Saturday, June 30, 2018

எங்கேயும் காதல் பாடல் வரிகள் | தமிழ் பாடல் வரிகள் | ENGEYUM KADHAL SONG LYRICS IN TAMIL

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே .....

மின்தொகுப்பு நிறுவனத்தில் அதிகாரி வேலை | CAREERS IN POWER GRID INDIA

மத்திய மின்தொகுப்பு கழக நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 47 எக்சிகியூட்டிவ் டிரெயினி (அதிகாரி), 25 எச்.ஆர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: எக்சிகியூட்டிவ் - 47

தகுதி: சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. (சி.எம்.ஏ.) முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.06.2018-ஆம் தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018


பணி: எச்.ஆர் - 25

தகுதி: எம்.பி.ஏ. மற்றும் முதுகலை, டிப்ளமோ படிப்பு படித்துவிட்டு, ஏற்கனவே நெட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஜூலை மாதம் நடைபெறும் நெட் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் நிரப்பப்படுகிறார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.powergridindia.com

இந்திய விமானப்படையில் ஏர்மேன் வேலை | CENTRAL AIRMEN SELECTION BOARD | CAREER IN INDIAN AIR FORCE

இந்திய விமானப்படையில் ஏர்மேன் (குரூப்-எக்ஸ் ) டெக்னிக்கல், குரூப்-ஒய் (நான் டெக்னிக்கல்) பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்த திருமணமாகாத இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: ஏர்மேன் (குரூப்-எக்ஸ் ) டெக்னிக்கல்

பயிற்சி: குரூப்-ஒய் (நான் டெக்னிக்கல்)

தகுதி:  குரூப் எக்ஸ் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ்-டூ (10+2 முறையில்), இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 

அதாவது கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ்-டூ, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

குரூப்-ஒய் (நான்-டெக்னிக்கல்) மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் டூ, இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21க்குள் இருக்க வேண்டும். அதாவது 14.07.1998 மற்றும் 26.06.2002 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திலும், இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உடல்தகுதி: ஒவ்வொரு பயிற்சிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 152.5 செ.மீ. உயரமும், குறைந்தபட்சம் 55 கிலோ எடையும், 5 செ.மீ. விரியும் மார்பளவு திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.airmenselection.cdac.in அல்லது www.careerindianairforce.cdac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2018

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் 13-முதல் 16-ஆம் தேதி வரை நடக்கும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.airmenselection.cdac.in மற்றும் www.careerindianairforce.cdac.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய கடற்படையில் வேலை | CAREERS IN INDIA NAVY

இந்திய கடல் எல்லையை பாதுகாக்கும் படையான கடற்படையில் ”யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம் (யூ.இ.எஸ்.) கோர்ஸ் காமென்சிங் - ஜூன்-2019” என்ற பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேவல் ஆர்கிடெக்சர் பிரிவில் மட்டும் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

பயிற்சி: ”யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம் (யூ.இ.எஸ்.) கோர்ஸ் காமென்சிங் - ஜூன்-2019”


வயது வரம்பு: 02.07.1995 மற்றும் 01.01.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் மற்றும் இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் எக்சிகியூட்டிவ் பிரிவு பயிற்சிக்கும், மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமோடிவ், மெக்கட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி, ஏரோனாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் உள்பட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் டெக்னிக்கல் பிரிவு பணிக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உடல்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். 

எக்சிகியூட்டிவ் விண்ணப்பிப்பவர்களின் பார்வைத்திறன் 6/12 என்ற அளவுக்குள்ளும், டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பிப்பவர்கள் 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:  சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நடத்தும் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வுகள், நுண்ணறிவுத் தேர்வு மற்றும் படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ தேர்வுக்குப் பின்னர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.


பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் அளிக்கப்படும். 14 ஆண்டுகள் கொண்ட ”ஷாட் சர்வீஸ் கமிஷன்”; பணியாகும். ஜெனரல் சர்வீஸ் பணியிடங்கள் மட்டும் நிரந்தர பணிவாய்ப்பாகும். சப்-லெப்டினன்ட் முதல் கமாண்டர் பதவி வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள்  www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018

Friday, June 29, 2018

டிஎன்பிஎஸ்சி பல்வேறு பதவிகளுக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு | TNPSC INTERVIEW & CERTIFICATE VERIFICATION

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் பல்வேறு பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய துறைகளுக்கான புள்ளிவிவராளர் பதவிக்கு தேர்வெழுதி தகுதி பெற்ற 62 பேருக்கு ஜூலை 10 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு இந்திய சமய அறநிலைய ஆட்சித் துறையில் செயல் அலுவலர் நிலை-1 பணிக்கான தேர்வில் தகுதி பெற்ற 9 பேருக்கு ஜூலை 4 ஆம் தேதியும், இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கானத் தேர்வில் தகுதி பெற்ற 31 பேருக்கும், இளநிலை இரசாயனர், இரசாயனர் மற்றும் தொல்லியல் இரசாயனர் ஆகிய பணியிடங்களுக்கானத் தேர்வில் தகுதி பெற்ற 30 பேருக்கும் ஜூலை 10 ஆம் தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Thursday, June 28, 2018

ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்புகள் | TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT VACANCIES

தமிழக ஊரக வளர்ச்சி துறையின் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Subject Matter Specialist (Animal Science) - 01
பணி: Subject Matter Specialist (Agricultural Engineering) - 01
பணி: Programme Assistant (Lab Technician) - 01
பணி: Programme Assistant (Farm Manager) - 01
பணி: Programme Assistant (Computer) - 01
பணி: Assistant (Office - 01
பணி: Stenographer(Gr-III) - 01
பணி: Driver (Jeep) - 01

வயதுவரம்பு: 01.06.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் மற்றும் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம், பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் சமம்ந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழில் எழுத்த, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை "TAMILNADU BOARD OF RURAL DEVELOPMENT, CHENNAI" என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.kvkthiruvannamalai.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் சுயமுகவரி எழுத்தப்பட்ட ரூ.5 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட தபால் கவர் ஆகியவற்றை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The President, 
Tamil Nadu Board of Rural Development,
Post Box No.8811, T.Nagar, Chennai - 600 017.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.kvkthiruvannamalai.com/Staff%20recruitment%20in%20KVKs-NOTIFICATION%20No.%2001-2018-TNBRD.pdf

தமிழ்நாடு பெண்கள் நலக்கழகத்தில் வேலை | TNCDW - Call for Consultants

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பெண்கள் நலக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Consultant-Marketing(SGH Products) - 01

தகுதி: எம்பிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Consultant-Agribusiness Management - 01

தகுதி: விவசாய பொருளாதாரம், விவசாய விற்பனை மேலாண்மை, கிராமப்புற வளர்ச்சி போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Consultant-Dairy Business Management - 01

தகுதி: Veterinary, Diary Management, Diary Development, Economics, Rural Development துறைகளில் இளங்கலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.75,000

வயதுவரம்பு: உச்ச வயதுவரம்பு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய விவரங்களை ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Managing Director, 
Tamilnadu Corporation for Development of Women Limited, 
Mother Teresa Women's Complex- I Floor,
Valluvar Kottam High Road, 
Nungambakkam, Chennai - 600 034, Tamil Nadu, India.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadumahalir.org/images/pdf/Call%20for-Consultants.pdf

Wednesday, June 27, 2018

ஆசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு | Teachers Recruitment Board Certificate of Marks | TRB Certificate of Marks

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், 2017, ஏப்ரல் 30 -ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 5 லட்சத்து 12,260 பேர் எழுதினர்.

இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. 

தங்களின் மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஆர்பி தெரிவித்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை | CARRERS IN BANK OF BARODA

பேங்க் ஆஃப் பரோடாவில் " Probationary Officer in Junior Management "  வேலை

பதவி: Probationary Officer in Junior Management Grade/ Scale-I

காலியிடங்கள்: 600

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 20 வயதிலிருந்து 28 வயதுக்குள்இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.com என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்கள், புகைப்படத்தைப் பதிவேற்றி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு-ரூ.100; ஓசி/ ஓபிசி பிரிவினருக்கு-ரூ.600. ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 02-07-2018

மேலும் விவரங்களுக்கு: www.bankofbaroda.co.in/writereaddata/Images/pdf/Final-Advertisement-2018-19.pdf

POWERGRID & POSOCO நிறுவனத்தில் வேலை

POWERGRID & POSOCO நிறுவனத்தில் "Executive Trainee (Finance)" வேலை

பதவி: Executive Trainee (Finance)

காலியிடங்கள்: 47

கல்வித்தகுதி: சி.ஏ. அல்லது ஐ.சி.டபள்யு.ஏ. (சிஎம்ஏ) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினர், ஓபிசி பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்துக்குச் சென்று, விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி, ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு, படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது/ ஓபிசி பிரிவினருக்கு - ரூ.500; எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு-கட்டணமில்லை.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30-06-2018.

மேலும் விவரங்களுக்கு: www.apps.powergridindia.com/pgdocs/2018/6/ET_Finance_2018_Detailed_Advertisement.pdf

இந்த்பேங்க் நிறுவனத்தில் வேலை | CARRERS IN INDBANK

இந்த்பேங்க் நிறுவனத்தில்  கம்பெனி செக்ரட்டரி & கம்பளையன்ஸ் ஆஃபிஸர் வேலை


பதவி: கம்பெனி செக்ரட்டரி & கம்பளையன்ஸ் ஆஃபிஸர்

காலியிடம்: 1

பணியிடம்: சென்னை

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கம்பெனி செக்கரட்டரி படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம்: ஏதேனும் நிறுவனத்தில் குறைந்தது ஓராண்டு கம்பெனி செக்கரட்டரியாக பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indbankonline.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


முகவரி: 

Assistant Vice President, 
HRD, # 480, 1st Floor, Khivraj Complex 1, 
Anna Salai, Nandanam, Chennai - 600035.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 30-06-2018


திருச்சி ஐ.ஐ.எம்.மில் வேலை | CARRERS IN TRICHY IIM

திருச்சி ஐ.ஐ.எம்.மில்  "Financial Adviser and Chief Accounts Officer" வேலை

பதவி: Financial Adviser and Chief Accounts Officer

காலியிடம்: 1

கல்வித்தகுதி: அக்கவுண்ட்ஸ் துறையில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iimtrichy.ac.in/careers என்ற இணையதளத்துக்குச் சென்று, விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர், விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான நகல் சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: 

The Chief Administrative officer (i/c),
IIM Tiruchirappalli, 
Pudukkottai Main Road, 
Chinna Sooriyur Village, Tiruchirappalli - 620024

அஞ்சல் மூலம் விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 03-07-2018

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28-06-2018

மேலும் விவரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_21301_2_1819b.pdf 

Tuesday, June 26, 2018

தமிழ் மொழி || TAMIL LANGUAGE

தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.



இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017 ஆவது ஆண்டில் நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில்ஒன்றாகும்.

திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது.

எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.


தமிழ் பிராமி எழுத்து, தென் இந்தியாவின் சாதவாகன பேரரசின் அரசர் 'வஷிஷ்ட்டி புத்திர சாதகர்ணி' -இன், இருமொழி நாணயத்தின் (160 AD) பின்புறத்தில் உள்ளது. முன் புறத்தில் அரசனின் முக உருவும், பிராகிருத மொழி பிராமி எழுத்திலும் உள்ளது.

வரலாறு:

தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது.

தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும்.

இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன.

இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.

பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 4 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும்.

இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 400 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது.

2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி. மு. 600 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.

பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத் தக்க காப்பியம், கி. மு 200 முதல் கி.பி 200 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழறிஞர்களும், மொழியியலாளர்களும், தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
  • சங்க காலம் (கிமு 400 – கிபி 300)
  • சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
  • பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
  • மையக் காலம் (கிபி 1200 - கிபி 1800)
  • தற்காலம் (கிபி 1800 - இன்று வரை)

பக்தி இலக்கிய காலத்திலும், மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன.

பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவற்றைத் தமிழிலிருந்து நீக்க உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது.

இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது.

கி.பி.800-இற்கும் 1000-இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

மொழிக்குடும்பம்:

தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக்குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலா என்னும் மொழிகள் அடங்கும். 

தமிழ் மொழிக் குடும்பம்:

  • தமிழ்-மலையாளம் மொழிகள்: தமிழ்- மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.
  • தமிழ்-குடகு மொழிகள்: தமிழ்- குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும்.
  • தமிழ்-கன்னடம் மொழிகள்: தமிழ்- கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன.
  • திராவிட மொழிக் குடும்பம்: திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும்.

ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டுவரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம்மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர்.

மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.


தமிழ் என்னும் சொல்:

சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ்என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார்.

காமெல் சுவெலிபில் என்ற செக்குமொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார்.

மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

தமிழ் பேசப்படும் இடங்கள்:

தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.

தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது

தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.

அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ்போன்ற நாடுகளில் குறிப்பிடத் தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.

தென்னாப்பிரிக்கா, கயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட், டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந்நாடுகளில் அவர்கள் தமிழ் மொழியைப் பேசுவதில்லை.

மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்தபோதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.

ஆட்சி மொழி அங்கீகாரம்:

தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின்எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது.

இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது.

சிங்கப்பூர் நாட்டிலும் நாடளாவிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.

மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.


இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்:

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து  இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்-ஆல் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.

எழுத்துமுறை:


தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துகள் ஒலிக்கப்படுகின்றன. 

தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியிலிருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. 

ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.

வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். 

இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாகத் தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் ஈ. வெ. இராமசாமி நாயக்கரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. 

எனினும் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் -அது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.

தமிழ் எழுத்துகள்:




கிரந்த எழுத்துகள்:

கிரந்த எழுத்துகள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். 



இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாகச் செய்த தாக்கத்தாலும் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது.

தமிழில் மணிப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்தியபொழுது கிரந்த எழுத்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 

இன்று, மணிப்பிரவாள எழுத்து நடைமறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துகள் ஆங்கிலச் சொற்களையும் அறிவியல் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

எண்கள்:

தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. 



ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன. தமிழில் '0' என்று எண் வடிவம் இல்லை.

Monday, June 25, 2018

எளிய சித்த மருத்துவ குறிப்புக்கள் | Easy Home Made Health Tips


அனைவரும் தெரிந்துக் கொள்ளக்கூடிய வீட்டிலேயே செய்யும் சில எளிய மருத்துவ குறிப்புகள், நீங்களும் செய்து பலன் பெறலாம்.

இடுப்புவலி:
  • சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் ”இடுப்புவலி” நீங்கும்.
தாய்ப்பால் சுரக்க:
  • அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
ஆறாத புண்கள்:
  • விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
வயிற்றுப் போக்கு :
  • கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
உடம்புவலி:
  • சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
நெருப்பு காயம்:
  • நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
நரம்புகள் வலிமை மற்றும் ஞாபக சக்தி:
  • வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
கண்வலி மற்றும் கண் நோய்கள் :
  • பசுவின் பால் நூறு மில்லி அதே அளவு  தண்ணீரில் விட்டு வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
உடல் பருமன் ,கக்குவான், இருமல் :
  • புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
வயிற்றுப்புண் :
  • பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
வாந்தி மற்றும் பித்த நோய்கள்:
  • கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
மாரடைப்பு:
  • சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
தொண்டைக் கரகரப்பு:
  • பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

ஒரு குச்சி ஒரு குல்பி | ORU KUCHI ORU KULFI LYRICS IN TAMIL | KALAKALAPPU-2

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

உங்கூட தான் ஃபோடோ புட்ச்சென்
டச்சு போனுல.

டச்சு பண்ணி இச்சு குடுப்பேன்
ஹானி மூனிலே.

உங்கூட தான் ஃபோடோ புட்ச்சென்
டச்சு போனுல.

டச்சு பண்ணி இச்சு குடுப்பேன்
ஹானி மூனிலே.

தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு.

நம்மே கல்யாணத்தே எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு.

தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு.

நம்மே கல்யாணத்தே எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு.

வந்த மஹா லக்க்ஷிமியே
நீ வந்தலாலே ஓவர் நைட்லே
நானும் ரஜினியே.

வந்த மஹா லக்ஷிமியே
நீ வந்தலாலே ஓவர் நைட்லே
நானும் ரஜினியே.

யாரு யாரு அண்ணாத்தே யாரு யாரு
அண்ணே தாண்டா அக்காவுக்கு சூப்பர் ஸ்டாரு.

யாரு யாரு அண்ணாத்தே யாரு யாரு
அண்ணே தாண்டா அக்காவுக்கு சூப்பர் ஸ்டாரு

ஸ்ட்ரைட்டா உன்னை பார்த்த நீ இருக்கிற பைட்டா
வொயிட்டா ட்யூப் லிஃக்தஹ நீ ஜொலிக்கிற ப்ரைட்டா.

சைசா சின்ன வயசா உன்னை பார்த்தேன் நைசா
ஹே பழ பழனு மினுக்குறியே ப்ளாஸ்டிக்கு ரைசா.

கரஞ்ச குச்சி ஐசே
குலுக்கல் பம்‌பர் ப்ரைசே.

பிரியாணி நீ இருக்க ஏதுக்கடி பிஜ்ஜா
பக்கத்தில் நீயும் இருந்து.
பார்த்துக்கடி மாமன் தில்லே தான்
தாஜ்மஹாலு கட்டி வெச்ச்சேன் மனசு குள்ளே தான்.

ஜிங்கிலியா ஜினுக்க தேவதையா கனக்க
நம்பளே போல் கப்புழு ஊரில் இருக்க.

ஜிங்கிளியா ஜினுக்க தேவதைய கனக்க
நம்பளே போல் கப்புழு ஊரில் இருக்க.

இந்த ஊரில் இருக்க
நம்மே ஊரில் இருக்க
இந்த ஊரில் இருக்க
ஸோஆ சொன்னே.

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

உங்கூட தான் ஃபோடோ புட்ச்சென் டச்சு போனுல
டச்சு பண்ணி இச்சு குடுப்பேன் ஹானி மூனிலே.

உங்கூட தான் ஃபோடோ புட்ச்சென் டச்சு போனுல
டச்சு பண்ணி இச்சு குடுப்பேன் ஹானி மூனிலே.

தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு.

நம்மே கல்யாணத்தே எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு.

தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு.

நம்மே கல்யாணத்தே எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு.

வந்த மஹா லக்ஷிமியே
நீ வந்தலாலே ஓவர் நைட்லே நானும் ரஜினியே.

வந்த மஹா லக்ஷிமியே
நீ வந்தலாலே ஓவர் நைட்லே நானும் ரஜினியே.

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி.

யாரு யாரு அண்ணாத்தே யாரு யாரு
அண்ணே தாண்டா அக்காவுக்கு சூப்பர் ஸ்டாரு.

Sunday, June 24, 2018

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர் வேலை | Careers in Oil India Ltd.

அஸ்ஸாமில் செயல்பட்டு வரும்ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Electrical Engineer - 02

சம்பளம்: மாதம் ரூ.52,750

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.06.2018

பணி: Civil Engineer - 02

சம்பளம்: மாதம் ரூ.57,750

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.06.2018

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 

Conference Room, 
Pipeline Headquarters, 
Oil India Limited, 
P.O.-Udaya vihar, 
Narangi, Guwahati, 
Assam.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.oil-india.com/Document/Career/Advertisement_for_engagement_Electrical_Engineer_Civil_Engineer.pdf

இராசாராம் மோகன்ராய் || RAJA RAM MOHAN ROY

இராசாராம் மோகன்ராய் (மே 22, 1772– செப்டம்பர் 27, 1833) வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். 

இராசாராம் மோகன்ராய்|
|RAJA RAM MOHAN ROY
இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்றும், புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர்.

பிரம்மசமாஜம் கி.பி. 1828 இல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும்.


இவர் கற்றறிந்த மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், இபிரு, கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்றவைகளாகும்.

இந்து சமய தரும சாத்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் போன்ற பிறவற்றையும் ஆழ்ந்து பயின்றிருந்தார்.

ஆங்கில நாகரிகத்தில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். அவர் தமது நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகினார். எஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார்.

அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கைகளுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. 

மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது.

கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது கிறித்துவப் பாதிரியார்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. இதன் விளைவாக இந்து சமயத்தை சீர்திருத்தி அமைக்க வேண்டுமென விரும்பினார். 

கி.பி. 1815 இல் கல்கத்தாவில் ஆத்மிக சபை என்பதை நிறுவினார். இதில் நடுத்தர, கீழ் தர மக்கள் கலந்து கொண்டனர். 1819 இல் வேதாந்த சாத்திரங்களின் சாரத்தை ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் வெளியிட்டார்.

 பின்பு நான்கு உபநிடதங்களை மொழிபெயர்த்தார். 1820 இல் ஏசுவின் போதனைகளை திறனாய்வு செய்து, ஏசுவின் கொள்கைகள் அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டார்.

அக்காலத்தில் இந்துப் பெண்களுக்குக் கட்டாய வழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறல் (சதி) என்ற சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார்.

வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார்.

வில்லியம் பெண்டிங்க் காலத்தில் சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது ராஜா ராம்மோகன் ராயின் உழைப்பாலே நிகழ்ந்தது என்பதே உண்மை.

அயர்லாந்து மக்களை ஆங்கிலேய அரசு ஒடுக்கிய பொழுது சீர்திருத்த சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக ஆங்கிலேய அரசு நிறைவேற்றா விட்டால் ஆங்கிலேய ஆதிக்கமே இல்லாத பகுதியில் போய் வாழ்வேன் என்று முழக்கமிட்டார். 

நேப்பல்ஸ் புரட்சி தோல்வியுற்ற பொழுது மனம் வெம்மி முக்கியமான அலுவல்களை ரத்து செய்கிற பண்பும் அவருக்கு இருந்தது. கத்தோலிக்கர்கள் உரிமையோடு பிரட்டனில் வாழ வழி ஏற்பட்ட பொழுது அதை வரவேற்றார்.

Saturday, June 23, 2018

வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் | Correction In Tamil Letters

வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் கட்டுரை கொஸ்தான்சோ ஜுசேப்பே பெஸ்கி (1680-1747) என்னும் இயற்பெயரும் வீரமாமுனிவர் என்னும் சிறப்புப் பெயரும் கொண்ட தமிழறிஞர் ஒருசில தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தி அமைத்த வரலாற்றை எடுத்துரைக்கிறது. 

வீரமாமுனிவர் தமிழகத்தில் 1710-இலிருந்து 1747 வரை மறைப்பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றினார். 

தலைசிறந்த தமிழறிஞரான அவர் இலக்கணம், இலக்கியம், அகராதி, சிறுகதை போன்ற பல துறைகளில் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்தார். 

தமிழுக்கு அவர் ஆற்றிய ஒரு சீரிய பணி தமிழ் எழுத்துக்களில் அவர் கொணர்ந்த சீர்திருத்தம் ஆகும்.

உயிரெழுத்துச் சீர்திருத்தம்:


1) அகரத்தையும் ஆகாரத்தையும் வேறுபடுத்தல்:

வீரமாமுனிவர் காலத்தில் ஆகாரத்தை எழுதும் பொழுது அகரத்தின் மேல் புள்ளியிட்டு எழுதியதை விடுத்து அகரத்திற்கு சுழியிட்டு ஆகாரத்தை எழுதினார்.

                                                                அ் => ஆ 



2) எகரத்தையும் ஏகாரத்தையும் வேறுபடுத்தல்:

முனிவர் காலத்திற்கு முன்னால் "எ" என்னும் எழுத்து குறிலாகவும் நெடிலாகவும் ஒலிப்புப் பெற்றது. 

அவர் குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடு காண்பிக்க எகரத்தில் வருகின்ற மேல் கோடு நீட்டிச் சுழித்தால் அதை நெடிலாக ஒலிக்கலாம் என்று சீர்திருத்தம் கொணர்ந்தார்.

ஆனால் அச்சீர்திருத்தம் தற்போது வழக்கத்தில் இல்லை. 

அவர் இயற்றிய தமிழ்-இலத்தீன் அகராதி (1744) முழுவதிலும் "ஏ" என்னும் எழுத்தை "எு" என்றே எழுதியுள்ளார். 

இப்போது ஏகாரத்தில் இடப்படுகின்ற கீழ் வளைகோட்டைக் கொண்டுவந்தது யார் என்று தெரியவில்லை.

எ் => எு 



3) ஒகரத்தையும் ஓகாராத்தையும் வேறுபடுத்தல்:


இங்கேயும் குறிலையும் நெடிலையும் வேறுபடுத்த வீரமாமுனிவர் ஒகரத்தின் கீழே சுழி சேர்த்து அதை நெடிலாக்கினார்.

                                                                 ஒ் => ஓ 



உயிர்மெய்யெழுத்துச் சீர்திருத்தம்:


1) எகர ஏகார உயிர்மெய் வேறுபடுத்தல்:

தேன் என்பதைத் தென் என்பதிலிருந்து வேறுபடுத்த எகர ஒலி ஏகார ஒலியாக வேண்டும். இவ்வேறுபாட்டைக் காட்ட வீரமாமுனிவர் எகர ஒலியைச் சுட்டுகின்ற கொம்புக்கு மேலே சுழி அமைத்து, ஏகார ஒலி பெறச் செய்தார்.

                                                           தெ்ன் => தேன். 


2) ஒகர ஓகார உயிர்மெய் வேறுபடுத்தல்:

கோல் என்னும் சொல்லைக் கொல் என்னும் சொல்லிலிருந்து வேறுபடுத்த ஒகர ஒலி ஓகார ஒலியாக வேண்டும். இவ்வேறுபாட்டைக் காட்ட முனிவர் ஒகர ஒலியைச் சுட்டுகின்ற கொம்புக்கு மேலே சுழி அமைத்து, ஓகார ஒலி பெறச் செய்தார்.

                                                          தெ்ால் => தோல் 


3) உயிர்மெய்யெழுத்தில் ஆகாரத்தையும் ஓகாரத்தையும் சுட்டும் காலை ரகரத்திலிருந்து வேறுபடுத்தல்:


மான் என்னும் சொல்லிலும் கோன் என்னும் சொல்லிலும் ஆகாரமும் ஓகாரமும் வருகின்றன. 

அவற்றைக் குறிக்க பயன்படும் கால் ரகரம் போல் இருந்தாலும் அது கீழே வளைவு பெறுவதில்லை. 

இவ்வாறு வளைவு கொடுத்து நெடிலைச் சுட்டும் காலை ரகரத்திலிருந்து வேறுபடுத்தும் முறை வீரமாமுனிவர் கொணர்ந்த சீர்திருத்தம் அல்ல. 

அவர் காலத்திலேயே சிலர் கிரந்த ரகரம் போன்ற இம்முறையைக் கையாண்டனர் என்றும், தாமும் அவ்வாறு எழுதியதாகவும் முனிவர் கூறுகிறார். 

அதையே அவரும் பயன்படுத்தி வழக்கத்தில் கொண்டுவந்தார்.

இந்த ரகரம் சீர்திருத்தம் மலையாளத்தில் உள்ள ரகரம் "ര" போல இருந்தது.


பயன்:

உயிரெழுத்திலும் உயிர்மெய்யெழுத்திலும் வீரமாமுனிவர் கொணர்ந்த எகர ஒகர சீர்திருத்தத்தை ஆட்சியாளரும், அச்சகத்தாரும், அச்சடித்தோரும் ஏற்று நடைமுறைக்குக் கொண்டு வந்ததால் அச்சீர்திருத்தம் இன்றும் நிலைபெற்று, அனைவரும் மேற்கொள்ளும் வழக்கமாக வந்துவிட்டது.

தாம் செய்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வீரமாமுனிவரே தமது தமிழ்-இலத்தீன் அகராதியின் (1744) முன்னுரையில் 15ஆம் பத்தியில் விளக்கியுள்ளார்.

வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தின் சிறப்பை 
ச. இராசமாணிக்கம் கீழ்வருமாறு விவரிக்கிறார்:


“ தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழ் எழுத்துக்களை எவராலும் மாற்ற முடியவில்லை...வெளிநாட்டில் பிறந்து, ஏலாக்குறிச்சி என்ற சிற்றூரில் பாமர மக்களிடையே பணிபுரிந்த வீரமாமுனிவர், இத்தகைய சீர்திருத்தத்தைச் செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது, செயற்கரிய செயலாகும்...வேறொன்றும் செய்யாமல், இஃது ஒன்றை மட்டும் செய்திருந்தாலே, அவருக்குத் தமிழில் சிறந்த இடம் கிடைத்திருக்கும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பி.இ, எம்.பி.ஏ முடித்தவர்களுக்கு வேலை | EMPLOYMENT NOTIFICATION IN CHENNAI METRO RAIL LIMITED

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் (சிஸ்டம்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ்) பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து ஜூலை 19-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

பணி: Director (Systems & Operations)

காலியிடங்கள்: 01

வயது வரம்பு:  58-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்:

Basic Pay - ரூ.75,000

IDA (Currently 127.2% of Basic Pay) - ரூ.95,400

HRA (30% of Basic Pay) - Rs. 22,500

Cafeteria Allowance (35% Basic Pay) - ரூ.26,250

Gross Pay - ரூ.2,19,150

தகுதி: பொறியியல் துறையில் எலக்டிரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும். மேலும் எம்பிஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.07.2018

விண்ணப்பிக்கும் முறை: https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/06/CMRL-HR-06-2018.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

General Manager (HR),
Chennai Metro Rail Limited, Admin Building, 
CMRL Depot, Poonamallee High Road, 
Koyambedu, Chennai- 600107


மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/06/CMRL-HR-06-2018.pdf

வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை | VACANCIES TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT

தமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்:  09

பணி: Senior Scientist & Head - 01 

சம்பளம்: மாதம் ரூ.37,400-67000.

பணி: Programme Assistant (Lab Technician) - 01

பணி: Programme Assistant (Farm Manager) - 01

பணி: Programme Assistant (Computer) - 01

சம்பளம்: மாதம் ரூ.9,300-34800.

பணி: SMS (Animal Science) - 01

பணி: SMS (Agricultural Engineering) - 01

சம்பளம்: மாதம் ரூ.15600-39100.

பணி: Assistant (Office) - 01

சம்பளம்: மாதம் ரூ.15600-39100.

பணி: Stenographer (Grade-III) - 01

சம்பளம்: மாதம் ரூ.5200-20200.

பணி: Driver (Jeep) - 01

சம்பளம்: மாதம் ரூ.5200-20200.

தகுதி: ஐ.டி.ஐ முடித்தவர்களில் இருந்து, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 முதல் 45-க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://krishnagirikvk.org/REUP/NOTIFICATIONNo.01-2018-TNBRD.PDF என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

THE PRESIDENT, 
TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, 
Post Box No. 8811, T. Nagar, Chennai - 600 017, 
Tamil Nadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 14.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://krishnagirikvk.org/REUP/NOTIFICATIONNo.01-2018-TNBRD.PDF

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை | Opportunities In Reserve Bank of India (RBI)

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூலை 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : மருத்துவ ஆலோசகர் (Medical Consultant (MC))

காலியிடங்கள் : 02

தகுதி: அல்லோபதி துறையில் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:  ஒரு மணி நேரத்திற்கு ரூ.850

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/EMC18062018_AN3.pdf லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Reserve Bank of India,
Main Office Building Dispensary,
6, Sansad Marg,
New Delhi - 110 001

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.07.2018

மேலும் விண்ணப்பம் குறித்து முழுமையான விபரங்களுக்கு : https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3498

Friday, June 22, 2018

ஜூலை 3 -இல் வேளாண் உதவி பொறியாளர் நேர்காணல்

வேளாண் துறை உதவி பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு வரும் 3 -ஆம் தேதி (ஜூலை 3) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. 

இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-


தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் பணிக்கான உதவி பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 7 -இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதில் 3,241 பேர் பங்கேற்றனர்.

போட்டியாளர்கள்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 46 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கான நேர்காணல் தேர்வு ஜூலை 3 -ஆம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று சுதன் தெரிவித்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு 8 மாவட்டங்களில் ரத்து

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்பட 8 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வை நடத்தக் கோரி, திருவண்ணாமலையில் இடைநிலை ஆசிரியர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கான கலந்தாய்வு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்தது.

கலந்தாய்வின் இறுதி நாளான வியாழக்கிழமை இடைநிலை ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டம் விட்டு வருவாய் மாவட்டம் மாறும் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெற இருந்தது. இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ள 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் - ஆசிரியைகள் விண்ணப்பித்திருந்தனர்.

கலந்தாய்வு நிறுத்தம்: இந்த நிலையில், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி உள்பட 8 மாவட்ட அரசுப் பள்ளிகளில் அதிகப்படியான காலிப் பணியிடங்கள் இருப்பதால், வியாழக்கிழமை நடைபெற இருந்த கலந்தாய்வை புதன்கிழமை இரவு தொடக்கக் கல்வி இயக்ககம் ரத்து செய்தது. இதனால், 8 மாவட்டங்களிலும் கலந்தாய்வு நிறுத்தப்பட்டது.

கலந்தாய்வில் கலந்து கொள்ள வியாழக்கிழமை காலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த ஆசிரிய - ஆசிரியைகள் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்ட தகவலறிந்து அதிர்ச்சியடைந்தனர்

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் இயங்கும் தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, அலுவலகம் எதிரே தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

அப்போது, இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வை உடனே நடத்தக் கோரி முழக்கம் எழுப்பினர். பின்னர், தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமாரிடம் அளித்தனர். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வீரமாமுனிவர் | Constantine Joseph Beschi | History Of Veerama Munivar In Tamil

வீரமாமுனிவர் | Constantine Joseph Beschi | History Of Veerama Munivar:

வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பிப்ரவரி 4, 1747)  இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். 

கோனான்குப்பத்தில்
பெரிய நாயகி அன்னை
ஆலயத்தின் முன்
அமைந்துள்ள
வீரமாமுனிவர் திருவுருவம்
இவரின் இயற்பெயர் - கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி "Constantine Joseph Beschi." இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். 

கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம்ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

இவர் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1710 சூனில் கிறித்தவ மதம் பரப்பு பணி செய்ய கோவா வந்து சேர்ந்தார்.


தமிழக வருகை:

சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்ல உத்தேசித்து, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.

அவரது தமிழக வாழ்க்கை முறை:

1822- இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.

” இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். 

தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார்.

இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். 

இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்”

.
வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை பற்றிய மாற்றுக் கருத்து:

முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840இல் வெளியிட்டார். 

அவர் 1840இல் இறந்த பிறகு அவரது தமிழ் வரலாற்றை 1843இல் அப்பாவுபிள்ளை பதிப்பித்தார். 

எனவே, வீரமாமுனிவர் வரலாறு பற்றி அச்சான முதல் நூல் இதுவே. ஆனால், இதற்கு முன்னரே சாமிநாத பிள்ளை என்பவர் முனிவரின் வரலாற்றை 1798இல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளையே தம் வரலாற்றில் கூறியுள்ளார்.

வீரமாமுனிவரின் வரலாற்றை எழுதிய முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதை வீரமாமுனிவர் தொண்டும் புலமையும் என்னும் ஆய்வுநூலில் ச. இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார் . 

முனிவர் பற்றிய தவறான செய்திகள் எழுந்ததற்கு முக்கிய காரணம் தத்துவ போதகர் என்று சிறப்புப்பெயர் பெற்ற ”இராபர்ட் தெ நோபிலி” என்னும் மறைபரப்பாளர் பற்றிய செய்திகளை வீரமாமுனிவருக்கு ஏற்றியுரைத்ததே என்று இராசமாணிக்கம் ஆய்வினடிப்படையில் நிறுவியுள்ளார். 

தத்துவ போதகர் 1606-இல் மதுரைவந்து ஐம்பது ஆண்டுகளாக உழைத்தபின் 1656- சனவரி 16-ஆம் நாள் மயிலாப்பூரில் உயிர்துறந்தார். அவருக்குத்தான் தத்துவ போதகர்என்ற பெயர் இருந்தது.

வீரமாமுனிவரையும் தத்துவ போதகரையும் பிரித்தறியாமல் எழுந்த குழப்பத்தை இராசமாணிக்கம் பின்வருமாறு விவரிக்கிறார்:

வீரமாமுனிவரே தமிழ் நாட்டில் செல்வாக்கோடு வழங்கி வருவதாலும், தத்துவ போதகர் யார் என்றுகூடப் பொதுமக்கள் அறியாததாலும், தத்துவபோதகர் ஆற்றிய தொண்டு முதலிய எல்லாம் வீரமாமுனிவர் மீது ஏற்றிக் கூறுவதோடு வீரமாமுனிவரையும் தத்துவ போதகர் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 

சைவ உணவையே கையாண்டது, அன்றாட நோன்பு இருந்தது, உயர்ந்த ஆடைகளையே அணிந்தது, பூணூல் போட்டது, கொடியுடைய கோல் ஏந்திச் சென்றது, பல்லக்கில் சென்றது, வடமொழியிலும் தெலுங்கிலும் தமிழில்போல் பாண்டித்தியம் பெற்றது, முதல் முதலாகத் தமிழிலும் தெலுங்கிலும் உரைநடை நூல்கள்.இயற்றியது, இவைபோன்ற பலவற்றைக் கையாண்டவர் தத்துவ போதகர். 

இவற்றை எல்லாம் வீரமாமுனிவர் செய்ததாக முத்துச்சாமிப் பிள்ளையும் அவரைப் பின்பற்றிய பல ஆசிரியர்களும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது.

கொடியுடைய கோலோ, பூணூலோ வீரமாமுனிவர் மேற்கொள்ளவில்லை. அவற்றை அணிந்தவர் தத்துவ போதகரே. தத்துவ போதகர் வேறு, வீரமாமுனிவர் வேறு.

ஆகவே வீரமாமுனிவரைத் தத்துவ போதகர் என்று அழைப்பதோ, தத்துவ போதகர் படத்தை வீரமாமுனிவரின் உருவமாகக் காட்டுவதோ பொருத்தமற்றது.

பெயர்மாற்றம்:

மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார்.

தமது பெயரினை தைரியநாதசாமி என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.


தமிழ்ப் பணி:

இவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.

இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிசங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.

தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் ”தமிழ் அகரமுதலி” ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.

சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.

அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். 

மேலும் குறில், நெடில் விளக்க என்று "ாாாா" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.

தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் படித்தறிய எளிதில் முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.

பிற தமிழ் படைப்புகள்:

தொன்னூல் விளக்கம் என்ற நூலில்,

  1. எழுத்து, 
  2. சொல், 
  3. பொருள், 
  4. யாப்பு, 
  5. அணி 
ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.


”கொடுந்தமிழ் இலக்கணம்” என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர்.

வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம்அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும்.

திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். 

உரைநடையில், 

  • வேத விளக்கம், 
  • வேதியர் ஒழுக்கம், 
  • ஞானக் கண்ணாடி, 
  • செந்தமிழ் இலக்கணம், 
  • பரமார்த்த குருவின் கதை, 
  • வாமன் கதை 

ஆகிய நூல்களைப் படைத்தார்.

திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.

1728-இல் புதுவையில் இவரின் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

இந்த நகைச்சுவைக் கதைகள் ”Jean de la Fontaine” (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. 

ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.


காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம் விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். 

இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு.

மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.


வீரமாமுனிவரின் இறப்பு:

வீரமாமுனிவரின் வாழ்வையும் பணியையும் விரிவாக ஆய்ந்துள்ள முனைவர் ச. இராசமாணிக்கம் வீரமாமுனிவரின் இறப்புப் பற்றிய செய்தியைக் கீழ்வருமாறு தருகின்றார்:

1742-இல் மதுரைப் பணித்தளம் விட்டுச்சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணிபுரிந்தபின், 1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர்துறந்தார்.

திப்பு சுல்தான் காலத்தில் நடந்த வேதகலாபனையில் பல கிறித்துவ நிறுவனங்கள் இடம் தெரியாமல் அழிந்து போயின.


வீரமா முனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதையை 1822 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெஞ்சமின் பாபிங்டன் என்பவர் "வீரமா முனிவர் திருச்சியில் சந்தா சாகிப் என்பவரின் அரசில் திவானாகப் பணியாற்றினார் என்றும், பின்னர் மரதர்களின் படையெடுப்பை அடுத்து, வீரமாமுனிவர் டச்சு ஆட்சியில் இருந்த காயல்பட்டினத்தில் வாழ்ந்து நோயால் தாக்கப்பட்டு இறந்தார்" எனக் குறிப்பிடுகிறார்.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கெளவுரவ உதவி பேராசிரியர் பணி | Jobs In Allahabad University

மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 204 கெளவுரவ உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கெளவுரவ உதவி பேராசிரியர்

காலியிடங்கள்:  204

பணியிடம் உள்ள துறைகள்: ஆர்கியாலஜி, ஏன்சியன்ட் ஹிஸ்ட்ரி, ஆந்ரோபாலஜி, அராபிக் அண்ட் பெர்சியன், எஜூகேசன், ஜியோகிராபி, இந்தி, பிலாசபி, பிசிகல் எஜுகேசன், பொலிடிகல் சயின்ஸ், சைகாலஜி, உருது, சோசியாலஜி, எக்கனாமிக்ஸ், சட்டம், தாவரவியல், கணிதவியல், இயற்பியல், புள்ளியியல், உயிரியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியிடங்கள் உள்ளன.

தகுதி:  சம்மந்தப்பட்ட துறைகளில் முதுநிலை படிப்புடன், ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள், நெட், ஸ்லெட்,செட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கல்வி பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை படிப்புடன், முதுகலை ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.allduniv.ac.in 

இந்திய கடற்படையில் வேலை | Various Jobs In Indian Navy

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சமையல்காரர், பரிமாறுபவர், துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கான கோர்ஸ் காமென்சிங் ஏப்ரல் 2019 சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு திருமணமாகாத, இந்திய குடியுரிமை பெற்ற ஆண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 01.4.1998 மற்றும் 31.3.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தகுதி: பத்தாம் வகுப்பு (மெட்ரிகுலேசன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செப்  பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சைவம் மற்றும் அசைவ உணவு தயாரிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஸ்டீவார்டு பணியாளர்கள், உணவு பரிமாறுதல் மற்றும், உணவு தயாரித்தலுக்கான உதவி பணிகள், ஹவுஸ் கீப்பிங் பணிகளை கவனிக்க வேண்டும்.

ஹைஜீனிஸ்ட் பணியாளர்கள் அறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 15 வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 

அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 

இது 15 ஆண்டு காலத்தைக் கொண்ட பணிவாய்ப்பாகும். அதன் பின்னர் தகுதியின் அடிப்படையில் பணி வாய்ப்பு பெறலாம்.


விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.07.2018

மேலும் வயதுவரம்பு சலுகை, உடல் தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய  : www.joinindiannavy.gov.in

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...