Saturday, March 31, 2018

ஐ.ஐ.எஸ்சி., அட்மிஷன்


ஐ.ஐ.எஸ்சி., அட்மிஷன்:

பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்.சி.,) கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தகுதிகள்: 

12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஜே.இ.இ மெயின், ஜே.இ.இ அட்வான்ஸ், நீட் ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.

சேர்க்கை முறை: ஐ.ஐ.எஸ்.சி., கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கென தனி நுழைவு தேர்வுகள் ஏதும் நடத்தப்படுவதில்லை. அரசு தகுதி தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கே இந்த நிறுவனத்தில் அட்மிஷன் வழங்கப்படுகிறது. தகுதி தேர்வுகளின் முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்குள் அந்த மதிப்பெண்களை, மாணவர்கள் அவர்களது விண்ணப்பத்தில் ‘அப்டேட்’ செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30

விபரங்களுக்கு: http://iisc.ac.in/

தோல்வி நிலையென நினைத்தால் - ஊமை விழிகள்

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா

குழு : விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா
குழு : உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா

Friday, March 30, 2018

பங்குனி உத்திரம்- 30-3-2018


பங்குனி மாதம், உத்திர நட்சத்திரம் கூடிவரும் பௌர்ணமி நாள் பங்குனி உத்திரத்திருநாள். 12-ஆவது மாதமான பங்குனியும் 12-ஆவது நட்சத்திரமாகிய உத்திரமும் இணையும் நாள். இந்நாளில் தெய்வத் திருமணங்கள் பல நடந்துள்ளதால் இது மேலும் பன்மடங்கு சிறப்புக்கொண்ட நாளாகிறது. எனவே இந்த நாளை கல்யாண நோன்பு, கல்யாண விரத நாள் எனவும் புராணங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.



கன்னிப் பெண்கள் பங்குனி உத்திர நாளன்று கல்யாண விரதம் கடைப்பிடித்து, அன்று ஆலயங்களில் நடைபெறும் இறைவனின் மணக்கோலத்தை தரிசித்தால் விரைவில் திருமணம் கைகூடும்.

சில கோவில்களில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது அந்தந்த தலங்களிலுள்ள கடல், ஏரி, ஆறு, குளம் போன்றவற்றில் புனித நீராடினால் பெரும் புண்ணியம் கிட்டும். திருவிளக்கு தீபத்தில் பங்குனி உத்திரத்தன்று சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.

அன்று வயதுமுதிர்ந்த தம்பதி களுக்கு உணவிட்டு உபசரித்து வாழ்த்துப்பெற்றால், விரைவில் திருமணம் கைகூடும்.

பரமேஸ்வரனை பார்வதி கரம்பிடித்த நன்நாளிது. அன்று மதுரையில் மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமண வைபவத்தை ஆண்டுதோறும் நடத்துவார்கள். முருகன் தெய்வானையை அன்றுதான் திருமணம் புரிந்துகொண் டார். வள்ளியின் அவதார தினமும்,ஸ்ரீலட்சுமியின் அவதார தினமும் இதே நாள்தான். ஸ்ரீமகாலட்சுமி பங்குனி உத்திர விரதமிருந்துதான் திருமாலின் மார்பில் இடம்பிடித்தாள். பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்துக்கொண்டதும் பங்குனி உத்திர தினம்தான்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்கமன்னார் திருமண வைபவம் இந்த நாளில்தான் நடந்தது. காஞ்சியில் காமாட்சி- ஏகாம்பரேஸ்வரர் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தில்தான் நடைபெறும். அச்சமயம் அதேமண்டபத்தில் பலர் சுவாமி முன்னிலையில் திருமணம் புரிந்து கொள்வதை இன்றும் காணலாம்.

ராமபிரான்- சீதை, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி ஆகிய நான்கு ஜோடிகளும் மிதிலையில் ஜனகர் அரண்மனையில் ஒரே மேடையில் பங்குனி உத்திரத் தன்று திருமணம் செய்துகொண்டனர்.

பங்குனி மாதம், உத்திர நட்சத்திரம் கூடிவரும் பௌர்ணமி நாள் பங்குனி உத்திரத்திருநாள். 12-ஆவது மாதமான பங்குனியும் 12-ஆவது நட்சத்திரமாகிய உத்திரமும் இணையும் நாள். இந்நாளில் தெய்வத் திருமணங்கள் பல நடந்துள்ளதால் இது மேலும் பன்மடங்கு சிறப்புக்கொண்ட நாளாகிறது. எனவே இந்த நாளை கல்யாண நோன்பு, கல்யாண விரத நாள் எனவும் புராணங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.

கன்னிப் பெண்கள் பங்குனி உத்திர நாளன்று கல்யாண விரதம் கடைப்பிடித்து, அன்று ஆலயங்களில் நடைபெறும் இறைவனின் மணக்கோலத்தை தரிசித்தால் விரைவில் திருமணம் கைகூடும்.

சில கோவில்களில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது அந்தந்த தலங்களிலுள்ள கடல், ஏரி, ஆறு, குளம் போன்றவற்றில் புனித நீராடினால் பெரும் புண்ணியம் கிட்டும். திருவிளக்கு தீபத்தில் பங்குனி உத்திரத்தன்று சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.

அன்று வயதுமுதிர்ந்த தம்பதி களுக்கு உணவிட்டு உபசரித்து வாழ்த்துப்பெற்றால், விரைவில் திருமணம் கைகூடும்.

பரமேஸ்வரனை பார்வதி கரம்பிடித்த நன்நாளிது. அன்று மதுரையில் மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமண வைபவத்தை ஆண்டுதோறும் நடத்துவார்கள். முருகன் தெய்வானையை அன்றுதான் திருமணம் புரிந்துகொண் டார். வள்ளியின் அவதார தினமும்,ஸ்ரீலட்சுமியின் அவதார தினமும் இதே நாள்தான்.

ஸ்ரீமகாலட்சுமி பங்குனி உத்திர விரதமிருந்துதான் திருமாலின் மார்பில் இடம்பிடித்தாள். பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்துக்கொண்டதும் பங்குனி உத்திர தினம்தான்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்கமன்னார் திருமண வைபவம் இந்த நாளில்தான் நடந்தது. காஞ்சியில் காமாட்சி- ஏகாம்பரேஸ்வரர் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தில்தான் நடைபெறும். அச்சமயம் அதேமண்டபத்தில் பலர் சுவாமி முன்னிலையில் திருமணம் புரிந்து கொள்வதை இன்றும் காணலாம்.

ராமபிரான்- சீதை, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி ஆகிய நான்கு ஜோடிகளும் மிதிலையில் ஜனகர் அரண்மனையில் ஒரே மேடையில் பங்குனி உத்திரத் தன்று திருமணம் செய்துகொண்டனர்.

காஞ்சி வரதராசப் பெருமாள்- ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், பெருந்தேவித் தாயார் ஆகியோர், பெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஒன்றாகக் காட்சிதருவார்கள். பங்குனி உத்திரத்தன்று திருமழப்பாடியில் நந்திதேவர்- சுயம்பிரபை திருமணம் நடைபெற்றதும், சந்திரன் 27 கன்னியரை மணந்ததும் இதே நாளில்தான்.

சபரிமலை ஐயப்பன் அவதாரம், அர்ச்சு னன் பிறப்பு, காரைக்கால் அம்மையார் முக்திபெற்றது பங்குனி உத்திரத்தன்றுதான். சிவனின் தவத்தைக் கலைத்த காமனை நெற்றிக்கண்ணால் எரித்த ஈஸ்வரன், ரதிதேவியின் உருக்கமான வேண்டுகோளால் மன்மதனை பங்குனி உத்திரத்தன்றுதான் உயிர்ப்பித்து ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி செய்தார்.

திருவையாறு அருகேயுள்ள திங்களூர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று காலை 6.00 மணிக்கு சூரிய ஒளிக்கதிர் சிவலிங்கத்தின் மேல்படும். அதுபோல மறுநாள் மாலை 6.00 மணிக்கு சந்திரனின் ஒளிக்கிரணங்கள் சிவலிங்கத்தின்மேல் படும் அதிசயத்தைக் காணலாம். இதை தரிசிப்போரின் பாவங்கள் விலகும். அன்று தண்ணீர்ப் பந்தலமைத்து நீர் மோர், பானகம் வழங்கினால் வற்றாத வளம்பெறலாம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதமிருப்போருக்கு மறுபிறவியில்லை என்பர்.

முருகன் ஆலயமெங்கும் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறும். சிவாலயங்களிலும் இவ்விழா நடத்துவதைக் காணலாம். பழனியில் இவ்விழா பத்து நாட்கள் நடைபெறும். பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்துவருவார்கள். கொங்கு நாட்டு மக்கள் காவிரியின் கொடுமுடி தீர்த்தத்தை காவடியில் நிரப்பி, மகுடேஸ்வரரை வழிபட்டு, கால்நடையாக தீர்த்தக் காவடியுடன் பழனிவந்து தண்டாயுதபாணியை வழிபட்டுச் செல்வார்கள்.

கர்நாடகாவிலுள்ள மேலக்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் பங்குனி பிரம்மோற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். அதில் வைரமுடி சேவை விழா ஆறாம் நாளான பங்குனி உத்திரத்தில் இரவு நடைபெறும்.

திருமால் தானே தோன்றிய நான்கு ஸ்வயம்வியக்த க்ஷேத்திரங்களில் நாராயணபுரம் ஒன்று. மற்றவை காஞ்சி, திருப்பதி, ஸ்ரீரங்கம் ஆகும். இதை காஞ்சி கொடையழகு, ஸ்ரீரங்கம் நடையழகு, திருப்பதி வடையழகு, மேலக்கோட்டை முடியழகு என்பர்.

Thursday, March 29, 2018

பல்லி விழுந்த உணவு விஷமா?

பல்லி விழுந்த பால் அல்லது உணவை உட்கொண்டால் அது விஷமாகிவிடும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

உண்மையில்லை. பல்லிகளில் ஒரு சில இனங்களே விஷமுள்ளவை. நம் வீடுகளில் உலவுகிற பல்லிகளுக்குத் துளியும் விஷமில்லை. இருந்தாலும் இவற்றின் உடலில் சால்மோனெல்லா எனும் பாக்டீரியாக்கள் இருக்கச் சாத்தியம் உண்டு. பல்லி விழுந்த உணவில் இவை கலந்து, அந்த உணவை நஞ்சாக்கிவிடலாம். அப்போது இந்தக் கிருமிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. என்றாலும், இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து வளர்ந்து, அறிகுறிகள் தெரிய ஒரு வாரம் ஆகும்.

பய வாந்தி:

அப்படியானால், “பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள் உடனே வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகச் செய்திகள் வருகின்றனவே! எப்படி?” என்றுதானே கேட்கிறீர்கள்?

இவை பெரும்பாலும் பயத்தாலும், பதற்றத்தாலும் ஏற்படுகின்றன. பல்லி விழுந்த உணவைச் சாப்பிடும்வரை ஒன்றும் தெரிவதில்லை. உணவு காலியாகும்போது பாத்திரத்தின் அடியில் இறந்து கிடக்கும் பல்லியைப் பார்த்ததும்தான் சாப்பிட்டவருக்குப் பயம் தொற்றும்.

“ஐயோ, பல்லி விஷமாச்சே..” என்று மனம் பதறும். “உடலுக்கு ஏதாவது கேடு செய்துவிடுமோ” என்று பீதி கிளம்பும். இந்த மனரீதியிலான அழுத்தத்தின் விளைவாகத்தான் வாந்தியும் மயக்கமும் வருகின்றன. அதிலும் பள்ளிகளிலும் விடுதிகளிலும் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் பயந்து மொத்தக் குழந்தைகளும் வாந்தி எடுப்பார்கள்.

பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட உணவை சாம்பிள் எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பி. ஒரு வாரம் கழித்து ‘அதில் எந்தவித விஷமும் இல்லை’ என்று ரிப்போர்ட் வந்தது.

உணவைப் பாதுகாப்பாக மூடி வைத்திருக்க வேண்டியதும், வீடு, அலுவலகம் பள்ளி, விடுதி, சமையலறை போன்றவை சுத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். அப்போதுதான் பல்லிகளின் வருகையைத் தவிர்க்க முடியும்.

Wednesday, March 28, 2018

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)



எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> 6,0393476E-9 –> nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!

Tuesday, March 27, 2018

மாதம் ரூ.55,000 சம்பாதிக்கலாம் | EARN MONTHLY RS.55,000 WITH LIGHT SHOP

லாந்தர் விளக்குகளையும், விறகு அடுப்பு களையும் இன்றைய தலைமுறையினரில் பலர் பார்த்திருக்ககூட வாய்ப்பு இல்லை. காரணம், பகல் வேளைகளில் கூட பல வீடுகளிலும் அலுவலகங்களிலும் மின்சார விளக்குகள் ஒளிர்ந்துகொண்டு இருப்பதை நாம் பார்த்திருப்போம்.



மேலும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி பழக்கப்பட்டுவிட்டோம். எனவே, மின்சாதனங்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தநிலையில், எலெக்ட்ரிக்கல் கடை என்பது லாபம் தரும் தொழில்தான்.

’’எலெக்ட்ரிக்கல் கடை வைப்பதில் மூன்று வகை உள்ளது.


  • ஏதாவது ஒரு மின்சார சாதனத்தை மட்டுமே விற்கும் கடைகள். உதாரணம், ஃபேன்களை விற்கும் நிறுவனங்கள். 
  • இரண்டாவது வகை, ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிக்கல் பொருட்களை மட்டும் விற்கும் டீலர்கள். இவைகூட கொஞ்சம் பெரிய அளவிலேயே செய்வார்கள். 
  • மூன்றாவது, எல்லாவிதமான மின்பொருட்களையும் விற்கும் சிறிய கடைகள்".

ஒரு மெடிக்கல் ஷாப் தொடங்க பி.பார்ம் (B.Pharm) என்னும் கல்வித்தகுதி வேண்டும். அரசு மருத்துவத் துறையிலிருந்து லைசன்ஸ் வாங்க வேண்டும்.

எலெக்ட்ரிக்கல் ஷாப்பிற்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. நேரடியாகவே ஒருவர் தொடங்கலாம்.

மார்க்கெட் பகுதியில் கடை போட்டிருப்பவர்கள் பதிவு செய்வதுபோல் ஒரு டிரேடராகப் பதிவு செய்துகொண்டால் போதும்.

ஜி.எஸ்.டி. இல்லாவிட்டாலும் ஒரு வியாபாரியாகப் பதிவு செய்துகொள்வது அவசியம்.

கடை தொடங்க நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும். கடைக்கு அட்வான்ஸ் சுமார் 1 லட்சம் வரை ஆகும். இது கடை இருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடலாம்.

அடுத்தது ஸ்டாக். பொருட்களை ஸ்டாக் வைத்துக்கொள்ள குறைந்தது ரூ.1 லட்சம், இரண்டு லட்சம் இருந்தால் நல்லது.

மின் பொருட்கள் கொஞ்சம் விலை அதிகம். அதனால் இவ்வளவு தேவைப்படுகிறது. மிக முக்கியமானது ஸ்டாக்கை வைக்கும் அலமாரிகள்.

பெரும்பாலும் கண்ணாடிப் பொருட்கள். ஒரு ஹார்டுவேர் ஷாப்பில் இரும்புச் சாமான்களைக் கொட்டி வைப்பதுபோல் இவற்றை வைக்க முடியாது. அந்தந்தப் பொருட்களை எளிதாக வைக்கவும் எடுக்கவும் வசதியான அலமாரிகளில் வகைப்படுத்தி வைக்க வேண்டும்.

முன்கடையில் இருக்கும் அலமாரி பிறகு உள்ளே மீதியுள்ள ஸ்டாக்கை வைக்க அலமாரி. இந்த உட் ஒர்க் மற்றும் கணினி சேர்ந்து ரூ.1 லட்சம். ஆக மொத்தம் ரூ.4 லட்சம்.

செலவுகள்: 

செலவுகள் என்று பார்த்தால், பெரும்பாலும் மற்ற கடைகளைப்போல் வாடகை, மின்சாரம் போன்றவைதான். தொடர்ந்து விளம்பரம் செய்வதற்குக் கூடுதல் செலவுகள் உண்டு. புதியதாக உருவாகும் நகர்ப்பகுதிகளில் ஒரு கடை இருந்தாலும் இன்னொன்றைத் தாங்கும். ஆனால் அருகருகே இரண்டு கடைகளைத் தவிர்க்கலாம்.

புதியதாகக் கடை தொடங்கியவர் விளம்பரம் செய்வதற்கு, எளிய வழி காலம்காலமாக உள்ள துண்டுப் பிரசுரம். ஒவ்வொரு வீடாகச் சென்று கொடுப்பதற்கு ஆட்களை நியமிக்கலாம்.

முதலில் ஒவ்வொரு மாதமும் விநியோகிக்கலாம். பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செய்யலாம். இதை விட இன்னொரு சுவாரஸ்யமான யுக்தி ஒன்று உள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரைக் கொண்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் மின்சாதன பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்.

மின்சார பயன்பாட்டில் உள்ள சிக்கல் ஷாக் என்ற ஆபத்து ஆளையே கொன்றுவிடும். அதனால் சிறுவர், பெரியவர் என அனைவரும் எப்படி பாதுகாப்பாக மின்சாதனங்களைக் கையாள வேண்டும் என்பதைப் பாடமாக எடுக்கலாம்.

குறிப்புகளைக் கொண்ட கையேடுகளை விநியோகிக்கலாம். அதில் நம் கடையின் பெயரை அச்சிடலாம். இந்தக் குறிப்புப் புத்தகத்தைப் பள்ளி வாசலிலும் விநியோகிக்கலாம்.

இதில் லாபத்துக்கான வாய்ப்பு எப்படி என்றால், நாம் டிரேடிங்தான் செய்கிறோம். அதாவது, வாங்கி விற்கிறோம். சில பொருட்களில் 20% கமிஷன் உண்டு.

சிலவற்றில் 15% கிடைக்கும். நாம் சராசரியாக 15% என்று வைத்துக்கொள்வோம். செலவு 5 முதல் 7% வரை இருக்கும். செலவு போக கையில் லாபம் குறைந்தது 7% நிற்கும்.

உதாரணமாக, ஒரு மாத வியாபாரம் ரூ.1 லட்சம். விற்பனை லாபம் ரூ.15000, வாடகை ரூ.5000, இதர செலவுகள் 5000 என்று வைத்துக் கொண்டால் மீதம் ரூ.5000. இது தோராயமான கணக்கு. இந்த வியாபாரத்தையே இரண்டு லட்சமாக ஆக்கினால் அதில் கிடைக்கும் மொத்த லாபமும் நமக்கே.

ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வியாபாரம் சாத்தியமா என்று பார்த்தால், ஒரு குண்டு பல்ப் ரூ.15. டியூப் லைட் மட்டும் ரூ.40. பட்டியோடு சேர்த்து ரூ.200. எல்.இ.டி. பல்ப் ரூ.70 முதல் தொடங்குகிறது. எல்.இ.டி. டியூப் லைட் ரூ.450 முதல் விற்கப்படுகிறது.

இவைதான் அதிகமாக விற்கும் பொருட்கள். இதைத் தவிர என்னென்ன பொருட்களை விற்கலாம் என்றால், இன்வேட்டர் இப்போது பலரும் பயன்படுத்தும் ஒன்று. இதில் பேட்டரி ரீசார்ஜ் முதல் சர்வீஸிங் வரை நமக்கு வியாபார வாய்ப்பு இருக்கிறது.

வீட்டிற்கு அருகே ஒரு கடை இருப்பதையே எல்லோரும் விரும்புவர். பண்டிகைகள், வீட்டு விசேஷங்கள் போன்றவற்றிற்கு மின் அலங்காரம் இப்போது மிகவே அதிகமாக சூடுபிடித்திருக்கிறது.

இந்தச் சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள் நமது வாடிக்கையாளர்கள். எமெர்ஜன்சி லைட்டும் சோலார் லைட்டும் இன்னும் சில வருடங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

சிறிய அளவு ஜெனரேட்டரை வாடகைக்குக்கூட விடலாம். மாத வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் நிறுவனங்கள் இருக்கின்றன. முன்பே கூறிய மூன்று நிலையில் இரண்டு நிலை விற்பனை குறித்த தோராயமான ஒரு புள்ளிவிவரத்தை இப்போது பார்ப்போம்…

முதல் வகை (ஒரே பொருளை மட்டும் விற்பனை செய்வது)

* விற்பனைத் தொகை - ரூ.1,00,000

* விற்பனை லாபம் - 15% (ரூ.15,000)

* மாதச் செலவு - ரூ.10,000.

* மீதம் - 5,000

இரண்டாம் வகை (ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிகல் பொருட்களை மட்டும் விற்பது)

* விற்பனைத் தொகை - ரூ.5,00,000

* விற்பனை லாபம் - 15% (ரூ.75,000)

மாதச் செலவு ரூ.20 000 (வாடகை போன்ற செலவுகள் அப்படியே இருக்கும். பெட்ரோல் போன்ற செலவுகள் கூடியிருக்கும்)

* மீதம் - ரூ. 55,000.

இங்கே நாம் கணக்கில் எடுத்திருப்பது இரண்டு வகையான விற்பனை. ஒன்று டிரேடிங். இன்னொன்று சுற்றிலும் உள்ள கடைகளுக்கு எல்.இ.டீ பல்பையும் டியூப் லைட்டையும் விற்பது. அலுவலகங்களில் தொழிற்சாலைகளில் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டால் கூடுதல் வியாபாரம் கிடைக்கும். விலையில் சலுகை தரவேண்டி யிருக்கும். ஆனாலும் நேரடி லாபம் 7% கிடைக்கும்.

நம் பொருளை வாங்க 25 கடைகள் இருந்தால் போதும். வியாபாரத்தை ஆரம்பித்துவிடலாம். ஒரு கடைக்கு மாதத்திற்கு ரூ.10,000 விற்பனை செய்யலாம்.

ஒரு கடைக்கு பல்பில் 50, டியூப் லைட்டில் 50 என சப்ளை செய்து ஆரம்பிக்கலாம். ஃபேன் போன்றவைகளும் இதில் அடக்கம். கொஞ்சம் கொஞ்சமாக மாத விற்பனை ரூ.10,000 என்று உயர்ந்தாலே 2,50,000 ஐ எட்டலாம்.

அதன் பின்னர் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு

தாய் தமிழ்நாடு விட்டுவந்த போதும், அயல்மண்ணில் தமிழையும் அதன் சொல்லின் சிறப்புதனையும் தைவானில் வாழும் தமிழ் மக்களிடம் கொண்டுச்செல்லும் சீரியபணிதனை தைவான் தமிழ் சங்கம் செவ்வனே செய்து வருகிறது. அவ்வண்ணமே, தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் ஐந்தாம் அமர்வு தைபேய் (Taipei) நகரில் உள்ள தேசிய தேசிய தைபேய் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் (National Taipei University of Science and technology) சிறப்பாக நடைபெ ற்றது. முனைவர். சுப்புராஜ் அவர்களின் சீரிய தலைமையில் திரு குபேந்திரன் அவர்கள் அவை முன்னவராக இருந்து வழிநடத்த சிறப்பாக நடைபெற்றது. 

இலக்கிய நோக்கில் தமிழர்களின் வாழ்வியல் முறைகள் :

முதலாவதாக ‘இலக்கிய நோக்கில் தமிழர்களின் வாழ்வியல் முறைகள்’ என்ற தலைப்பில் கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியரும் வர்மக்கலை ஆசானுமான முனைவர் சண்முகம் அவர்கள் காணொளி மூலம் சிறப்புரையாற்றினார். அவர் தன் உரையின் தொடக்கமாக தைவான் தமிழ்ச்சங்கத்தின் சீரிய தமிழ் தொண்டினை பாராட்டியும் அது மென்மேலும் வளர வாழ்த்துக்களும் கூறி தன் உரைதனை தொடர்ந்தார். 

தமிழ் மொழியின் தொன்மை, பழமை, செழுமை ஆகியவற்றை இவ்வுலகம் நம் முன்னோரின் கூற்றுகள் மூலம் அறிய இயலும். எனவேதான் பேரறிஞர்கள் பலரும் உலகில் தோன்றிய மொழிகளில் முதன்மையானது தமிழ் எனக்கூறுகின்றனர். தமிழ் என்ற சொல்லை பலமுறை சொல்லும்போது அமிழ்து என வரும். எனவேதான் பாரதிதாசன் தமிழுக்கு அமிழ்து என்று பேர் என்றார். அமிர்தம் எனப்படும் அமிழ்தை உண்டவர்க்கு அழிவில்லை என்பர் அதுபோலவேதான் தமிழை பேசியவர்கள், பேசுபவர்கள், தமிழை சுவாசிப்பவர்கள் இருக்கும்வரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் அழிவில்லை. இதற்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கே சான்று. இந்த உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தும் எதிலும் சொல்லப்படாத ஒரு அற்புதமான தத்துவம். 

உலகில் உள்ள அனைவரையும் உறவினர்களாக பார்க்கவேண்டும் என்ற இத்ததுவத்தை தமிழனை தவிர எவராலும் சொல்லபபடவில்லை.மேலும் ஐந்தாம் நூற்றாண்டில் திருமூலரால் சொல்லப்பட்ட ‘ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்’, இரண்டாம் நூற்றாண்டில் வள்ளுவனால் சொல்லப்பட்ட ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘காக்கை குருவிகளும் எங்கள் சாதி’ என்ற பாரதியின் கூற்று, ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் கூற்று என பழந்தமிழின் கூற்றுகள் பலவற்றையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த உலகிற்கு இந்தகைய உயரிய தத்துவங்களை தமிழனால் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் பல்வேறு தமிழ் சித்தாந்தங்களை எடுத்துரைத்து ஐம்புலன்கள் எவ்வாறு நம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறது என்பதையும் தமிழ் மொழி மேலும் பல வாழ்வியல் நெறிமுறைகளை இந்த உலகிற்கு கொடுத்துள்ளது என்பதை பற்றியும் சிறப்பாக பேசிமுடித்தார்.

பெண் ஏன் அடிமையானாள் :

இரண்டாவதாக ‘பெண் ஏன் அடிமையானாள்; என்கிற தலைப்பில் தேசிய தைவான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் திரு ரஜிஷ்குமார் குமார் அவர்கள் பேசினார். தமிழுக்கும் திராவிடத்துக்குமான தொடர்பு, திராவிட சொல்லின் மூலம் மற்றும் அறிமுகம், தமிழ்நாடு, தந்தை பெரியார், அண்டை தென்மாநிலங்கள் மற்றும் திராவிடத்துக்கும் உள்ள தொடர்புகள், திராவிட இயக்கங்கள் தமிழுக்கு செய்த தொண்டுகள் ஆகிய தலைப்புகளில் பேசினார்.

அவர் தனது உரையின் தொடக்கமாக சமத்துவத்தின் அடையாளமே தோழர் என்ற சொல் எனவும் தற்போதய பெண்களின் மீதான தாக்குதல் களுக்கு வருத்தங்ககளையும் கண்டனத்தையும் பதிவு செய்தார். 

பெண்களின் மீதான தாக்குதல்களுக்கு நம் சமூகம் கொடுக்கும் தீர்வுகள் அனைத்தும் பெண்களின் மீதான அடக்குமுறையும் ஆணாதிக்க சிந்தனைகளின் வெளிப்பாடே. இன்றைய சூழ்நிலையில் காதல் என்பது உன்னதமானது, மென்மையானது மற்றும் கண்டவுடன் வரும் காதலே சிறப்பானது என திரைப்படங்களின் ஊடாக வெளிப்படுத்தபப்டுகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அவ்வாறு நடப்பது இல்லை அது தகுதி, பொருளாதாரம், சாதிய கண்ணோட்டம் இதன் அடிப்படையிலே வருகின்றது. மேலும் பெற்றோர்களின் வற்புறுத்துதலும் காதலை தவறான பாதைகளில் வழிநடத்துகிறது. இதிலும் பெண்களின் ஒருதலைக்காதல் தற்கொலையிலும் ஆண்களின் ஒருதலைக்காதல் கொலையிலும் முடிகிறது. இது பெண்களின் மீதான ஆணாதிக்க சிந்தனை எத்தகைய கொடூரமாக திணிக்கப்படுவதை காட்டுகிறது.

அடுத்ததாக கற்பு என்ற விடயம் உண்மைத்தண்மை என்ற பொருளால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பெண் தனக்கான துணையை தானே தன் விருப்பபடி தேர்ந்தெடுத்து உடலுறவு கொண்டால் அது கற்பிழப்பு எனவும் , அதுவே பெற்றோர்களால் தெரிவு செய்யபப்ட்ட ஆணுடன் இருந்தால் நேர்மையானது உண்மையானது எனவும் அப்பெண் கற்புடன் வாழ்கிறாள் என போற்றப்படுகிறது. கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் ஆண்களுக்கு அல்ல. என்று பெண்கள் கற்பு என்கிற விடயத்தின் மூலமாக அடிமையாக்கப்படுகிறாள். இத்தகைய அடிமைப்படுத்துதல் ஆதிகாலத்தில் இருந்து நம் சங்க இலக்கிய காலம் தொட்டு இன்றளவும் தொடர்கிறது. இதற்கு சான்றாக நம் தமிழில் சிலப்திகரம் முதல் பல நூல்கள் காணப்படுகிறது.

ஆதிகாலம் முதலே அனைத்து மதத்திலும் சரி, பின்னாளில் எத்தகைய சாதியகூறுகள் வந்தபோதும் சரி, பெண்களுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்டே வந்துள்ளது. நம் இந்திய திருநாட்டில் அறிஞர்கள் பலர் வந்தாலும் அண்ணல் அம்பேத்காரும் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும் பெண் கல்விக்காக போராடி பெற்று தந்தனர். மேலும் அவர் தன் உரையில் பல்வேறு சான்றுகளை எடுத்துரைத்து பெண் ஏன் அடிமையானாள் என்பதை விரிவாக பேசி முடித்தார். இவ்வுரையின் விவாத்தின் போது இந்திய- தைவான் ஒருங்கிணைப்பின் முதன்மை இயக்குனர் திருமிகு ஸ்ரீதரன் மதுசூதனன் தன் மனைவியோடு கலந்து கொண்டு தன் சிறப்பான விளக்கங்களை அளித்தார்.

தமிழர்களும் ஆன்மிகமும்:

மூன்றாவதக தேசிய டொன்ஹுவா பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் திரு தயானந்த பிரபு அவர்கள் ‘தமிழர்களும் ஆன்மிகமும்’ என்ற தலைப்பில் பேசினார். பண்டைய தமிழர்களின் வழிபட்டு முறை இயற்கையை வணங்குதல் ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முனபாக எழுதப்பட்ட திருக்குறளில் திருவள்ளுவர் '' தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.'' என்ற குறள் மூலம் நம் முன்னோர்கள் கடவுளை நம்பியதை விட அவரவர் முயற்சி உழைப்பு ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து வாழ்ந்துள்ளனர் என்பதும், மதம் சார்ந்து இல்லாமல் தமிழன் வாழ்ந்தான் என்பது புலப்படும். 

மேலும் தமிழர்களின் வழிபாட்டு முறை தற்போதுள்ள முறையாக இருந்திருக்க வாய்ப்பு குறைவு, இதற்கு பல சான்றுகள் உள்ளன. அதில் முதலாவதாக இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்துப்பாடல் என் ஒன்றும் இல்லை. அதில் வாழ்த்துப்பாடல் திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் மாமலை போற்றுதும் என பாடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதம் என ஒன்றும் கடவுள் என ஒருவர் இருந்ததாக தெரியவில்லை. எனவே பண்டைய தமிழன் இயற்கையை போற்றி வந்துள்ளான். நம் பொங்கல் பண்டிகையே இதற்கு மிகப்பெரிய சான்று ஆகும்.

மேலும் கீழடி தொல்லியல் ஆய்வுகள் இத்தகைய இயற்கை வழிபாட்டிற்கு வலுசேர்ப்பதாக உள்ளது. அங்கு தோண்டி எடுக்கப்பட்டுள்ள பொருட்கள் சுமார் 3000~3500 ஆண்டுகள் பழமையானது. அதில் மதம், கடவுள் ஆன்மிகம் பற்றிய இத்தைகைய சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. அங்கு கிடைக்கபெற்ற ஒரு தங்க கட்டிலில் கோதை என்ற சொல்லும், மண் ஓட்டில் மாடச்சி என்ற சொல் இருந்ததாகவும் அறியப்பட்டுள்ளது, எனவே பண்டைய தமிழன் மத வழிபாடு அன்று, இயற்கை மற்றும் முன்னோர் வழிபாடு செய்ததாக அறியப்படுகிறது.

வரலாற்று தரவுகள் அனைத்தும் பண்டைய தமிழன் இயற்கை மற்றும் முன்னோர் வழிபாடு செய்ததாகவே கூறுகிறது. ஆனால் இதிகாசங்கள் மட்டுமே கடவுள் ஆன்மிகம் என பல்வேரு கோட்ப்பாடுகளை தருகிற்து.. இதிகாசங்கள் கற்பனை கலந்து எழுதப்பட்டவை. ஆனால் வரலாற்று கூறுகள் நடந்தவற்றை அப்படியே எழுதுதல் ஆகும். மேலும் அவர் தன் உரையில் தமிழனின் இயற்கை மற்றும் முன்னோர் வழிபாட்டிற்கான பல்வேறு சான்றுகளை அடுக்கி பேசினார். தற்போதுள்ள மத ஆன்மீக குருக்கள் நல்லவற்றை போதிக்காமல் மத துவேஷங்களையும் மக்களை தவறான பாதையில் வழிநடத்துவதாகவும் கூறி தன் உரையை முடித்தார்.

மருந்தில்லா மருத்துவம்:

நான்காவதாக தேசிய தைவான் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் திரு முத்து சங்கர் அவர்கள் ‘மருந்தில்லா மருத்துவம்’ என்ற தலைப்பில் பேசினார். நம் உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை உணவு பழக்க வழக்கங்கள் மூலம் சரிசெய்ய முடியும் ,ஆனால் மற்ற விபத்து போன்றவற்றிற்கு மருத்துவமனைக்கு செல்வது அவசியம் என பேசினார். மேலும் ஒரு நோய்க்கு மருத்துவம் என்பது நான்கு கூறுகளைக் கொண்டது. அவை நோய் எதிர்ப்பு சக்தி, மருத்துவரால் நோயின் தன்மை அறிதல், அதற்கேற்ற மருந்து அளித்தல் மற்றும் அத்தகைய மருந்துகளை தயாரித்தல். இத்தகைய நான்கு கூறுகளை தவிர்த்து நோயின் தன்மைக்கு ஏற்ப உணவு பழக்க வழக்கங்கள் மூலம் சரி செய்தலே சிறந்தது. 

‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்பது தமிழ் பழமொழி. எனவே எதையும் உண்ணும்போது அவ்வுணவை ரசித்து ருசித்து நன்றாக மென்று உண்பது அவசியம். அவ்வாறு செய்யும் போது நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. மேலும் ஒரு நோயின் தன்மையை விளக்கும் விதமாக அவர் சர்க்கரை வியாதியை பற்றி விரிவாக பேசினார். சர்க்கரை நோய் என்பது வியாபார நோக்கிற்காக உருவாக்கப்பட்ட நோய். சர்க்கரை அல்லது குளுக்கோஸ் என்ற வேதிப்பொருள் நம் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதது. இது நம் உண்ணும் உணவில் இருந்து பெறப்படுகிறது.

செரித்த உணவில் இருந்து பெறப்பட்ட தேவையான அளவு குளுக்கோஸ் போக மீதமான குளுக்கோஸ் கிளைகோஜன் எனும் வேதிப்பொருளாய் மாற்றப்பட்டு உடலின் தசைகளில் சேமித்து வைக்கப்படும். தேவையானபோது மீண்டும் அவை குளுக்கோஸாக மாற்றி மீண்டும் பயன்படுத்தப்படும். சேமிக்கப்பட்ட க்ளைகோஜன் தேவையானபோது எல்லாம் பயன்படுத்தப்பட்டு முடிந்துவிடும் பட்சத்தில் குறை சர்க்கரை நோய் எனவும், இதுவே தேவைக்கு அதிகப்படியான கிளைகோஜன் சேமித்து வைக்கும் பட்சத்தில் அதி சர்க்கரை நோய் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சரியான உணவு பழக்க வழக்கங்களின் மூலமும், சரியான உடற்பயிற்சி மூலமும் கட்டுப்படுத்த முடியும். இதுவே மருந்தில்லா மருத்துவம் ஆகும். இதற்கான பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் சான்றுகள் உள்ளது எனவும் பல தீர்வுகள் உள்ளன எனவும் பேசிமுடித்தார். இந்த தமிழ் அமர்வில், தைவான் தமிழ்ச்சங்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், தைவான் வாழ் தமிழ் மாணவ மாணவிகள் திரளாக கலந்துகொண்டு, அதன் பின் நடைபெற்ற விவாதங்களிலும் பங்கெடுத்தார்கள்.

Monday, March 26, 2018

கறவை மாட்டு பாலில், புரதச்சத்து அதிகரிக்க

பாலில் புரதச்சத்து குறைவாக இருந்தால், அதன் விலை குறைந்து விடும். எனவே, கறவை மாடுகளுக்குப் புரதச்சத்துள்ள தீவனங்களைக் கொடுக்க வேண்டும்.

பாலில் புரதச்சத்து குறைவாக உள்ளதை, விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். பால் கறக்கும் போது, நுரை வந்தால் தான், புரதச்சத்து நன்றாக இருக்கிறது என, அர்த்தம்.
நுரையில்லாமல் தண்ணீர் போல இருந்தால், புரதச் சத்து பற்றாக்குறை உள்ளதை புரிந்து கொள்ளலாம். புண்ணாக்கு, பருத்திக் கொட்டை போன்ற வற்றை தீவனமாக கொடுத்து, இதை சரி செய்ய முடியும்.

தவிர, 'டானின்' - சுருங்கிய வடிவில் உள்ள புரதம், சவுண்டல், சூபாபுல், கிளரிசீடியா, வாத நாராயணா போன்ற மரங்களின் இலைகளையும் தீவனமாக கொடுக்க வேண்டும்.இவற்றை புறவழி புரதங்கள் என்பர். இவை மாட்டின் இரைப்பையில் உள்ள நான்காம் அறையில் தங்கி, செரிமானம் ஆகும்; இதனால், பாலில் புரதம் கூடும். 

பாலில், எஸ்.என்.எப்., என்று சொல்லப்படும், கொழுப்பு தவிர, பிற சத்துக்களின் அளவு குறைவாக இருந்தால், தாது உப்புக் கலவையை கொடுக்க வேண்டும்.சிலர் இதை, தீவனத் தொட்டியில் கொட்டி விடுகின்றனர்; அது தவறு. அப்படி செய்வதால், தொட்டியின் அடியில் இவை தங்கி, மாடுகளுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காது.இதை தவிர்க்க, தீவனத்துடன் தாது உப்புக்களை நன்றாக பிசைந்து, அதனுடன், 50 கிராம் சமையல் சோடா உப்பையும் கலந்து கொடுக்க வேண்டும். 

இந்தத் தீவனத்தை தொடர்ந்து கொடுக்கும் போது, ஒரு வாரத்திலேயே பாலில் மாற்றம் தெரியும். இந்தத் தீவன முறையை தொடர்ந்து பின்பற்றினால் பாலில் புரதச்சத்து அதிகரிப்பதுடன், மாடும் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீரக கற்களை கரைக்கும் ஜூஸ்

ஒருவருக்கு சிறுநீரக ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. சிறுநீரகத்தில் சிறு பிரச்சனை என்றாலும், உடலில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதிலும் சிறுநீர கற்கள் வந்தால், அதனால் தாங்க முடியாத அளவில் கடுமையான வலியை உணரக்கூடும்.

சிறுநீரக கற்கள் வருவதற்கு அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து தேங்குவது தான் காரணம். சிறுநீரக கற்களைக் கரைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அதில் அதிகளவு நீரைப் பருகுவது, பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.


சில நேரங்களில் பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வருவதன் மூலமும், சிறுநீரக கற்கள் வருவதையும், ஏற்கனவே இருக்கும் சிறுநீரக கற்களைக் கரைக்கவும் முடியும்.


தேவையான பொருட்கள்:


ஆரஞ்சு - 1
ஆப்பிள் - 1
தர்பூசணி - 4 துண்டுகள்
எலுமிச்சை - 1
ஐஸ் கட்டிகள் - 4


தயாரிக்கும் முறை:


ஆப்பிளை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு பழத்தின் தோலுரித்து, விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் இரண்டையும் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அத்துடன் தர்பூசணி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து மீண்டும் அரைத்து, ஐஸ் கட்டிகளை சேர்த்தால், ஜூஸ் ரெடி!


இந்த ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடிக்க வேண்டும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளரும், மாலையில் ஒரு டம்ளரும் குடிப்பது நல்லது.


ஜூஸின் நன்மைகள்:


இந்த ஜூஸில் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்களை உடைப்பதில் மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும் இது உடலில் கால்சிய தேக்கத்தைக் குறைக்கும். மேலும் இந்த ஜூஸில் உள்ள தர்பூசணியில் நீர்ச்சத்தும், பொட்டாசிய சத்தும் உள்ளது. இதுவும் சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும்.


சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் தர்பூசணி ஜூஸை குடித்து வந்தாலும், கற்கள் கரையும்.

Sunday, March 25, 2018

திருநீறு (விபூதி) பற்றிய தகவல்கள்

திருநீறு (விபூதி) பற்றிய தகவல்கள்:

திருநீறு (விபூதி):

இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம் எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம். திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.

1. கல்பம்
2. அணுகல்பம்
3. உபகல்பம்
4. அகல்பம்

கல்பம்:

கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.


அணுகல்பம்: 


ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

உபகல்பம்:

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

அகல்பம்:

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.



நீரில்லாத நெற்றிபாழ் என்பதும் ஆன்றோர் வாக்கு காலையில் எழுந்து நீராடி இறைவனை வணங்கி நெற்றி நிறைய நீறு பூசிகொள்பவனே நிறைமனிதன் என்பது இதன் கருத்து நெற்றியில் பூசப்படும் நீறு சிவசின்னம் மட்டுமல்ல அது மனிதனை மாற்று மனிதர்களின் எதிர்மறை சிந்தனையிலிருந்து காக்கும் கவசமாகவும் மருத்துவ பொருளாகவும் இருக்கிறது.

எழுத்தோலைகள் பற்றிய அரிய தகவல்கள்

எழுத்தோலைகள் (ஓலைச்சுவடிகள்) பற்றிய அரிய தகவல்கள்:

பாறைகளில் எழுதி வந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் வரை பனையோலையில் எழுதுகின்ற முறை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்படுகின்றன.

எழுத்தோலைகளில் அமைப்பு, செய்தி போன்றவைகளுக்கேற்ப அவை வகைப்படுத்தப்பட்டன.

நீட்டோலை:

திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலை “நீட்டோலை” என அழைக்கப்பட்டன.

மூல ஓலை:

ஓலைச் செய்தியைப் படியெடுத்து வைத்துக் கொள்ளும் முறை அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இந்த ஓலைகளை “மூல ஓலை” என அழைத்தனர்.

சுருள் ஓலை:

ஓலை ஆவணங்கள் நாட்டுப்புற மகளிர் அணிந்து வந்த சுருள் வடிவமான காதோலை போல் சுருட்டி வைத்துப் பாதுகாக்கப்பட்டன இவை “சுருள் ஓலைகள்” எனப்பட்டன. இதை “சுருள்பெறு மடியை நீக்கி” என பெரியபுராணத்திலுள்ள பாடல் மூலம் அறிய முடிகிறது.

குற்றமற்ற ஓலை:

மூளியும் பிளப்பும் இல்லாத ஓலை “குற்றமற்ற ஓலை” எனப்பட்டது.

செய்தி ஓலைகளின் வகைகள்:

எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக் கொண்டும் அவை தனிப் பெயர்களில் அழைக்கப்பட்டன.

நாளோலை:

தமிழகத்திலுள்ள கோவில் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓலை “நாளோலை” எனப்பட்டது.

திருமந்திர ஓலை:

அரசனது ஆணைகள் எழுதப்பட்ட ஓலை “திருமந்திர ஓலை” எனப்பட்டது. இதை எழுதுவதற்காக அரசவைகளில் ஓலை நாயகம் என்பவர் இருந்தார். அரசனது ஆணைதாங்கிய எனப் பொருள்படும் “கோனோலை”, “சோழகோன் ஓலை” போன்ற சொற்கள் செப்பேடுகளில் காணப்படுகின்றன.

மணவினை ஓலை:

திருமணச் செய்தியைத் தெரிவிக்கும் ஓலை “மணவினை ஓலை” எனப்பட்டது. இதன் மூலம் திருமணச் செய்தி உற்றார் உறவினர்க்குத் தெரியப்படுத்தியது.

சாவோலை:

இறப்புச் செய்திகளைக் கொண்டு சென்ற ஓலை “சாவோலை” எனப்பட்டன.


இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் சுமார் 30,000 ஓலைச்சுவடிகள் பதிப்பிக்கப்படாமல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பின்வரும் விகிதத்தில் இந்தியாவில் ஓலைச்சுவடிகள் உள்ளன:

மருத்துவம் – 50%
சோதிடம் – 10%
சமயம் – 10%
கலை, இலக்கியம் – 10%
வரலாறு – 5%
இலக்கணம் – 5%
நாட்டுப்புற இலக்கியம் – 10%

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகள் உள்ள இடங்கள்:

சென்னை:

  • சென்னைப் பல்கலைக்கழகக் கீழ்த்திசைச் சுவடி நூலகம்
  • உ. வே. சா. நூல் நிலையம்
  • பிரமஞான சபை நூலகம்
  • தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
  • சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம்
  • ஆசியவியல் ஆய்வு நிறுவனம்.

காஞ்சிபுரம்:

காமகோடி பீடம், ஸ்ரீ சங்கராசாரியார் மடம்.

பாண்டிச்சேரி:

பிரஞ்சிந்திய கலைக்கழகம்.

விருத்தாசலம்:

குமார தேவ மடாலயம், விருத்தாசலம்.

திருச்சி:

குமார தேவ மடாலயம், துறையூர்

தஞ்சை:

  • சரசுவதி மகால் நூலகம்
  • தமிழ்ப் பல்கலைக்கழகம்
  • தருமபுர ஆதீன மடாலயம், மயிலாடுதுறை
  • ஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள்
  • திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை

மதுரை:

  • தமிழ்ச்சங்கம், மதுரை
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

கோவை:

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம், பேரூர்.

ஈரோடு:

கலைமகள் கல்வி நிலையம், ஈரோடு

Saturday, March 24, 2018

Idle Heroes

Idle Heroes:

Play Now

"Android Excellence Game" of Google Play. Play with 12 million global players! Join millions of other players around the world and start your journey from Sara Forest to the High Heaven, leading your band of heroes into ancient ruins to battle the forces of darkness! 


Final Fantasy XV : A New Empire

Final Fantasy XV : A New Empire:



Play Now


Alexis Ren is waiting for you! Join the adventure! Be the hero of your own Final Fantasy XV adventure in the brand new mobile strategy game Final Fantasy XV: A New Empire! Build your own kingdom, discover powerful magic, and dominate the realm alongside all of your friends! Final Fantasy XV: A New Empire 

Art Of Conquest


Art Of Conquest:



Art Of Conquest

Play Now
Revolution in strategy gaming! Besiege enemy strongholds to expand your kingdom, slay nefarious dragons with a band of legendary heroes, and challenge players around the world to epic real-time battles! Play now.



பார்வையை தெளிவுபடுத்தும் பொன்னாங்கண்ணி

பார்வையை தெளிவுபடுத்தும் பொன்னாங்கண்ணி:



பொன்னாங்கண்ணியை நன்றாக அரைத்து 20 மில்லி அளவுக்கு சாறு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், காய்ச்சிய பால் சேர்த்து வடிகட்டி குடித்துவர மஞ்சள் காமாலை மறைந்து போகும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். கண் நரம்பு, தசைகளை பலப்படுத்தும். பார்வையை கூர்மையாக்கும்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பொன்னாங்கண்ணி அற்புதமான கண் மருந்தாகி பலன் தருகிறது. 

ஈரலுக்கு பலம் தருவதாக அமைகிறது. புரதச்சத்து நிறைந்தது. ரத்த சோகையை போக்க கூடியது. சர்க்கரை நோயை தணிக்கிறது. வைட்டமின் ‘ஏ’ குறைப்பாட்டை சரிசெய்கிறது. பொன்னாங்கண்ணி கீரையை கொண்டு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், பொன்னாங்கண்ணி கீரை. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். 

இதனுடன் பொன்னாங்கண்ணி கீரை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். வடிகட்டி வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்துவர கண்கள் குளிர்ச்சி பெறும். கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும். உடல் குளிர்ச்சி பெறும். அன்றாடம் உண்ண கூடிய கீரைகளில் பொன்னாங்கண்ணியும் ஒன்று. உடலை பளபளப்பாக்கும். குளிர்ச்சி உடைய இது மிகுந்த சத்துக்களை உள்ளடக்கியது. ரத்த சோகையை போக்கும். 

பொன்னாங்கண்ணியை பயன்படுத்தி தோலுக்கு பொலிவு தரும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பச்சை பயறு, கஸ்தூரி மஞ்சள், பொன்னாங்கண்ணி கீரை, பால். ஒரு பாத்திரத்தில் பச்சை பயறு மாவு எடுக்கவும். சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்க்கவும். இதனுடன் பொன்னாங்கண்ணி கீரை சாறு, பால் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தலாம். தோல் வறட்சியாக இருக்கும் இடத்தில் பூசினால் வறட்சி நீங்கி தோல் பொலிவு பெறும். தோல்களில் உள்ள சுருக்கம் சரியாகும். 

பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் பொலிவு பெறும். கண் பிரச்னைகள் விலகி போகும். இதை பயன்படுத்துவது என்பது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். மழைக்காலங்களில் நகத்தில் ஏற்படும் தொற்று, வலிக்கான மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். அவரை இலையை அரைத்து சிறிது மஞ்சள், சுண்ணாம்பு சேர்த்து கலந்து நகத்தில் பற்றாக பூசிவர நகத்தில் ஏற்படும் சொத்தை சரியாகும். நகங்கள் ஆரோக்கியம் பெறும்.

மண்ணுளி பாம்பு

மண்ணுளி பாம்பு:-



மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப்பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும்.

#SANDBOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன.

இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இனிமேல் மண்ணுளி புழு என்றழைப்போம்.

இந்த மண்ணுளி மிகுந்த கூச்ச சுபாவம் மற்றும் பயந்த சுபாவம் கொண்டதாகும். இந்த பாம்பினால் மரணம் நிகழ்ந்ததாக இதுவரை எந்த பதிவும் இல்லை.

திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது?

இந்தக் கேள்விக்கான பதில் எங்கும் கிடைக்காது. ஏனெனில் இதற்கான உண்மையான பதில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பது தான் உண்மை.

மண்ணுளியின் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் மனிதருக்கு பயன்படும், கேன்சர், எச்.ஐ.விக்கு மருந்தாகப் பயன்படும் என்பவை அனைத்தும் கட்டுக் கதையே.

இந்தியாவின், குறிப்பாக தமிழர்களின் அடையாளமான இயற்கை விவசாயத்தை அழிப்பு முயற்சியான ஒரு அறிவியல் யுத்தம் (BIO WAR) என்பது தான் உண்மை.

மண்ணை உண்டு மண்ணிலேயே கழிவு செய்யும் மண்ணுளி புழு ஒரு இயற்கை உர உற்பத்திப் தொழிற்சாலை. இது இடும் எச்சம் வீரியமான இயற்கை உரம். ஒரு நிலத்தில் ஒரு மண்ணுளி புழு இருந்தால் அந்த இடத்தை சுற்றிலும் பல ஏக்கர்களுக்கு போதுமான இயற்கை உர சக்தியினை ஒரு மண்ணுளி புழுவால் உற்பத்தி செய்யப்படும்.

இந்த மண்ணுளி புழுக்கள் மணற்பாங்கான இடங்களையே விரும்பி வாழும். இவை மண்ணில் சுவாசிப்பதன் மூலம் மண்ணின் காற்று உள்புகும் திறனும் அதிகரித்து ஆக்சிஜனும் நைட்ரஜனும் இயற்கையாகவே மண்ணுக்கு ஏற்றப்படுகிறது.

எந்த காலக்கட்டத்திலும் இயற்கை விவசாயம் தலைத்தோங்கி நிற்க காரணம் என்ன, இவர்களின் இயற்கை விவசாயத்தினை அழிப்பது எப்படி, நமது செயற்கை உர சந்தையை இவர்களிடம் அதி்கப்படுத்துவது எப்படி என்ற வியாபார புத்தியில் உதித்த உத்தி தான் மண்ணுளி புழு வியாபாரம்.

ஒருவனை ஏமாற்ற வேண்டுமெனில் அவனது ஆசையை தூண்ட வேண்டும் என்ற தந்திரம் தான். மண்ணுளி புழுவினை விலைக்கு வாங்குபவர்கள் சொல்லும் நிபந்தனைகள் தெரியுமா? காயம் இருக்கக் கூடாது, 3 முதல் 5 கிலோ இருக்க வேண்டும், என்பார்கள். காயம் இருக்கக் கூடாது எனும் நிபந்தனையின் படி பார்த்தால், அவைகளை பிடிக்கும் முயற்சியில் பெரும்பாலான மண்ணுளிக்கள் காயப்பட்டு விடும். காயம்பட்ட மண்ணுளிகளை நிராகரித்து விடுவார்கள், நாமும் ஓரத்தில் தூக்கி எரித்து விடுவோம். இவைகளுக்கு தப்பிய மண்ணுளிக்கள் தான் எடை அளவுக்கு போகும். அங்கு அனைத்தும் நிராகரிக்கப் படும். ஏனெனில் அவர்கள் நிபந்தனையின் படி 3 முதல் 5 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில் இந்த மண்ணுளி புழுக்கள் சராசரியாக 1 கிலோ அல்லது 1 1/2 கிலோ அளவு தான் இருக்கும். அப்படியான சூழ்நிலைகளில் எடை குறைவாக உள்ளது. அடைத்து வைத்து வளர்த்து வாருங்கள் என்பார்கள். நம்ம மக்கள் அதனை ஒரு தொட்டியிலோ அல்லது ட்ரம்மிலோ போட்டு அடைத்து வைத்து அதன் இயல்பான அசைவுகளை தடுத்து விடுகிறோம்.

இதன் விளைவு! மண்ணுளி புழு மண்னுக்கு அளிக்கும் இயற்கை உரம் தடுத்து நிறுத்தப் படுகிறது. முன்னர் சொன்னது போல பயந்த சுபாவம் கொண்ட இந்த மண்ணுளி புழுக்கள் அடைத்து வைக்கப்பட்ட தொட்டியில் இரண்டு அல்லது மூன்று தினங்களில் இறந்து போகும்.

இவ்வாறாக நம் மக்களுக்கு தூண்டப்பட்ட ஆசையில் உழவர்களின் நண்பனான மண்ணுளிக்கள் தற்போது பெரும்பாலும் அழிக்கப்பட்டு வருகின்றன.

விளைவு:

#இயற்கை_விவசாயம்_அழிவுப்பாதையில்_நாம்_செயற்கை_உரத்தினைத்_தேடும்_நிர்பந்தம்.

Friday, March 23, 2018

King Of Avalon


King Of Avalon

King Of Avalon



Do you play war games? Enjoy free online games? Then prepare yourself! The hottest free to play multiplayer war game of 2017 is here! King Arthur's death has left an empty throne. Raise your dragon and build your army in the quest to lift Excalibur and become the next King of Avalon. In this dragon war, your mighty ...

ஏர் இந்தியாவில் வேலை

நமது நாட்டின் விமான சேவை நிறுவனங்களுள், முக்கியமானது ஏர் இந்தியா நிறுவனம். இங்கு 16 கேபின் க்ரூ டிரெய்னி பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. தகுதி உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து இந்த இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: 

18 - 27 வயதுக்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

 பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜியில் மூன்று வருட பட்டப் படிப்பு, அல்லது டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

இதர தகுதி: 

ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 163 செ.மீ., பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 154.5 செ.மீ., உயரம் கொண்டவராக இருக்க வேண்டும். இந்த உயரத்திற்கு நிகரான எடையும் கொண்டவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: 

எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

 பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, தங்கள் பாஸ்போர்ட் வண்ணப் புகைப்படத்துடனும், ரூ.1500/-க்கான டி.டி.,யுடனும் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Alliance Bhawan, Domestic Terminal-1, IGI Airport, New Delhi-110037

கடைசி நாள் : ஏப்., 6, 2018

சிறப்பு படிப்புகள்


சிறப்பு படிப்புகள்:


மைசூரில் உள்ள ‘ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பீச் அண்ட் ஹியரிங்’ கல்வி நிறுவனம் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்புகள்:

  • டிப்ளமா இன் ஹியரிங் எய்டு அண்ட் இயர் மோல்டு டெக்னாலஜி
  • டிப்ளமா இன் எர்லி சைல்டுஹுட் ஸ்பெஷல் எஜுகேஷன்
  • டிப்ளமா இன் ஹியரிங் லேங்குவேஜ் அண்ட் ஸ்பீச்
  • பாச்சுலர் ஆப் ஆடியாலஜி அண்ட் ஸ்பீச் லாங்குவேஜ் பெத்தாலஜி (பி.ஏஎஸ்எல்பி.,)
  • பாச்சுலர் ஆப் எஜுகேஷன் - ஸ்பெஷல் எஜுகேஷன் (ஹியரிங் இம்பயர்மென்ட்)
  • பி.ஜி. டிப்ளமா இன் ஆக்மென்டேடிவ் அண்ட் ஆல்டர்நேட்டிவ் கம்யூனிகேஷன்
  • பி.ஜி. டிப்ளமா இன் நியூரோ - ஆடியோலஜி
  • பி.ஜி. டிப்ளமா இன் கிளினிக்கல் லிங்குஷ்டிக்ஸ் பார் ஸ்பீச் அண்ட் லேங்குவேஜ் பெத்தலாஜி
  • பி.ஜி. டிப்ளமா இன் பாரின்ஷிக் ஸ்பீச் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி
  • எம்.எஸ்சி., - ஆடியாலஜி
  • எம்.எஸ்சி.,- ஸ்பீச் அண்ட் லாங்குவேஜ் பெத்தாலஜி
  • மாஸ்டர் ஆப் எஜுகேஷன் - ஸ்பெஷல் எஜுகேஷன் (ஹியரிங் இம்பயர்மெண்ட்)
  • பிஎச்.டி., மற்றும் போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப் (பி.டி.எப்.,)

தகுதி:

படிப்புகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும்.

தேர்வு முறை:

டிப்ளமா, பி.ஜி.டிப்ளமா, பி.எட்., மற்றும் பி.டி.எப்., தவிர பிற அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 2

விபரங்களுக்கு: www.aiishmysore.com

Thursday, March 22, 2018

மத்திய கணினி நிறுவனத்தில் இன்ஜினியரிங் வேலை


மத்திய கணினி நிறுவனத்தில் இன்ஜினியரிங் வேலை: விண்ணப்பக் கட்டணம் இலவசம்.

சென்ட்ரல் டெவலப்மெண்ட் அட்வான்ஸ்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய கணினி அறிவியல் முன்னேற்ற நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற உடனே விண்ணப்பிக்கவும் .

பணி விவரங்கள்:

சிடிஏசி பணியிடம் ஹைதராபாத் ஆகும்.

காலிப்பணியிடங்கள்:

புராஜக்ட் ஆபிசர் -1 பணியிடம்

புராஜக்ட் இன்ஜினியர் மல்டி மீடியா -2 பணியிடங்கள் 

புராஜக்ட் இன்ஜியர் ஐஎஸ்இஏ -2 பணியிடங்கள்

புராஜக்ட் இன்ஜினியர் சார்க் -4 பணியிடங்கள்

புராஜக்ட் அசோசியேட்ஸ் இ- சார்க் -2 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

புராஜக்ட் ஆபிசர் பணிக்கு எம்பிஏ மார்கெட்டிங் அல்லது அங்கிகரிக்கப்பட்ட கல்லூரி நிறுவனங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

மற்ற பணிகளுக்கு இன்ஜினியரிங்/ எம்சிஏ/ பிடெக் டிகிரி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் .

1 மற்றும் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு பெறலாம். மாதம் ரூபாய் 31, 000 சம்பளம் கொடுக்கப்படும்.

எழுத்து மற்றும் நேரடி தேர்வின் மூலம் தகுதியானர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:

Human Resource Department Centre for Development of Advanced Computing, 
Plot No. 6 & 7, Hardware Park, Sy No. 1/1, Srisailam Highway, 
Pahadi Shareef Via Keshavagiri (Post) ,
Hyderabad -500 005


மேலும் விவரங்களுக்கு : https://www.nlcindia.com/new_website/index.htm

இஞ்சி சூள் தஞ்சை

இஞ்சி சூள் தஞ்சை :

நாம் இக்காலத்தில் பயன்படுத்துகிற தமிழுக்கும், சங்க காலத்தில் பயன்படுத்திய தமிழுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. நமக்கு நன்கு தெரிந்த பெயர்களில் ஒன்று இஞ்சி. சமையலுக்கும்,மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.

ஆனால், அந்த காலத்தில் இஞ்சி என்றால் கோட்டையின் மதில் சுவரை குறிக்கும். “ இஞ்சி சூள் தஞ்சை “ என்று தேவாரத்தில் ஒரு வரி வருகிறது. கோட்டை மதில் சுவர்களால் சூழப்பட்ட தஞ்சாவூர் என்பது இதற்கான பொருள். மதுரை மாவட்டத்தில் வட பழஞ்சி, தென் பழஞ்சி என்ற ஊர்கள் உள்ளன். மன்னராட்சிக் காலத்தில் பெரிய கோட்டை மதில் சுவர்கள் இருந்திருக்கலாம்.

Wednesday, March 21, 2018

அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவுக்கான இடம்

அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவுக்கான இடம்:

நோபல் பரிசு குறித்த அறிவுப்புகள் வெளியாகும்போதெல்லாம் இந்தியா குறித்த ஆதங்கம் நம் மனதில் ஏற்படும். அறிவியல் ஆய்வுகள் சார்ந்த நோபல் பரிசை ஒரு இந்தியர் பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. ஆராய்ச்சிகளுக்கு நாம் முக்கியத்துவம் தராததே இதற்குக் காரணம். உலக நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகளைக் குறித்து ‘நேச்சர்’ இன்டெக்ஸ் நிறுவனம் கடந்த 1.1.2015 முதல் 31.12.2015 வரை செய்த ஆய்வு முடிவுகளை 2016ம் ஆண்டு வெளியீடாக அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆய்வின் முடிவினைக் கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என 2 பிரிவுகளிலும், வேதியியல், புவி மற்றும் சுற்றுச்சூழல், வாழ்வு அறிவியல்கள், இயற்பியல் அறிவியல்கள் என 4 பாடப் பிரிவுகளிலும், இயற்கை மற்றும் அறிவியல் எனும் ஆய்விதழ் குழு உட்பட 5 தலைப்புகளின் கீழ் பிரித்து, ஒன்றிணைத்து அட்டவணைப்படுத்தி வெளியிட்டிருக்கிறது. 

உலக அளவில் அறிவியல் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள், நாடுகள், கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், வேதியியல் நிறுவனங்கள், புவி மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனங்கள், வாழ்வு அறிவியல் நிறுவனங்கள், இயற்பிய அறிவியல் நிறுவனங்கள் என்ற தனிப்பிரிவுகளிலும் அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. உலகளவில் அறிவியல் ஆராய்ச்சிகளில், சிறந்த நிறுவனங்கள் பிரிவில் 500 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கழகம் 51, அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக்குழு (Council of Scientific and Industrial Research (CSIR)) 80, இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science (IISc)) 137, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (Indian Institute of Science Education and Research (IISER)) 159, டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம் (Tata Institute of Fundamental Research -TIFR) 268, இந்திய வேளாண்மை அறிவியல் கழகம் (Indian Association for the Cultivation of Science -IACS) 295, ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு நிறுவனம் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research -JNCASR) 397, ஐதராபாத் பல்கலைக்கழகம் (University of Hyderabad -UoH) 472 எனப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

உலக அளவில் அறிவியல் ஆராய்ச்சிகளில், சிறந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட 50 நாடுகள் இடம்பிடித்துள்ளன. இந்தியா 13வது இடத்தில் உள்ளது. உலகளவில் அறிவியல் ஆராய்ச்சிகளில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் மொத்தம் 500 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவின் இந்திய அறிவியல் நிறுவனம் 118, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் 137, ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு நிறுவனம் 330, ஐதராபாத் பல்கலைக்கழகம் 390 எனப் பல்வேறு இடங்களைப் பிடித்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனினும் இந்திய நிறுவனம் ஒன்றுகூட இடம்பெறவில்லை. அறிவியல் ஆராய்ச்சிகளில் சிறந்த வேதியியல் நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக்குழு 27, இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் 30, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் 63 என இடங்களைப் பெற்றுள்ளன. 

சிறந்த இயற்பியல் நிறுவனங்களின் பட்டியலில் 100 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் 46வது இடத்தில் உள்ளன. புவி மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனங்கள் மற்றும் சிறந்த வாழ்வு அறிவியல் நிறுவனங்கள் பட்டியலில் உலக அளவில் 100 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய நிறுவனங்கள் ஏதுமில்லை. இந்தப் பட்டியலைப் பன்னாட்டு அளவிலும் ஆப்ரிக்கா, ஆசியா, பசிபிக், ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்அமெரிக்கா, மேற்கு ஆசியா மண்டலப் பகுதிகள் வழியாகவும், நாடுகளின் பெயர்கள் வழியாகவும், தனிப்பிரிவுகள் வழியாகவும் தனித்தனியே அட்டவணைப்படுத்தி உள்ளனர். 2016ம் ஆண்டுக்கான முழுமையான பட்டியலையும், கடந்த 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பட்டியலையும் முழுமையாகப் பார்க்க https://www.natureindex.com/ இணைய முகவரிக்குச் செல்லலாம். இதில் ஆய்வு மாணவர்களுக்கு உதவக்கூடிய பல்வேறு தலைப்புகளிலான ஆய்வுக்கட்டுரைகளும் உள்ளன.

Tuesday, March 20, 2018

உளவியல் சொல்லும் உண்மைகள்..!

உளவியல் சொல்லும் உண்மைகள்: 

1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்.

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.

5.முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 

 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்...! 

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.         

3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்..

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.

5.  நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.

 6.  பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்.அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

7. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.

8. நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

9. குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.

10 .உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

 தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்...!

 1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

 2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

 3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

 5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

 6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

 7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

'நெட்' தேர்வு அறிவிப்பு

சி.எஸ்.ஐ.ஆர்., (சென்டர் பார் சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்) அமைப்பு, என்பது அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம். இதன் கிளை நிறுவனமாக ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் குரூப் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் சார்பாக யூ.ஜி.சி.,யுடன் இணைந்து தேசிய தகுதித் தேர்வு (நெட்) நடத்தி ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாடப் பிரிவுகள்:

 கெமிக்கல் சயின்ஸ், எர்த், அட்மாஸ்பெரிக், ஓஷன் மற்றும் பிளானடரி சயின்ஸ், லைப் சயின்ஸ், மேதமேடிக்கல் சயின்ஸ், பிசிக்கல் சயின்ஸ் ஆகிய பிரிவுகள் இத்தேர்வில் அடங்கும்.

வயது: 

ஜன., 1, 2018 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

தொடர்புடைய பிரிவுகளில் எம்.எஸ்சி., படித்தவர்கள், பி.இ., பி.டெக்., பி.பார்ம், எம்.பி.பி.எஸ்., போன்றவற்றைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

தேர்வு நாள்: 

எழுத்துத்தேர்வு ஜூன் 17, 2018 அன்று நடைபெறும். தமிழகத்தின் சென்னை, காரைக்குடி உள்ளிட்ட நாட்டின் 27 மையங்களில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்:  ரூ.1000

கடைசி நாள்: மார்ச் 26, 2018 

விபரங்களுக்கு : http://csirhrdg.res.in/notification_main_june2018.pdf

Monday, March 19, 2018

RECRUITMENT OF SCIENTIST-B


RECRUITMENT OF SCIENTIST-B 

Bureau of Indian Standards (BIS), a statutory body Ministry of Consumer Affairs, Food and Public Distribution, Govt. of India, is the National Standards Body of India. It undertakes activities in the field of Standardization, Product and System Certification, Hallmarking of Gold/Silver Jewellery, Laboratory Testing etc., in the country. BIS is also responsible for Standardization and Certification at the International level. BIS offers excellent career opportunities to bright, young dynamic persons for the post of Scientist-‘B’. These posts are in the Pay Level 10 as per the Seventh Central Pay Commission plus allowances as applicable. The indicative gross salary as on date at New Delhi will be Rs. 79,929/-. 

Essential Qualifications: Discipline Qualification Mechanical Engineering, Metallurgical Engineering, Civil Engineering, Electrical Engineering, Electronics Engineering Chemical Engineering, Food Technology, Textile Engineering & Fibre Science Bachelor’s Degree in Engineering or Technology or equivalent in concerned discipline with not less than 60% marks in aggregate (50% for SC/ST candidates). Microbiology Master’s Degree or equivalent with not less than 60% marks in aggregate (50% for SC/ST candidates). Candidates are required to apply On-Line from 16.03.2018 to 02.04.2018 through BIS website www.bis.gov.in. No other means/mode of submission of applications will be accepted under any circumstances.

HOW TO APPLY :

DETAILED GUIDELINES/PROCEDURES FOR ,
A. APPLICATION REGISTRATION 
B. PAYMENT OF FEES 
C. PHOTOGRAPH & SIGNATURE SCAN AND UPLOAD 

Candidates can apply online only from 16.03.2018 to 02.04.2018 and no other mode of application will be accepted. 

IMPORTANT POINTS TO BE NOTED BEFORE REGISTRATION:

Before applying online, candidates should: 

i. Scan their photograph and signature ensuring that both the photograph and signature adhere to the required specifications as given under Guideline for photograph & signature scan and upload.

 ii. Have a valid personal email ID and mobile no., which should be kept active till the completion of this Recruitment Process. BIS may send call letters for the Examination etc. through the registered e-mail ID. In case a candidate does not have a valid personal email ID, he/she should create his/her new e-mail ID and mobile no. before applying online and must maintain that email account and mobile number.

 iii. The Application Fees/ Intimation Charges [Payable from 16.03.2018 to 02.04.2018 (only through Online payment mode) both dates inclusive] is Rs. 750/- and is Non-Refundable. No fees is required to be paid by SC/ST/ Ex-Serviceman/ Person with Benchmark Disability/Women Candidates.

 Bank Transaction charges for Online Payment of application fees/intimation charges will have to be borne by the candidate.

 A. Application Procedure :

1. Candidates are required to go to the BIS website www.bis.org.in and click on the option "APPLY ONLINE" which will open a new screen.

 2. To register application, choose the tab "Click here for New Registration" and enter Name, Contact details and Email-id. A Provisional Registration Number and Password will be generated by the system and displayed on the screen. Candidate should note down the Provisional Registration Number and Password. An Email & SMS indicating the Provisional Registration number and Password will also be sent.

 3. In case the candidate is unable to complete the application form in one go, he / she can save the data already entered by choosing "SAVE AND NEXT" tab. Prior to submission of the online application candidates are advised to use the "SAVE AND NEXT" facility to verify the details in the online application form and modify the same if required. Visually Impaired candidates should fill the application form carefully and verify/ get the details verified to ensure that the same are correct prior to final submission.

 4. Candidates are advised to carefully fill and verify the details filled in the online application themselves as no change will be possible/ entertained after clicking the FINAL SUBMIT BUTTON. 

5. The Name of the candidate and his /her Father/ Husband etc. should be spelt correctly in the application as it appears in the Certificates/ Identity proof/ Mark sheets. Any change/alteration found may disqualify the candidature. 

6. Validate your details and Save your application by clicking the 'Validate your details' and 'Save & Next' button. 

7. Candidates can proceed to upload Photo & Signature as per the specifications given in the Guidelines for Scanning and Upload of Photograph and Signature detailed under point "C". 

8. Candidates can proceed to fill other details of the Application Form.

 9. Click on the Preview Tab to preview and verify the entire application form before FINAL SUBMIT. 

10. Modify details, if required, and click on 'FINAL SUBMIT' ONLY after verifying and ensuring that the photograph, signature uploaded and other details filled by you are correct. 

11. Click on 'Payment' Tab and proceed for payment. 

12. Click on 'Submit' button.

 B. PAYMENT OF FEES ONLINE MODE:

 1. The application form is integrated with the payment gateway and the payment process can be completed by following the instructions. 

 2. The payment can be made by using Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets. 

3. After submitting your payment information in the online application form, PLEASE WAIT FOR THE INTIMATION FROM THE SERVER. DO NOT PRESS BACK OR REFRESH BUTTON IN ORDER TO AVOID DOUBLE CHARGE.

 4. On successful completion of the transaction, an e-Receipt will be generated.

 5. Non-generation of 'E-Receipt' indicates PAYMENT FAILURE. On failure of payment, Candidates are advised to login again using their Provisional Registration Number and Password and repeat the process of payment. 

6. Candidates are required to take a printout of the e-Receipt and online Application Form containing fee details. Please note that if the same cannot be generated, online transaction may not have been successful. 

7. For Credit Card users: All charges are listed in Indian Rupee. If you use a nonIndian credit card, your bank will convert to your local currency based on prevailing exchange rates.

 8. To ensure the security of your data, please close the browser window once your transaction is completed. 

9. There is facility to print application form containing fee details after payment of fees.

 C. GUIDELINES FOR PHOTOGRAPH & SIGNATURE SCAN AND UPLOAD:

 IN CASE THE FACE IN THE PHOTOGRAPH OR SIGNATURE IS UNCLEAR, THE APPLICATION MAY BE REJECTED. CANDIDATE MAY EDIT THE APPLICATION AND RE-UPLOAD THE PHOTOGRAPH/ SIGNATURE IN SUCH CASE. CANDIDATE SHOULD ALSO ENSURE THAT PHOTO IS UPLOADED AT THE PLACE OF PHOTO AND SIGNATURE AT THE PLACE OF SIGNATURE. IF PHOTO IN PLACE OF PHOTO AND SIGNATURE IN PLACE OF SIGNATURE IS NOT UPLOADED PROPERLY, CANDIDATE WILL NOT BE ALLOWED TO APPEAR FOR THE EXAM.

 PHOTOGRAPH IMAGE:

 a. Photograph must be a recent passport size colour picture.
 b. The picture should be in colour, against a light-coloured, preferably white, background.
 c. Look straight at the camera with a relaxed face. 
 d. If the picture is taken on a sunny day, have the sun behind you, or place yourself in the shade, so that you are not squinting and there are no harsh shadows. 
 e. If you have to use flash, ensure there's no "red-eye". 
 f. If you wear glasses make sure that there are no reflections and your eyes can be clearly seen. 
 g. Caps, hats and dark glasses are not acceptable. Religious headwear is allowed but it must not cover your face.
  h. Dimensions 200 x 230 pixels (preferred). 
  i. Size of file should be between 20kb-50kb.
  j. Ensure that the size of the scanned image is not more than 50KB. If the size of the file is more than 50KB, then adjust the settings of the scanner such as the DPI resolution, no. of colours etc., during the process of scanning.
 k. If the photo is not uploaded at the place of Photo Admission for Examination will be rejected/denied. Candidate him/herself will be responsible for the same. 
  l. Candidate must ensure that Photo to be uploaded is of required size and the face should be clearly visible. 

SIGNATURE IMAGE

a. The applicant has to sign on white paper with Black Ink pen. 
b. The signature must be signed only by the applicant and not by any other person. 
c. The Applicant’s signature obtained on the call letter and attendance sheet at the time of the examination should match the uploaded signature. In case of mismatch, the candidate may be disqualified. 
d. Dimensions 
e. 140 x 60 pixels (preferred).
f. Size of file should be between 10kb —20kb. 
g. Ensure that the size of the scanned image is not more than 20KB. 
h. Candidates should ensure that the signature uploaded is clearly visible.

 SCANNING THE PHOTOGRAPH & SIGNATURE:
 a. Set the scanner resolution to a minimum of 200 dpi (dots per inch).
 b. Set Color to True Color. 
 c. File Size as specified above.
 d. Crop the image in the scanner to the edge of the photograph/signature, then use the upload editor to crop the image to the final size (as specified above). 
 e. The image file should be JPG or JPEG format. An example file name is: image01 .jpg or image01 .jpeg Image dimensions can be checked by listing the folder files or moving the mouse over the file image icon. Candidates using MS Windows/MS Office can easily obtain photo and signature in .jpeg format not exceeding 50KB & 20KB respectively by using MS Paint or MS Office Picture Manager. Scanned photograph and signature in any format can be saved in .jpg format by using 'Save As' option in the File menu and size can be reduced below 50KB (photograph) & 20KB (signature) by using crop and then resize option [Please see point (i) & (ii) above for the pixel size] in the 'Image' menu. Similar options are available in other photo editor also. 

If the file size and format are not as prescribed, an error message will be displayed.
 While filling in the Online Application Form the candidate will be provided with a link to upload his photograph and signature. Procedure for Uploading the Photograph and Signature 
a. There will be two separate links for uploading Photograph and Signature. 
b. Click on the respective link "Upload Photograph / Signature". 
c. Browse & Select the location where the Scanned Photo/ Signature file has been saved. 
d. Select the file by clicking on it. Click the 'Upload' button.

Website:  http://www.bis.gov.in/

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...