகக் கொண்ட குரூப் 2 தேர்வினை நடத்தவுள்ளது.

அதற்கான இலவசக் கருத்தரங்கம், பயிற்சி வகுப்பு ஜூலை 14 -ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த அகாதெமியில் நடைபெறவுள்ளது.

இந்த இலவச கருத்தரங்கங்களில் அந்தந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள், தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவுள்ளனர். மேலும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான எளிய வழிமுறைகளை விவரிக்கவுள்ளனர்.

இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 044-2661 8056, 99406 38537 ஆகிய தொலைபேசி எண்களிலும், பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாம் என அந்த அகாதெமியின் ஒருங்கிணைப்பாளர் கா.அமுதரசன் தெரிவித்துள்ளார்.

Monday, July 2, 2018

ஜாகுவார் ஐ-பேஸ் ஸ்பெஷல் | JAGUAR I-PACE SPECIAL REVIEW

ஜாகுவாரின் முதல் எலெக்ட்ரிக் 5 சீட்டர் ஸ்போர்ட்ஸ் காரான i-பேஸ் பற்றி பார்க்கலாம்.


 JAGUAR I-PACE


நீட் அண்டு ரிச்சாக இருக்கிறது டேஷ்போர்டு. ஆனால், எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் கொட்டிக் கிடக்கிறது. கிளாஸ் ரூஃபில்கூட ஒரு டெக்னாலஜி. இன்ஃப்ராரெட் கதிர்களை அப்ஸார்ப் செய்வதால், வெயிலில்கூட சில் பயணம் கிடைக்குமாம்.

எனவே, சன் ஷேடு தேவையில்லை. விண்ட்ஷீல்டில் ஹெட்-அப் டிஸ்ப்ளே இருக்கிறது. நீங்கள் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையோ, ரிவர்ஸ் கேமராவையோ தனியாகப் பார்க்க வேண்டியதில்லை.

எல்லாமே விண்ட்ஷீல்டில் வந்துவிடும். 656 லிட்டர் பூட் ஸ்பேஸில், ஸ்பேர் வீலுக்கான புரொவிஷன் இல்லாததற்கு சில தொழிற்நுட்ப காரணங்கள் இருக்கலாம்.

இதில் EV நேவிகேஷன் என்றொரு வசதி உண்டு. டிராஃபிக் டேட்டாக்களை அப்டேட் செய்து, உங்கள் நேவிகேஷனில் தருவதுதான் இந்த சிஸ்டம். நீங்கள் போகும் சாலையில் கிளைமேட் எப்படி இருக்கிறது, எந்தச் சாலையில் டிராஃபிக் அதிகம்-குறைவு, உங்கள் டெஸ்டினேஷன் போகும் வரை பேட்டரி சார்ஜ் தாங்குமா, சார்ஜ் குறைவாக இருக்கும் பட்சத்தில் சார்ஜிங் ஸ்டேஷன்களை நேவிகேட் செய்து அந்தப் பக்கம் காரைத் திருப்பச் சொல்வது என்று மல்ட்டி டாஸ்க்கிங் வேலைகளைச் செய்வதுதான் இந்த EV நேவிகேஷன்.

டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஸ்டார்ட் பட்டனைத் தட்டி, ‘Ready’ ஐகான் வரும் வரை காத்திருக்க வேண்டும். ‘D’ மோடில் செலெக்ட் செய்து, ஆக்ஸிலரேட்டரை மிதித்தால்... நாம் மூச்சுவிடும் சத்தம்கூடக் கேட்கிறது. அந்தளவு அமைதியோ அமைதி. 

ஜாகுவார் என்பதைத் தாண்டி, எலெக்ட்ரிக் மோட்டார் என்பதுதான் இதற்குக் காரணம். இதில் 90KWH லித்தியம் ஐயன் பேட்டரி பேக், கேபின் ஃப்ளோருக்குக் கீழே இருக்கிறது. இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள். 

ஒவ்வொன்றும் செம லைட் வெயிட். 80 கிலோதான். 400 bhp பவரும், 69.6 kgm டார்க்கும் இரண்டிலும் சேர்ந்து அவுட்புட் கிடைக்கிறது. 

4.8 விநாடிகளில் 0-100 கி.மீயைத் தொட்டு புகையே இல்லாமல் பறக்கிறது.

4 வீல் டிரைவ் சிஸ்டம். பிளைண்ட் கார்னரிங்கில் செம கிரிப். எப்படிப்பட்ட வளைவிலும் திரும்பலாம். 

எலெக்ட்ரிக் கார் என்றால், ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாமலா? பிரேக் பிடிக்கப் பிடிக்க, அதன் ஆற்றல் பேட்டரியில் சேமிக்கப்படுவதுதான் RGBS. 

அதிலும் 2 லெவலைக் கொடுத்து அசத்திவிட்டது ஜாகுவார். ‘High’ ஆப்ஷனில், இன்ஜின் பிரேக்கிங்கே செம ஸ்ட்ராங்காக இருப்பதால், சில நேரங்களில் பிரேக்கில் கால் வைக்க வேண்டிய தேவையே ஏற்படவில்லை - சில டிராஃபிக் சிக்னல்கள் தவிர்த்து. எனவே, ஹை ஸ்பீடில்கூட பேட்டரியில் எனர்ஜி சேமிக்கப்படுகிறது.




கிட்டத்தட்ட 50 செ.மீ ஆழம் தண்ணீர் வரை போகுமாம் i-பேஸ். ஜாகுவாரின் ‘ஆல் சர்ஃபேஸ் புரோக்ரஸ் கன்ட்ரோல்’ தொழில்நுட்பம், இந்த த்ராட்டிலிங்கை தண்ணீருடன் மிக்ஸ் ஆகாமல் பார்த்துக்கொள்ளும்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஸ்டீயரிங் கன்ட்ரோல் மட்டும்தான்.

Tuesday, June 19, 2018

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழிலும் எழுதலாம்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (சிடிஇடி) தமிழ் உள்பட 20 இந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இத்தேர்தவை எழுத முடியும். தமிழ் உள்பட 17 மொழிகளில் தேர்வு நடத்தப்படத்தப்பட மாட்டாது என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

கடும் எதிர்ப்பு: 

மத்திய அரசுப் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் தொடக்கக் கல்வி, உயர் நிலைக் கல்வி ஆசிரியர் பணிக்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

இந்நிலையில், ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில்தான் இத்தேர்வை எழுத வேண்டும் என்ற சிபிஎஸ்இ அறிவிப்புக்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

முடிவு மாற்றம்

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சிபிஎஸ்இ-யின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, மத்திய அமைச்சர்  இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஏற்கெனவே நடத்தி வந்ததுபோல 20 மொழிகளிலும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டார். 

இதையடுத்து, முன்பு நடத்தியதுபோல ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, வங்க மொழி, காரோ (மேகாலயம், அஸ்ஸாம், திரிபுராவில் பேசப்படும் மொழி), குஜராத்தி, கன்டனம், காசி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிஸோ, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, திபெத்திய மொழி, உருது ஆகிய மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

Monday, June 18, 2018

ஆன்லைனில் கார் இன்ஷூரன்ஸ் வாங்கினால் கிடைக்கும் நன்மைகள் | CHEAP AUTO INSURANCE IN VA | Car insurance comparison quote

ஒரு நல்ல இன்ஷூரன்ஸை எப்படித் தேர்வு செய்வது?

உங்களுடைய தேவையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். புதிதாக கார் வாங்கும்போது நிச்சயம் இரண்டு ஆண்டுகள் பயன்படுத்துவீர்கள். 

அதனால், காரை வாங்கும்போதே இரண்டு ஆண்டுகளுக்கு பம்பர் டு பம்பர் மற்றும் நோ-க்ளெய்ம் போனஸ் தரும் பாலிசியை வாங்குவது நல்லது. 

6 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கினால் 5.55 லட்சம் IDV இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் கார் திருடுபோனாலோ அல்லது விபத்தில் பாதித்தாலோ, சரியான தொகை கிடைக்கும். 

சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் IDV குறைப்பது மூலம் பிரீமியத்தைக் குறைத்து தருவார்கள். அப்படி வாங்கவே கூடாது. க்ளெய்ம் எதுவுமே இல்லை என்றாலும், IDV குறைவாக இருந்தால், காரின் ரீசேல் வேல்யூ குறைந்துவிடும். 

"Return to invoice" எனும் இன்ஷூரன்ஸ் போடுவதன் மூலம், உங்கள் 6 லட்ச ரூபாய் கார் தொலைந்தாலோ, விபத்தில் சிக்கினாலோ 6 லட்சமும் கிடைக்கும். விலை உயர்ந்த கார் வாங்கும்போது இது போன்ற பாலிஸியை கூடவே வாங்க வேண்டும்.

எந்த நிறுவனத்தின் பாலிசியை வாங்குவது என்று குழப்பம் வரும்போது, க்ளெய்ம் கவரேஜை முதலில் பார்க்கவேண்டும். 

இன்ஷூரன்ஸ் பணம் தருவதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறார்கள்; உங்கள் பகுதியில் எத்தனை சர்வீஸ் சென்டர்கள்; அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் யார் கூட்டு வைத்துள்ளார்கள். 

அதில் எத்தனை கேஷ்லெஸ் சர்வீஸ் சென்டர்கள் இருக்கின்றன? என்பதெல்லாம் முக்கியம். கேஷ்லெஸ் சர்வீஸ் சென்டர்கள் இல்லையென்றால், பணம் கொடுத்து காரை சரிசெய்துவிட்டு, தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளும் நிலை வரும். 

எல்லாமே சாதகமாகப் பொருந்திவருகிறது. ஆனால், இரண்டு நிறுவனங்கள் வேறுவேறு விலையில் இன்ஷூரன்ஸ் தருகிறார்கள் என்றால், எந்த நிறுவனம் அதிக க்ளெய்ம் தந்துள்ளார்கள் என்பதைப் பார்த்து வாங்கவேண்டும். விலை எப்போதுமே கடைசியில் பார்க்க வேண்டிய விஷயம்.

இன்ஷூரன்ஸ் வாங்கும்போது ஆட்-ஆன்களை தேர்வு செய்வது அவசியமா?

ஆட்-ஆன்கள் நிறைய உள்ளன. அதில் 6 ஆட்-ஆன்கள் மிக முக்கியமானவை. எல்லோருக்குமே எல்லா ஆட்-ஆன்களும் தேவைப்படாது.

* Zero depreciation

* Personal accident cover

* Invoice Price Protection

* Consumables cover

* Engine Protection Cover

* NCB Protection


இணையத்தில் ஏன் இன்ஷூரன்ஸ் வாங்க வேண்டும்?

கார் வாங்குகிறோம் என்றால், இன்ஷூரன்ஸ் கூடவே தந்துவிடுவார்கள் என்பது மக்களிடையே உள்ள பொதுவான மனநிலை. இன்ஷூரன்ஸ் பற்றிய விவரம் கேட்பவர்கள்கூட பம்பர் டு பம்பர் இன்ஷூரன்ஸ் கொடுத்தால் போதும்; எதையும் கவனிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.

  • "Third party" மட்டுமா "Comprehensive" உள்ளதா? 
  • "IDV "எவ்வளவு? 
  • டிப்ரிஸியேஷன் வேல்யூ எவ்வளவு? 
  • ஆட்-ஆன் சேர்த்துள்ளார்களா? 
  • நோ க்ளெய்ம் போனஸ் தருவார்களா? 
  • ஏஜென்ட் கமிஷன் எவ்வளவு? 

போன்ற கேள்விகளைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது இல்லை. இன்ஷூரன்ஸ் பாலிசிகளை இரண்டு நிமிடங்களில் ஆன்லைனில் வாங்க முடியும் என்றாலும் இணையத்தை அதிகம் பயன்படுத்தும் தலைமுறையான நாம்கூட இன்ஷூரன்ஸ் விஷயத்தில் பல சமயம் கோட்டை விட்டுவிடுகிறோம்.

புதிய கார் வாங்கும்போது முதல் 2 ஆண்டுகளுக்கு நிச்சயம் ஜீரோ டிப்ரிசியேஷன் தேவை. அதன் பிறகு உங்கள் கிளெய்மை பொருத்து நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 

டாக்ஸி ஓட்டுவது, வாடகை விடுவது போன்றவற்றிற்கு கார் வாங்கும்போது பெர்சனல் ஆக்ஸிடன்ட் கவர் தேவை. 

விபத்தின்போது டிரைவர் மற்றும் காரில் பயணிப்பவரின் மருத்துவ செலவுகளை இன்ஷூரன்ஸ் நிறுவனம் பார்த்துக் கொள்ளும்.

விலையுயர்ந்த கார்களுக்கு "Invoice Price Protection" தேவை. இன்ஜின் ப்ரொடெக்‌ஷன் கவர், அதிக மழை பெய்யும் இடங்களில் நிச்சயம் தேவை. 

பம்பர் டூ பம்பர் இன்ஸூரன்ஸாக இருந்தாலும்கூட தண்ணீரால் இன்ஜின் சேதமானால், அதற்கு பணம் கிடைக்காது.


ஏன் இணையத்தில்  வாங்க வேண்டும்?

உங்கள் காரின் பராமரிப்பு, நீங்கள் வசிக்கும் இடம், நீங்கள் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கும் தேதி, காரின் வயது, எதிர்பார்க்கும் IDV, போன்ற பல விஷயங்களை வைத்து உங்களுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் முடிவு செய்யப்படும். 

ஒரு ஏஜென்டிடம் வாங்குகிறோம் என்றால், அவரிடம் இருக்கும் 4 பாலிசிகளில் ஒன்றைத்தான் தேர்வு செய்யவேண்டும். 

ஆனால், இணையத்தில் எல்லா நிறுவனங்களின் பாலிசிகளும் அதன் சாதகபாதகங்களும் காட்டப்படும் என்பதால், நமக்குத் தேவையான இன்ஸூரன்ஸை நாமே தேர்ந்தெடுக்கலாம். 

வெளியில் கிடைப்பதைவிட 50 சதவிகிதம்வரை விலை குறைவான பாலிசிகள்கூடக் கிடைக்கும். 

பெட்ரோல் பங்கில் கொடுப்பதுபோல புது இன்ஷூரன்ஸ் வாங்கும்போது 10 சதவிகித கமிஷன் தொகை கொடுக்கத் தேவையில்லை. 

உங்களுக்குத் தேவையான பாலிஸியையும் ஆட்-ஆன்களையும் நீங்களே பார்த்து தேர்வு செய்துகொள்ளலாம்.


ஆன்லைனில் வாங்கினால் தேவைகளுக்கு ஏற்ப இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?

உங்கள் தேவைக்கு ஏற்றதுபோல இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகளிடம் வாங்கும்போதும்கூட கிடைக்கும். 

ஆனால், ஆன்லைனில் வாங்கும்போது சில இன்ஸூரன்ஸின் விலை உங்களுக்காக மாற்றியமைக்கப்படும்.

உதாரணத்துக்கு, தமிழகத்தில் ஹூண்டாய், ஹோண்டா, மஹிந்திரா போன்ற கார் வைத்திருப்பவர்கள் குறைவாக க்ளெய்ம் செய்கிறார்கள். 

டொயோட்டா கார் வைத்திருப்பவர்கள் அதிகமாக க்ளெய்ம் செய்கிறார்கள். உத்திரபிரதேசத்தில் இது தலைகீழாக உள்ளது. 

அதனால், தமிழ்நாட்டில் ஹோண்டா கார்கள் வைத்திருப்பவர்களுக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம் விலை மற்ற மாநிலத்தைவிடக் குறைவாக இருக்கும். 

இதுபோல வசிக்கும் இடம்; என்ன கார் வைத்துள்ளோம்; நொ-க்ளெய்ம் போனஸ்; டீசலா, பெட்ரோலா, சிஎன்ஜியா; காரின் வயது; காரின் பாடி டைப்; இன்ஷூரன்ஸ் காலாவதியாவதற்கு எத்தனை நாள்களுக்கு முன்பு புதுப்பிக்கிறீர்கள் என்று ஏழு அளவீடுகள் உள்ளன. 

இதை வைத்து இன்ஷூரன்ஸ் பிரீமியம் குறையும். ஆனால், நேரடியான இன்ஷூரன்ஸ் வாங்கினால், காரை மோசமாகப் பராமரிப்பவருக்கும் சரி காரை நன்றாகப் பராமரிப்பவருக்கும் சரி, ஒரே தொகைதான். 

நேரடியாக வாங்கும்போது IDV குறைவாக உள்ளது என்றால், ஏஜென்டுடன் பேரம் பேச வேண்டும். ஆன்லைனில் அதெல்லாம் தேவையில்லை. நீங்கள் கேட்கும் IDV-யில் எத்தனை நிறுவனங்கள் எவ்வளவு பிரீமியத்தில் தருகின்றன என்று பார்த்து நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்.

Saturday, June 16, 2018

விண்டோஸ்-இல் தேவையற்ற தேவையற்ற ஃபைல்களை நீக்குவது எப்படி | How To Remove Temporary Files On WIndows

விண்டோஸ்-இல் தேவையற்ற தேவையற்ற ஃபைல்களை நீக்கி மெமரியை அதிகரிப்பது எப்படி?


விண்டோஸ் 10 ஃபால் க்ரியேட்டர்கள் அப்டேட் மற்றும் அதற்கும் புதிய பதிப்புகளில்,

1 - செட்டிங்ஸ் சென்று சிஸ்டம் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

2 - இடது புற மெனுவில் காணப்படும் ஸ்டோரேஜ் அம்சத்தை க்ளிக் செய்யவும். இதே பகுதியில் இருக்கும் மெமரியை எவ்வாறு பெற வேண்டும் (Change how we free up space) என கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

3 - இந்த ஆப்ஷனில், முந்தைய விண்டோஸ் 10 இன்ஸ்டாலேஷனை அழிக்கக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி க்ளீன் நௌ (Clean now) பட்டனை க்ளிக் செய்யவும்.

4 - விண்டோஸ் அனைத்து ஃபைல்களையும் சேகரித்து அவற்றை அழிக்கும் வரை காத்திருக்கவும். இந்த பணி நிறைவுற்றதும், விண்டோஸ் சார்பில் திரையில் தகவல் காண்பிக்கப்படும்.

5 - இயங்குதளத்தின் புதிய அம்சமாக ஸ்டோரேஜ் சென்ஸ் இருக்கிறது, எனினும் இது தானாகவே டிசேபிள் செய்யப்பட்டு இருக்கும்.

இந்த பகுதியில் இது என்ன செய்யும் என்றும், இதை எவ்வாறு உங்களுக்கு சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.


முந்தைய பதிப்புகளில் இதை எவ்வாறு செய்யவேண்டும்? 

ஃபைல் எக்ஸ்ப்ளோரர் மூலம் விண்டோஸ் ஃபைல்களை அழிக்க முயற்சித்தால், விண்டோஸ் இயங்குதளம் அதை நிராகரித்து விடும்.

இதனை செய்ய செட்டிங்-களில் சில வேலைகளை செய்ய வேண்டும். 

1 - முதலில் ஸ்டார்ட் சென்று டிஸ்க் க்ளீன்-அப் (Disk Cleanup) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். 

2 - டிஸ்க் க்ளீன்-அப் அம்சத்தில் உங்களது சிஸ்டம் டிரைவை தேர்வு செய்ய வேண்டும். இந்த டூல் உங்களது டிரைவில் உள்ள தேவையற்ற ஃபைல்கள் மற்றும் பழைய கேச்சி டேட்டாவை ஸ்கேன் செய்யும், இதில் விண்டோஸ் ஃபைல்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது.

3- டிரைவில் ஸ்கேன் செய்யப்பட்டதில் வெவ்வேறு தகவல்களை பார்க்க முடியும், இதில் ரிசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் கேச்சி என வெவ்வேறு தகல்களை பார்க்க முடியும்.

4- இதில் டெம்ப்பரரி விண்டோஸ் இன்ஸ்டாலேஷன் ஃபைல்ஸ் (Temporary Windows installation files) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். 

5 - நீங்கள் அழிக்க விரும்பும் தகவல்கள் அனைத்தையும் க்ளிக் செய்து, அவற்றை உறுதி செய்ய OK பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து வரும் ப்ராம்ப்ட்களை உறுதி செய்யவும்.



Thursday, June 14, 2018

கார் டெலிவரி எடுக்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்

டெலிவரி எடுக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!



காரைப் பதிவு செய்வதற்கு முன்பு, உங்களுக்காக அலாட் செய்யப்பட்ட கார் எதுவென்று முன்கூட்டியே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ‘அடுத்த ஸ்லாட்டில் உங்கள் கார் வருகிறது’ என்று சொன்னால், தாராளமாகக் காத்திருக்கலாம். தப்பில்லை. ஏனென்றால், ஃப்ரெஷ் லோடு இறங்கும்போது, புது மாடல் கிடைக்க வாய்ப்புண்டு. 

அதேபோல், எப்போதுமே டெலிவரி எடுக்கும்போது, பகல் நேரத்தில் எடுப்பதுதான் பெஸ்ட். காரை நன்றாக நோட்டம் விட்டு, சிராய்ப்புகள் ஏதும் இருக்கின்றனவா, ஸ்டிக்கரிங் வேலைப்பாடுகள் சரியாக உள்ளதா, நீங்கள் கேட்ட ஆக்சஸரீஸ் அனைத்தும் சரியாகப் பொருத்தியுள்ளார்களா என்பதையெல்லாம் பகலிலே செக் செய்தால்தான் சரியாக இருக்கும். 

சாயங்காலம் முடிந்து இரவு நேரத்தில் கார் டெலிவரி எடுக்கும்போது, சில விஷயங்களைக் கவனிக்க முடியாது. டயர்கள், பானெட் ஹூட், கண்ணாடிகள், பாடி பேனல்கள் போன்றவற்றை இரவு நேரங்களில் பார்ப்பதில் பெரிய வித்தியாசம் இருக்காது. அதேபோல், பகல் நேரத்தில் ஹெட்லைட் சரியாக எரிகிறதா, வைப்பர் வேலை செய்கிறதா, பூட் லைட் எரிகிறதா, பிரேக் பிடித்தால் பிரேக் லைட் எரிகிறதா என்பதையும் செக் செய்ய வேண்டும். ஏதாவது பாகங்கள் ரிப்பேர் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதி செய்யவும். 

சில கார்களில் டேஷ்போர்டுக்கும் - உள்ளே பயன்படுத்தப்பட்டிருக்கும் ஃபேப்ரிக்ஸுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். சரியாகப் பொருந்தாமலும் இருக்கலாம். அது தயாரிப்பாளரின் குறைபாடு. அதையும் விடாதீர்கள். 

டெலிவரி எடுக்கும்போது ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பித் தரச் சொல்லி சிலர் கேட்பார்கள். அது வேண்டாமே! ஹேட்ச்பேக் கார்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் நிரப்பியே தருவார்கள். 

கார் ஷோரூமை விட்டுப் போனதும், கடமையை முடித்துவிட்டு அக்கடாவென்று நிம்மதியாக இருப்பார்கள் சில சேல்ஸ்மேன்கள். அடுத்து நமக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் அவரது நடவடிக்கை இருக்கும். உங்களைப்போல் நூறுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை அவர்கள் சந்திக்க வேண்டும் என்பதால், அவர்களின் சூழலையும் நாம் குறை சொல்ல முடியாது. எனவே, ‘‘எப்போ வேணாலும் கார் சம்பந்தமான சந்தேகத்துக்கு உங்களுக்குத்தான் போன் பண்ணுவேன்’’ என்று சேல்ஸ்மேனிடம் உறுதி வாங்கிக்கொள்ளுங்கள்.


இந்த இரண்டும்தான் மிக முக்கியம்!

சில டீலர்களில் கார்/பைக்குகளை யார்டில் அல்லது ஃபேக்டரியில் இருந்து லோடு அடிக்கும்போது டேமேஜ் ஆக வாய்ப்புண்டு. அவற்றை சர்வீஸ் சென்டரில் ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என்று விட்டுவிடுவார்கள். 

இது தவிர, ரிஜிஸ்ட்ரேஷன் கொண்டு போகும்போதும் இம்மாதிரி விபத்துகள் நடக்க வாய்ப்புண்டு. அதற்காகத்தான் டெலிவரி எடுக்கும்போது, இந்த இரண்டு முக்கியமான விஷயங்களை மறக்காதீர்கள்.

ப்ரீ ரெஜிஸ்ட்ரேஷன் இன்ஸ்பெக் ஷன் :

இது காரை புக் செய்யும்போதே செய்ய வேண்டியது. ஒரு கார் உங்கள் பெயரில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கு முன்பு, யார்டிலிருந்து கார் இறங்கும்போது கார்களுக்கு டேமேஜ் ஏற்பட வாய்ப்புண்டு.

ரிஜிஸ்ட்ரேஷனுக்குப் பிறகும் டேமேஜ்கள் நடக்காது என்று சொல்ல முடியாது. ரிஜிஸ்ட்ரேஷனுக்குப் பிறகு ஏற்படும் பாதிப்புகளுக்கு சர்வீஸ் சென்டர்தான் பொறுப்பு. அதையெல்லாம் சர்வீஸ் மேலாளரிடம் தெளிவாகப் பேசி, கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொள்ளுங்கள். 

முடிந்தவரை ரிஜிஸ்ட்ரேஷன் நாளன்று உங்கள் பக்கமிருந்து யாராவது உடன் சென்றால் நல்லது. ‘ஆர்டிஓ ஆபீஸர் லீவு; நாளன்னைக்குத்தான் முடியும்’ என்று சிலர் தங்களது சொந்த வேலைகளுக்குக்கூட நம் புது காரைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம்.


ப்ரீ டெலிவரி இன்ஸ்பெக் ஷன்:

இது இரண்டாவது இன்ஸ்பெக் ஷன். இது காரை டெலிவரி எடுக்கும்போது செய்ய வேண்டியது. ப்ரீ ரெஜிஸ்ட்ரேஷன் இன்ஸ்பெக் ஷனின்போது நீங்கள் பார்த்த விஷயங்கள் எல்லாமே அந்த காரில் அப்படியே இருக்கின்றனவா என்பதை உறுதி செய்யும் சோதனை இது. 

ப்ரீ ரெஜிஸ்ட்ரேஷனின்போது, காரை நீங்கள் போட்டோ எடுத்துக்கூட இதை செக் செய்து கொள்ளலாம். நீங்கள் புக் செய்த ஆக்சஸரீஸ் அனைத்தும் ஃபிட் ஆகியிருக்கிறதா, காரில் உள்ள ஃப்யூச்சர்கள் அனைத்தும் சரியாக வேலை செய்கின்றனவா என்பதற்கான செக்லிஸ்ட்தான் ப்ரீ டெலிவரி இன்ஸ்பெக் ஷன். 

‘நீங்க கேட்ட மியூசிக் சிஸ்டம் இல்லை. இதுவும் நல்ல பிராண்டுதான்’ என்று சில டீலர்கள் சமாளிப்பார்கள். ‘அந்த லெதரைவிட இது ஜென்யூன் லெதர். நல்ல குஷனிங் கிடைக்கும்’ என்று சீட் லெதர் ஸ்டாக் இல்லை என்று கை விரித்துவிட்டு, வேறு லெதர் ஃபிக்ஸ் செய்திருப்பார்கள். 

இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஃப்ளோர் மேட்டில் இருந்து அலாய் வீல் வரை எல்லாமே நீங்கள் கேட்டதுதான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள். இல்லையென்றால், தயக்கமின்றி டிஸ்கவுன்ட் கேட்கலாம். 

மேலும், அந்த காரில் ‘ப்ரீ டெலிவரி இன்ஸ்பெக் ஷன்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறதா என்று செக் செய்துவிட்டு காரை ஷோரூமிலிருந்து வெளியே கிளப்புங்கள்.

செக்லிஸ்ட்:

டெலிவரி எடுக்கும்போது, எப்போதுமே தனியாகச் செல்வது வேண்டாம். நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்வதுதான் நலம். அவர்களை வைத்து செக்லிஸ்ட்கூடப் போட்டுக் கொள்ளலாம். 

டிக்கியைத் திறப்பது எப்படி, கதவு ஒழுங்காக லாக் ஆகிறதா, மியூசிக் சிஸ்டம் ஒழுங்காக வேலை செய்கிறதா, டயர் பிரஷர் சரியாக இருக்கிறதா, ஏ.சி கூலிங், சிக்னல்கள், இன்ஷூரன்ஸ் பேப்பர்கள், இன்ஷூரன்ஸ் பேப்பரில் உங்கள் கார் மாடல்/இன்ஜின்/சேஸி எண், ஆர்.சி புத்தகம், சர்வீஸ் மேனுவல், முதலுதவி கிட், ஸ்டெஃப்னி வீல், பிரேக்-டவுன் வார்னிங் கிட், இரண்டு சாவிகள், பஞ்சர் ஜாக்கி என்று ஒவ்வொன்றுக்கும் வீட்டிலேயே செக்லிஸ்ட் போட்டு, ஷோரூமில் வைத்து செக்லிஸ்ட்டைச் சரி செய்து கொள்வது தான் சரியான டெலிவரி. 

‘‘பஞ்சர் ஜாக்கி கிட் எக்ஸ்ட்ராவில் தான் சார் வரும். உங்களுக்காகத் தான் இந்த ஆஃபர்’’ என்று சில டீலர்கள், நம்மை மகிழ்ச்சிக் கடலில் தள்ள முயற்சி செய்வார்கள். இவை எல்லாமே எக்ஸ்ட்ரா இல்லை; நம் உரிமை. இதைத் தயக்கமின்றிக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Tuesday, June 12, 2018

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் | ஸ்பீடோ மீட்டர் காட்டும் வேகம் உண்மையா ?

Instrument Cluster

ஸ்கேன் மானிட்டர் என்றுகூட காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
காரில் இருக்கும் கூலன்ட் அளவைச் சொல்லும் இன்ஜின் டெம்பரேச்சர், பேட்டரியின் டிரெயினிங் அளவு, கார் எவ்வளவு வேகத்தில் போகிறது; எரிபொருள் எவ்வளவு காலியாகிறது, இருக்கும் எரிபொருளில் எத்தனை கி.மீ பயணிக்கலாம்.

வெளியே உள்ள தட்பவெப்ப நிலை, கார் வாங்கிய நாளிலிருந்து எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லும் ஓடோ மீட்டர், வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லும் ட்ரிப் மீட்டர்.

சீட் பெல்ட் போடச் சொல்லி எச்சரிக்கும் வார்னிங் லைட் என காருக்குள் நடக்கும் அத்தனை மூவ்மென்ட்களையும் முந்திச் சொல்வது - இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்தான்.

முதலில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என்றாலே, ஸ்பீடோ மீட்டர்தான். 1910-க்குப் பிறகுதான் கார்களில் ஸ்பீடோ மீட்டரை ஸ்டாண்டர்டு ஆப்ஷன் ஆக்கினார்கள். கப்பலில் இருக்கும் திசைகாட்டி போல டிசைன் செய்யப்பட்ட இந்த மீட்டரில் குண்டு குண்டான நம்பர்கள் இருக்கும். பெரிய முள் ஒன்று, நம்பர்களில் துடித்தபடி இருக்கும். 

நாம் எத்தனை கி.மீ போகிறோம் என்பதை இதை வைத்துத் தெரிந்து கொள்வதற்காக இதை முதன்முதலில் கார் நிறுவனங்களுக்கு சப்ளை செய்தது ‘ஓட்டோ ஷுல்ஸ் ஆட்டோ மீட்டர்’ எனும் நிறுவனம். தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு இந்த டிசைன் மாறவே இல்லை. இதற்குப் பெயர் அனலாக் மீட்டர்.

நாளடைவில் கடிகார டிசைனுக்குப் பதில் வெறும் நம்பர்கள் மட்டும் தெரியும்படியாக வைத்து டிசைன் செய்யப்பட்ட மீட்டர்கள் வந்தன. இது டிஜிட்டல் மீட்டர். 


அனலாக் மீட்டர் எப்படி வேலை செய்கிறது?

மெக்கானிக், எலெக்ட்ரானிக் என்று இரண்டு வகைகளில் கிளஸ்டர் உண்டு. 1993-ல்தான் முதன்முதலில் எலெக்ட்ரானிக் மீட்டர் வந்தது. இத்தனை விவரங்களைச் சொல்லும் இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்குப் பின்னால் சென்ஸார்கள் இருந்தால்தான் வேலைக்கு ஆகும். அதேநேரம் மெக்கானிக்கலாகவும் நிறைய விஷயங்கள் நடக்கின்றன.

ஒரு காரின் வேகத்தைத் தெரிந்துகொள்ள, டயர்களின் அல்லது டிரான்ஸ்மிஷனின் ரொட்டேஷன் வேகத்தை அதாவது rpm-மை அளவெடுத்து அனுப்பும் ஒரு சென்ஸார் நிச்சயம் தேவை. பல கார்களில் டிரான்ஸ்மிஷனில் இருந்துதான் வேகம் எடுக்கப்படுகிறது. 

இதற்கு மிகவும் உதவி புரிவது ஒரு டிரைவ் கேபிள். பல லேயர்களைக் கொண்ட, காயில் ஸ்ப்ரிங்குகளால் டைட்டான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த டிரைவ் கேபிள், ‘மான்ட்ரல்’ எனும் சென்டர் கேபிளைச் சுற்றிப் பிணைக்கப்பட்டிருக்கும். 

இது மிகவும் ஃப்ளெக்ஸிபிளாக, வளைந்து நெளிந்துகொள்ளும் தன்மை கொண்ட, அதிக வேகத்தில் இயங்கும்போதுகூட அறுந்துபோகாத முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும். 

டிரான்ஸ்மிஷனில் இருந்து இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கு இணைக்கப்பட்டிருக்கும் இந்த டிரைவ் கேபிள்தான், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரின் மூளை! 

வாகனம் நகரும்போது, இந்த கேபிள் ரொட்டேஷன் ஆகி, ஸ்பீடோ மீட்டருக்குத் தகவலை அனுப்புகிறது. இதுதான் கிளஸ்டரில் நீங்கள் பார்க்கும் வேகத்தின் அளவு. அப்படியென்றால், அனலாக் மீட்டரில் துள்ளும் அந்த முள்?


ஸ்பீடோ மீட்டரில் இன்னும் சில முக்கியமான பாகங்கள் உள்ளன. முக்கியமாக, காந்தம். கப் போல இருக்கும் மெட்டல் பீஸுக்கு உள்ளே இருக்கும் இந்த காந்தம் அமர்ந்திருக்கும் இடம் ஸ்பீடு கப். இது ஸ்பீடோ மீட்டர் டிரைவ் கேபிளின் மறுமுனையில் இருக்கும். இந்த ஸ்பீடு கப் ஒரு முள்ளில் அட்டாச் செய்யப்பட்டு, காந்தம் மூலம் அசைந்தாடுவதுதான் காரின் வேகம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு கார் நெடுஞ்சாலையில் மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. டிரைவ் ஷாஃப்ட், வாகனம் போகும் வேகத்துக்கு ஏற்ப சுழல்கிறது. 

இதேநேரம், ஸ்பைரல் கியர் மூலம் டிரான்ஸ்மிஷனுக்கு கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் டிரைவ் கேபிளுக்கு உள்ளே உள்ள மான்ட்ரெல் ஷாஃப்ட்டும் இதே வேகத்தில் சுழல்கிறது. கேபிளின் அடுத்த முனையில் இருக்கும் காந்தமும் இந்த வேகத்துக்கு ஏற்ப சுழலும்போது, ஸ்பீடோ மீட்டரில் வேகம் தெரிகிறது.

காரின் வேகத்தைக் குறைக்கும்போது ஸ்பீடு கப் காந்தம் மெதுவாகச் சுழல்வதும், வேகத்தைக் கூட்டும்போது வேகமாகச் சுழல்வதும், கார் நிற்கும்போது முள் ‘0’-வில் இருப்பதும் நடப்பது இதனால்தான்.

டிஜிட்டல் மீட்டர்?

இதுவே, டிஜிட்டல் மீட்டரில் டிரைவ் கேபிளுக்குப் பதில் சென்ஸார். இதற்கு VSS என்று பெயர். Vehicle Speed Sensor. இந்த VSS டிரான்ஸ்மிஷன் அவுட்புட் அல்லது க்ராங்க் ஷாஃப்ட் உடன் மவுன்ட் செய்யப்பட்டிருக்கும். காந்த சக்தி கொண்ட காயில் மூலம் இது சில பல்ஸ்களை உருவாக்கி, கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. 

வேகத்துக்கான அளவு இந்த பல்ஸ்களின் அதிர்வு எண்களை வைத்துத்தான் கணக்கிடப்படும். இதுவே தூரத்தைக் கணக்கிடுவதற்கும் ஒரு பல்ஸ் எண்ணிக்கை உண்டு. அதாவது, ட்ரிப் மற்றும் ஓடோ மீட்டர். உதாரணத்துக்கு, 40,000 பல்ஸ்களை VSS சென்ஸார் செய்தால், வாகனத்தின் தூரம் 1 மைல் (1.6 கி.மீ) கூடியிருக்கிறது என்று அர்த்தம். 

ஸ்பீடோ மீட்டர் காட்டும் வேகம் உண்மையா?

டிரைவ் கேபிளில் கியர் ரேஷியோ, டிஃப்ரன்ஷியல் ரேஷியோ, டயர்களின் அளவு இவை எல்லாவற்றையும் வைத்துத்தான் ஒரு வாகனத்தின் வேகம் கணக்கிடப்படும். ஒரு டயரின் அளவே இவை எல்லாவற்றையும் மாற்றிவிடும் தன்மை கொண்டவை. 

உதாரணத்துக்கு, 18 இன்ச் டயர்களைவிட, 20 இன்ச் டயர்கள் ஒரு சுற்றில் அதிக தூரத்தை கவர் செய்துவிடும். 20 இன்ச் டயர்கள், ஒரு சுற்றில் 62.8 இன்ச் தூரத்தை கவர் செய்கிறது என்றால், 30 இன்ச் டயர்கள் 94.2 இன்ச் தூரத்தை கவர் செய்யும். இதனால் கியர் ரேஷியோ, டிஃப்ரன்ஷியல் எல்லாமே மாறும். இதை ‘காலிபரேஷன்’ என்கிறார்கள். 

இந்த ஸ்பீடோ மீட்டர் காலிபிரேஷனை, கார் நிறுவனங்களே ஸ்டாண்டர்டாகச் செய்துதான் அனுப்புகின்றன.

எந்த ஸ்பீடோ மீட்டரின் அளவுமே 100% உண்மையானதல்ல. சொல்லப்போனால், சில கார் உற்பத்தியாளர்களே சொந்தமாக ஸ்பீடோ மீட்டரைத் தயார் செய்கிறார்கள். என்றாலும் இந்த ‘காலிப்ரேஷன்’ துல்லியமாக இருக்காது என்பதுதான் உண்மை. 

குறைந்தபட்சம் 4% முதல் 8% வரையாவது இந்த வேகத்தில் வேறுபாடு இருக்கும். அதாவது, உங்கள் கார் 80 கி.மீ வேகத்தில் போகிறது என்றால், 75 கி.மீ ஆகத்தான் இருக்கும். அதிலும் மாடிஃபைடு செய்யப்பட்ட கார்களில் நிச்சயமாக இந்தத் துல்லியத்தன்மை அதிகளவில் வேறுபடும். 

காரணம், பாடி பேனலில் இருந்து டயர், எடை, கியர் ரேஷியோ வரை எல்லாமே மாறுவதுதான் இந்தக் காரணம்.

ஸ்பீடோ மீட்டர் மட்டுமல்ல; சீட் பெல்ட் வார்னிங், டெம்பரேச்சர் வார்னிங், பேட்டரி வார்னிங், சர்வீஸ் இண்டிகேட்டர், ஃப்யூல் மீட்டர், ஹேண்ட்பிரேக் வார்னிங் என இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இல்லாமல் ஒரு வாகனத்தை ஓட்டுவதைக் கற்பனையே செய்து பார்க்க முடியாது. 

வாகனத்தில் என்ன நடக்கிறது; இன்ஜின் கண்டிஷன் எப்படி இருக்கிறது என்பன போன்ற விஷயங்களை எப்போதும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கிளஸ்டரில் எந்த வார்னிங் சிம்பலும் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஆக்ஸிலரேட்டர் மிதியுங்கள். 


என்னதான் கார் ஓட்டும்போது சாலையில் கவனமாக இருந்தாலும், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையும் அவ்வப்போது செக் செய்ய வேண்டும். ஆனால், இதற்கு ஒரு விநாடியாவது சாலையிலிருந்து பார்வை விலகத்தான் செய்யும். இந்த ஒரு விநாடியில் 50 கி.மீ வேகத்தில் செல்லும் ஒரு கார், 46 அடி நகர்ந்திருக்கும். விபத்துகளுக்கு ஒரு விநாடி என்பது மிகப் பெரிய டைமிங்.

இதற்காகவே ‘ஹெட்-அப் டிஸ்ப்ளே’ என்றொரு ஆப்ஷன் வந்திருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் விஷயங்களைத் தாண்டி பிளைண்ட் ஸ்பாட்கள், சாலைத் தடுப்புகள், குறுக்கீடுகள் என்று பல விஷயங்கள் உங்கள் விண்ட்ஷீல்டிலேயே தெரிவதுதான் ஹெட்-அப் டிஸ்ப்ளே. 

இந்த ஹெட்-அப் டிஸ்ப்ளே அம்சத்தை வால்வோ போன்ற கார்களில் கொடுத்திருக்கிறார்கள்.

Saturday, June 9, 2018

தமிழகத்தில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி தொடர்பாக அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2007-2008-ஆம் ஆண்டில் 27,209 என்ற அளவில் இருந்தது. அதன் மூலம் ரூ.2,547.14 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, ரூ.8,739.95 கோடி அளவுக்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2 லட்சத்து 42 ஆயிரத்து 855 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.

உத்யோக் ஆதார் பதிவறிக்கை செயலாக்கத்திற்கு வந்த பிறகு, 2016-2017-ஆம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 310 அளவுக்கு உயர்ந்தது. முதலீடும் ரூ.36,221.78 கோடி என்ற அளவுக்கு அதிகரித்தது. இதன் மூலம் வேலைவாய்ப்பு 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேருக்கு கிடைத்தது.

2017-2018-ஆம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 17 ஆயிரத்து 981 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. முதலீட்டின் அளவும் ரூ.25,373.12 கோடி என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 97 ஆயிரத்து 619-ல் இருந்து சுமார் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 5, 2018

மரணத்திற்கு முன் ஏற்படும் அறிகுறிகள்



பொதுவாக மனிதனுக்கு ஒரு பிறவி தான், மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்வார்கள்.

ஆனால் அது இன்றளவும் பொய்யா அல்லது உண்மையா என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.

ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுடைய இறப்பு எப்போது எப்படி நிகழும் என்பதை கடவுளால் குறிக்கப்பட்டு விடுகிறது.

ஆனால் கடவுளைத் தவிர அந்த மரணம் எப்போது எப்படி நடக்கும் என்பதை மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களால் யூகிக்க முடியாத ஒன்றாகும்.

ஒருவருக்கு மரணம் ஏற்படுவதற்கு முன் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை சிவப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம். சிவபுராணத்தில் கூறப்படும் மனிதர்களின் மரணத்திற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள்.

  • மனிதர்களின் வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது எனில், ஆறு மாதங்களில் இறப்பு நேரப் போகிறது என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
  • ஒருவரது உடலில் திடீரென உடல் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாற்றம் ஏற்பட்டு, உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தென்பட்டால், அவர்கள் ஆறு மாதத்தில் உயிரிழக்க நேரிடலாம்.
  • ஒருவருக்கு தொண்டை மற்றும் நாக்கு தொடர்ந்து விடாமல் வறட்சி நிலையை அடைந்துக் கொண்டிருந்தால், அவர்கள் மிக விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்.
  • ஒருவரின் இடது கையானது, அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்திலே இறந்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
  • இரவில் நிலா மற்றும் பகலில் சூரியனை பார்க்கும் போது, கருப்பு அல்லது சிவப்பு நிறமுள்ள வட்டம் தென்பட்டால், அவர் 15 நாட்களுக்குள் இறந்து விடுவார் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை இரவில் பார்க்க முடியவில்லை அல்லது மிகவும் மந்தமாக தெரிகிறது என்றால், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என்று அர்த்தமாகும்.
  • ஒருவர் திடீரென நீல நிறமுள்ள ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
  • ஒருவரின் தலையில், கருடன், காகம், கழுகு மற்றும் புறா போன்ற பறவைகள் வந்து அமர்ந்தால், மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஒருவர் தன்னுடைய நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஒருவரால் எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது அல்லது நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாகும்.
  • ஒருவரால் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றில், அவருடைய பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

Monday, June 4, 2018

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டர் நாளை அறிமுகமாகிறது



Xather-S340

பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கும் ஏத்தர் நிறுவனம் ஏத்தர் எஸ்-340 என்ற ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. இதற்கான பஸ்ட் லுக் வெளியான போதே மக்கள் மத்தியில் ஏகே பித்த எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் தேதி வெளியாகியுள்ளது.

இந்த ஸ்கூட்டர் வரும் 5ம் தேதி முதல் விற்பனைக்க வருகிறது. இது தான் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டராக வெளி வருகிறது. இதில் பல உயர்ரக தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் எலக்ரிக் பேட்டரியில் இயங்ககூடியது. ஆனால் இந்தியாவில் அதிக சார்ஜ் ஏற்றும் மையங்கள் இல்லாததால் இந்த ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனையாகாது என அந்நிறுவனம் கருதியது.

இதையடுத்து இந்த பைக்கை முதற்கட்டமாக பெங்களுருவில் மட்டும் விற்பனை செய்வது எனவும், அதற்கு முன்னர் பெங்களூருவில் சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு கடந்து வாரம் சார்ஜ் ஏற்றும் மையங்களும் நிறுவப்பட்டது.

அதில் ஏத்தர் ஸ்கூட்டர்கள் மட்டும் அல்லாமல் எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையோ அல்லது கார்களையோ சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். இதையடுத்து தனது தயாரிப்பான ஏத்தர் எஸ் 340 ஸ்கூட்டரை வரும் 5ம் தேதி அறிமுகப்படுத்துகிறது.

ஏத்தர் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு துவங்கப்பட்டு 55 பைக்குகளை டிசைன் செய்துள்ளது. அதன் மூலம் இதுவரை 50,000 பைக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் தயாரித்துள்ள ஏத்தர் ஸ்கூட்டருக்கு தற்போதே பல சப்ளையர்கள் மற்றம் டீலர்கள் தொடர்பு கொள்ள துவங்கி விட்டது.

இந்த பைக் முழுவதும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓயிட் பீல்டு என்ற ஏரியாவில்தான் அசம்பிள் செய்யப்படுகிறது. இந்த பைக்கை பொரத்த வரை ஐபி 67 வாட்டர் ப்ரூப் லித்தியம் இயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. இது காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ. வரை எடுத்து செல்லும், மேலும் பைக்கில் 72 கிமீ. வேகத்தில் செல்லலாம்.

ஆனால் 40 கி.மீ. வேகத்தில் பயணம் செய்தால் தான் முழு பேட்டரி சார்ஜில் 80 கி.மீ. வரை பயணம் செய்ய முடியும். மேலும் இந்த பைக்கில் உள்ள பேட்டரியும், 50,000 கி.மீ. அல்லது 5-6 வருடம் வரை உழைக்கும் திறன் படைத்தது. மேலும் இந்த பைக் 1 மணி நேரத்தில் 80 சதவீத சார்ஜூம், 3 மணி நேரத்தில் முழு சார்ஜூம் பெற்று விடும்.

இந்த ஸ்கூட்டரில் சிறப்பு வசதியாக ஹைடெக் எல்இடி கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கும் பைக்கில் இது போன்ற கன்சோல் பொருத்தப்படும் முதல் பைக் இது தான். மேலும் இது க்ளவுட் கனெக்டட் ஆக செயல்படும்.

இதனால் தற்போது அதில் உள்ள டேட்டாக்கள் எல்லாம் க்ளவுடில் பதிவாகியிருக்கும். அதை பின்னர் வாடிக்கையாகளர்கள் பார்த்து கொள்ளலாம். உதாரணமாக இந்த பைக்க எந்த வழியாக சென்றது என்ற மேப் இதில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். அதில் பதிவானதை நாம் பார்க்க முடியும்.

மேலும் இந்த பைக்கில் ஓடிய எனப்படும் ஓவர் தி ஏர் என்ற முறையில் சாப்வேர்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் அடுத்த அப்பேட்டை பெரும் போது இந்த பைக்கில் பொருத்தப்பட்ட சாப்வேரிலும் நாம் அப்டேட்களை பெற முடியும்.

இந்த பைக் வரும் 5ம் தேதி அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அதற்கான புக்கிங்கும் துவங்குகிறது. தெடார்ந்து ஜூலை மாதம் இந்த பைக்குகள் டெலிவரி செய்யப்படும் என தெரிகிறது. இதன் விலை அறிமுக நாள் அன்றே வெளியிடப்படும்.

Saturday, June 2, 2018

இன்ஜினியரிங் கலந்தாய்வு ....விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்


இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு இணையதளம் மற்றும் இணைய சேவை மையங்களில் பதிவு செய்ய இன்றே கடைசி நாளாகும். தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைகழகம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல், அண்ணா பல்கலைக்கழகம் இன்ஜினியரிங் கலந்தாய்வை, ஆன்லைனில் நடத்துகிறது. இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்தல் மே 3ம் தேதி தொடங்கியது.

இன்று வரை நீட்டிப்பு :

ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 30ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 2ம் தேதியான இன்று வரை நீட்டிக்கப்பட்டது.

ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்:

இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு நேற்று மாலை வரை இணையதளம் மூலம் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோரும், இணைய சேவை மையங்கள் மூலம் 12,000க்கு மேற்பட்டோரும் விண்ணப்பித்துள்ளனர்.

அசல் சான்றிதழ்கள்:

இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது. அதற்காக மாணவர்கள் தங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள, இணைய சேவை மையத்தில் நேரில் சென்று அசல் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.

ரேங்க் லிஸ்ட்:

சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர், கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள மாணவர்களின் ரேண்டம் எண் வெளியிடப்படும். மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து மாணவர்கள் தங்களின் விருப்பகல்லூரி பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிரத்யேக இணையதளம்:

அதைத்தொடர்ந்து ஜூலை 30ம் தேதிக்குள், 6 கட்டங்களாக இணையதளம் மூலம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும், இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கான பிரத்யேக இணையதளத்தில் tnea.ac.in வெளியிடப்படும்.

Monday, May 28, 2018

ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் | 300 கி.மீ. மைலேஜ்

 Honda _ Jazz


2020ம் ஆண்டு ஹோண்டா நிறுவனத்தின் ஜாஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்சனை வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கார் பேட்டரி முழு சார்ஜில் இருந்தால் சுமார் 300 கி.மீ. வரை ஓடும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் கார்கள் குறித்து பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எலெக்ட்ரிக் கார்களால் பல நன்மைகள் கிடைப்பதால் இன்று ஆட்டோமொபைல் துறையில் கால் பதித்துள்ள பெரும் நிறுவனங்கள் வரும் காலம் குறித்த பயம் வந்து விட்டது.
எலெட்ரிக் வாகனங்கள் தயாரிப்பது மிக சுலபமாக இருப்பதால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையில் பெரும் ஜாம்பவான்களாக விளங்குள் நிறுவனங்களில் வாகனங்களுக்கு போட்டியாக வாகனங்களை தயாரித்து சவால் விட துவங்கி விட்டனர்.

இதை சமாளிக்க ஹோண்டா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதன் படி திட்டம் அனைத்தும் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. வரும் 2020ம் ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இத்திட்டத்தின் படி ஏற்கனவே மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க பெயரைபெற்றுள்ள ஜாஸ் காரில் எலெக்ட்ரிக் வேரியன்டை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார் குறித்து தற்போது ஹோண்டா நிறுவனம் திட்டமிட்ட தொழிற்நுட்பத்தை இந்த காரில் பொருத்தும் பட்சத்தில் இந்த கார் முழு பேட்டரி சார்ஜில் சுமார் 300 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அந்நிறுவனம் சீனாவை சேர்ந்த கான்டெம்ரரி அம்பெரெக்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அந்நிறுவனம் ஹோண்டா ஜாஸ் கார்களுக்கான பேட்டரியை தயாரித்து வழங்கவிருக்கிறது.

மேலும் சீனாவிலேயே இந்த காரை தயாரித்து விற்பனை செய்தால் பேட்டரி தயாரிப்பிலும் சீன அரசு சலுகைகளை வழங்குகிறது. தற்போது விற்பனையாகும் ஹோண்டா ஜாஸ் காரின் மாடல்கள் எதுவும் மாற்றப்படுகிறதா அல்லது இதே மாடலில் எலெட்ரிக் பாகங்கள் பொருத்தப்படுகிறதா என்பது குறித்து தகவலை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

தற்போது வந்துள்ள தகவலின் படி சீனாவில் இந்த காரை இந்திய மதிப்பின் படி ரூ16.34 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த கார் தயாரிப்பிற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது ஆண்டிற்கு 10,000 கார்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் எச்ஆர்-வி எஸ்யூவி கார்களை பிஜிங்கில் நடந்த ஒரு ஆட்டோ எகஸ்போவில் கண்காட்சிக்கு வைத்தது. இந்த கார் இந்தாண்டு விற்பனைக்கு வரும் என பேசப்படுகிறது. இந்த காரை சீனாவின் வென்சர் மார்க் என்ற நிறுனவத்துடன் ஒப்பந்தமிட்டு தயார் செய்துள்ளது.

தற்போது ஹோண்டா நிறுவனத்திடம் ஒரு, இரண்டாம் தலைமுறை எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே உள்ளன. இந்த கார் முழுவதும் கலிபோர்னியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த காரில் 25.5 கிலோ வாட்ஸ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 300 என்எம் டார்க் திறனை வழங்ககூடியது. முழு பேட்டரி சார்ஜில் 129 கி.மீ. வரை பயணம் செய்யலாம்.

இந்த காரை இந்தியாவில் விற்பனை செய்வது குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் இந்தியாவில் டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. டாடா டிகோர் காரின் எலெக்ட்ரிக் வேரியன்டை வெளியிட அந்நிறுவனம் தயாராகி வருகிறது.

Sunday, May 27, 2018

பெண்கள் பற்றிய அற்புதமான வார்த்தைகள்

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.

அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். 

அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்துஉடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். 

அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். 

இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.

“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.

அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். 

அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். 

கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். 

மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.

“ஓ………இந்த அளவுக்கு ஒரு பெண்ணால் யோசிக்க முடியுமா?” என்று தேவதை கேட்டது.

“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்றார் கடவுள்.

அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.

“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.


*பெண்மையை மதிப்போம்.

Sunday, May 20, 2018

அரிய தகவல்கள்

  • கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
  • யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
  • கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்.
  • மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
  • ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயிரினம் - ஈரிதழ்சிட்டு.
  • வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
  • ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
  • பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணி நேரம் பேசியுள்ளார்.
  • அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள்11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
  • ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
  • தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.
  • காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது. தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.
  • சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
  • விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
  • சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
  • யானை,குதிரை நின்று கொண்டே தூங்கும்.
  • நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
  • டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.
  • மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.
  • எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
  • உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
  • தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். ஆண்டு 1219.
  •  கத்தரிக்காயின் தாயகம் இந்தியாவே.
  • வெண்மை என்பது நிறம் இல்லை. அது ஏழு வண்ணங்களின் கலவையே.
  • உலகில் 44 நாடுகளுக்கு கடற்கரை இல்லை.
  • இந்தியாவில் தமிழில் தான் ‘பைபிள்’ முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • இறாலின் இதயம் தலையில் இருக்கிறது.

Friday, May 18, 2018

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் | பழமொழி

பழமொழி:

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.

பொருள்:

ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி.

தமிழ் விளக்கம்:

கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவிபாடும்’ என்பது இப்பழமொழியின் இன்னொரு வழக்கு. 

வெள்ளாட்டி என்பவள் வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரி.’கட்டுத் தறி’ என்பது என்ன? தறி என்றால் நெசவு என்பதால் கம்பர், வள்ளுவர் போல நெசவுத் தொழில் செய்துவந்த குலத்தைச் சேர்ந்தவரா? கம்பரின் வரலாற்றைப் பற்றி உள்ள கட்டுக் கதைகளில் அவர் நெசவாளர் என்ற செய்தி இல்லை.

சிலர் ’கட்டுத் தறி’ என்றால் பசுமாட்டைக் கட்டும் முளைக்கோல் என்று பொருள் கொள்கின்றனர். எனக்கென்னவோ ’கட்டுத் தறி’ என்றதன் சரியான பொருள் ’தறித்துக் கட்டிவைக்கப்பட்ட ஓலைச் சுவடிகள்’ என்றே படுகிறது. 

புலவர்கள் வீட்டில் பாட்டெழுத நறுக்கிய ஓலைச் சுவடிகள் இருப்பது வழக்கம்தானே? எனவே, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் என்பதே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது.

Thursday, May 17, 2018

தலைகீழாக விழும் கோபுர நிழல் | விருபாட்சா கோயில்



இந்தியாவின் மிக பழமையான இடங்களில் ஒன்று கர்நாடக மாநிலத்திலுள்ள ஹம்பி. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த செய்திதான். நமக்கு புதிரளிக்கும் வகையில் இங்குள்ள கோயில் ஒன்றில் கோபுரத்தின் நிழல் தரையில் விழும்போது தலைகீழாக தெரிகிறது. அந்த கோயில்தான் விருபாட்சா கோயில். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோயில், கட்டடக்கலைக்கும், பல மர்மங்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது.




இந்த கோயிலில் கோபுரதுங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் பெரும்பாலும் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த கோயில் பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் அமைந்துள்ளது.


கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழுகிறது. இந்த மர்மம் என்னவென்று தெரியாமல் பலர் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதன் மத்தியில் அமைந்துள்ள மைய மண்டபம் ரங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இது 1510ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாக தெரிகிறது.




ஹம்பி பகுதியில் இன்னும் பல அரிய பொக்கிஷங்கள் இருந்ததாகவும், அதையெல்லாம் படையெடுத்து வந்தவர்கள் அழித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருபாட்சா கோயிலின் சிறப்பு எத்தனை படையெடுப்புகள் வந்தாலும் இந்த கோயிலை எதும் செய்யமுடியவில்லையாம். 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் கம்பீரத்துடன் காட்சி தருகிறது.

ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இயங்கி வரும் இந்த கோயிலில் இதுவரை எந்த இடையூறுகளும் ஏற்பட்டதில்லையாம். இந்தியாவின் வெகுகாலமாக இயங்கிவரும் ஒரே கோயில் என்று வழங்கப்படுகிறது இந்த விருபாட்சா கோயில்.




இதன் அமைவிடம் மிக முக்கியமானதாகும். ஏனென்றால் இந்த சிறிய கோயில் துங்கபத்திரை நதிக்கரையில் இயற்கை எழில் கொஞ்சும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. 

இங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் சில ஆதாரங்கள் இந்த கோயில் சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர் கட்டியதற்கான உறுதிப்பாட்டை தருகின்றன. அதன் பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து கழகம் கர்நாடக மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் ஹம்பிக்கு பேருந்துகளை இயக்குகின்றது.

Wednesday, May 16, 2018

பாரதியார் பற்றிய தகவல்கள்



சுப்பிரமணிய பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன்.இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் திசம்பர் 11,1882-ல் சின்னச்சாமி ஐயர் இலக்குமி அம்மையார் தம்பதியின் மகனாய் பிறந்தார்.

சிறுவயது முதலே கவிப்புலமை பெற்று விளங்கியவர் பாரதியார்.

இவர் ஒரு எழுத்தாளர், கவிஞர், பத்திரிக்கையாசிரியர்,சுதந்திர போராட்டவீரர் என பல்வேறு பரிமாணங்களை கொண்டவர்.

இவரது பாடல்களில் பெண் விடுதலை, நாட்டுபற்று, மற்றும் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் மேலோங்கி இருக்கும்.

இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர்.

பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார். எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய எழுச்சியூட்டும் பாடல்களைப் பாடி, விடுதலை உணர்வை மக்களுக்கு ஊட்டியவர் பாரதியார் எனவே இவரை தேசிய கவி என அழைப்பர்.

கவிதைகள்:

1. பாப்பா பாட்டு/Papa Pattu

2. அச்சமில்லை/Achamillai

3. மனதில் உறுதி வேண்டும்/Manathil Uruthi Vendum

4. காலனுக்கு உரைத்தல்/Kaalanukku Uraththal

5. சங்கு/Sangu

6. பரசிவ வெள்ளம்/Parasiva Vellam

7. நான் /Naan

8. பக்தி்/Bhakthi

9. வண்டிக்காரன் பாட்டு/Vandikkaaran Paattu

10. அன்பு செய்தல்/Anbu Seithal

11. மனத்திற்குக் கட்டளை/Manaththirkuk Kattalai

12. பகைவனுக்கருள்வாய்/Pagaivanukkarulvaai

13. கற்பனையூர்/Karpaniyur

14. ஜய பேரிகை/Iya Perigai

15. ஆத்ம ஜயம்/Aathma Iyam

16. மாயையைப் பழித்தல்/Maayaiyaip Pazhiththal

17. அறிவே தெய்வம்/Arive Dheivam

18. பொய்யோ?மெய்யோ?/Poiyyo Meiyyo

19. அம்மாக்கண்ணு பாட்டு/Ammakkannu Paattu

20. கடமை அறிவோம்/Kadamai Arivom

21. சென்றது மீளாது/Sentrathu Meelaathu

22. மனப் பெண்/Manap Pen

23. தெளிவு/Thelivu

24. விடுதலை வேண்டும்/Viduthalai Vendum

25. சிட்டுக் குருவியைப் போலே/Cittuk Kuruviyaip Pole

26. புதுமைப் பெண்/Pudhumaip Pen

27. பெண்மை/Penmai

28. சித்தாந்தச் சாமி கோயில்/Siththanthach Saami Koyil

29. கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி/Kadavul Vaazhthu Paraasakthi Thuthi

30. மரணத்தை வெல்லும் வழி/Maranathai Vellum Vazhi

31. அசுரர்களின் பெயர்/Asurargalin Peyar

32. சினத்தின் கேடு/Sinathin Kedu

33. தேம்பாமை/Thembaamai

34. பொறுமையின் பெருமை/Porumaiyin Perumai

35. கடவுள் எங்கே இருக்கிறார்?/Kadavul Yenge Irukkiraar

36. குருக்கள் ஸ்துதி(குள்ளச்சாமி புகழ்)/Kurukkal Sthuthi Kullachami Pugazh

37. குருதரிசனம்/Kurutharisanam

38. உபதேசம்/Ubathesam

39. காணி நிலம் வேண்டும்/Kaani Nilam Vendum

40. நல்லதோர் வீணை/Nallathor Veenai

41. சுட்டும் விழிச் சுடர் தான்/Suttum Vizhich Chudar Thaan

42. காக்கை சிறகினிலே/Kaakkai Siraginile

43. சின்னஞ் சிறு கிளியே/Cinnanj Ciru Kiliye

44. நின்னையே ரதி என்று/Ninnaye Radhi Yendru

45. ஆசை முகம் மறந்து போச்சே/Aasai Mugam Maranthu Poache

46. வருவாய்,வருவாய்-கண்ணா/Varuvaai Varuvaai Kanna

47. எத்தனை கோடி இன்பம்/Yethanai Kodi Inbam

48. வீணையடி நீ யெனக்கு/Veenaiyadi Nee Yenaku

49. தீராத விளையாட்டுப் பிள்ளை/Theeraatha Vilaiyattup Pillai

50. முரசு/Murasu

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...