Friday, May 4, 2018

குரூப் 2ஏ தேர்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு இன்று கடைசி

குரூப் 2ஏ எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வெள்ளிக்கிழமையான  இன்று கடைசி நாளாகும். மாலை 5.30 மணி வரை மட்டுமே சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முதன்முறையாக ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக மே 4 -ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...