Friday, May 25, 2018

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் குரூப் 'பி', 'சி' வேலை

மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் ஆந்திரப் பிரதேச மாநிலம் மங்கலகிரியிலும், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 60 லேப் டெக்னீஷியன், எழுத்தர், காசாளர், ஸ்டோர் கீப்பர் போன்ற குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தகுதி: பெரும்பாலான பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 18 முதல் 45க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கும், ஓபிசி பிரிவினர் ரூ.1,000. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.aiimsraipur.edu.in/upload/vacancies/5afaccbdc29c0__Final%20Web%20Advt%20DR%20_Nagpur_.pdf 

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...