இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு ஆபரேட்டர் பணி

ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 58 ஜூனியர் ஆபரேட்டர் பணி.
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 58 ஜூனியர் ஆபரேட்டர் மற்றும் ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  58

பணியிடம்: ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி

பணி: ஜூனியர் ஆபரேட்டர்

பணி: ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐடிஐ முடித்தவர்கள், பிளஸ் டூ தேர்ச்சி பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.6.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 30.7.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : www.iocl.com
சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.