Thursday, May 31, 2018

சென்னை கடல் சார் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி அமைப்பான நேஷனல் சென்டர் பார் சஸ்டெய்னபிள் கோஸ்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 157

பணி காலியிடங்கள் விவரம்:

பணி: Project Associate - 71
பணி: Project Scientist - 26
பணி: Research Assistant - 24
பணி: Multi Tasking Staff - 11
பணி: Technical Assistant I-07
பணி: Technical Engineer I -06
பணி: Administrative Associate - 06
பணி: Maintenance Engineer II
பணி: Multi Tasking Staff - 02
பணி: Driver cum Multi - Tasking Staff - 02
பணி: Finance Assistant - 02 
பணி: Finance Associate - 01
பணி: Procurement Assistant -01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். எம்டிஎஸ் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், மற்ற பணியிடங்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ncscm.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:01.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.ncscm.res.in:8082/ncscmPJobs/resources/doc/NCSCM-HR0418-Advertisement-18-05-2018.pdf

இந்திய கடற்படையில் பயிற்சியுடன் மாலுமி வேலை

இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இந்திய இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது "செய்லர் பிப்ரவரி-2019" என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையிலான மாலுமி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் டூ முடித்த இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: செய்லர் பிப்ரவரி-2019

வயது வரம்பு: 1.2.1998 மற்றும் 31.1.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் அடங்கிய அறிவியல் பிரிவில் பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 22 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் அளிக்கப்படும். மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1  பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2018

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in

Wednesday, May 30, 2018

தேசிய உர நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உடனடி வேலை

உத்தரபிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு தெலங்கானா, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 இடங்களில் செயல்பட்டு வரும் என்.எப்.எல் என அழைக்கப்படும் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமான தேசிய உர நிறுவனத்தின் பதிண்டா, பானிபட், விஜய்பூர், நங்கல் போன்ற கிளைகளில் காலியாக உள்ள 129 ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 129

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Engineering Assistant - 127

தகுதி: பொறியியல் துறையில் Production, Mechanical, Electrical Instrumentation, Electrical&Electronics போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதத்தில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.9,000 - 16,400

பணி: Fireman - 02

தகுதி:\ பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.235 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஓட்டப்பயிற்சி, எடை தூக்குதல், கயிறு ஏறுதல், பார்வைத்திறன் சோதனை போன்றவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட உடல் தகுதி சோதிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nationalfertilizers.com இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2018

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.07.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு : http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/AddNONEXECUTIVES.pdf

ரயில்வேயில் டிராக்மேன், கலாசி வேலை

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் துணை நிறுவனம் கொங்கன் ரயில்வே. கொங்கன் ரயில்வே கார்பரேசன் மூலமாக இது கட்டமைக்கப்பட்டு, இந்தியா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்குக் கடற்கரை வழியாக கர்நாடகாவில் உள்ள மங்களூரில் இருந்து கோவா வழியாக மஹாராஷ்டிராவில் உள்ள மும்பை வரையிலான தனது சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இது மற்ற ரயில்வே மண்டலங்களின் கீழ் வருவதில்லை.

தற்போது இந்த கொங்கன் ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள 100 டிராக்மேன், கலாசி உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 100

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Track man - 50
பணி: A pman -07
பணி: Khalasi Electrical - 02
பணி: Khalasi S &T - 08
பணி: Khalasi Mechanical - 03

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2018 தேதியின்படி 18 முதல் 31க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினித் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://konkanrailway.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.250 செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலமும் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு: http://www.konkanrailway.com/uploads/vacancy/1527051865Notification_5-2018.pdf

விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர் வேலை

மும்பையில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் காலியாக உள்ள 36 ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Scientific Assistant-B (Civil) - 3
பணி: Scientific Assistant-B (Electrical) - 2
பணி: Scientific Assistant-B (Mechanical) - 2
பணி: Scientific Assistant-B (Information Technology / Computer Science) - 2
பணி: Technician-B (Plumbing) - 3
பணி: Technician-B (Carpentry) - 3
பணி: Technician-B (Electrical) - 5
பணி: Technician-B (Computer Operator and Programming Assistant) - 1
பணி: Technician-B (Information & Communication Technology System Maintenance ) - 1
பணி: Technician-B (Draughtsman-Civil) - 1
பணி: Assistant Security Officer-A - 5
பணி: Upper Division Clerk - 6
பணி: Driver (Ordinary Grade) - 2

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் மற்றும் இதர அறிவியல் கலை துறைகளில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் ஓட்டுநர் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 04.06.2018 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும்  முறை:  www.dcsem.gov.in அல்லது                                              https://dcsem.mahaonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: Scientific Assistant - B, Assistant Security Officer-A போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150 மற்றும் Technician - B, Upper Division Clerk , Driver (Ordinary Grade) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு :   http://dcsem.gov.in/resources/uploads/advertisements/advt012018_10534426531525436464.pdf"

ஐஐடி கல்வி மையத்தில் வேலை

புவனேஸ்வரில் செயல்படும் ஐஐடி கல்வி மையத்தில் காலியாக உள்ள 42 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 42
1. Registrar
2. Superintending Engineer (Civil)
3. Assistant Registrar
4. Assistant Librarian
5. Assistant Executive Engineer (Civil)
6. Network Administrator
7. Public Relation Officer
8. Student Counselor
9. Medical Officer (Resident)
10. Sr. Library Information Assistant
11. Junior Superintendent
12. Junior Accounts Officer
13. Horticulturist
14. Junior Hindi Translator
15. Junior Technical Superintendent
16. Technician (System Administration)
17. Technician (Network Administration)
18. Junior Technician
19. Junior Laboratory Assistant
20. Pharmacist
21. Junior Assistant
22. Driver

வயதுவரம்பு: 30 முதல் 57-க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கான வயதுவரம்பை இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி:  இளங்கலை, முதுகலை மற்றும் பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி., எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.iitbbs.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Registrar (Estt.)
Indian Institute of Technology Bhubaneswar,
ToshaliBhawan, Satyanagar,
Bhubaneswar – 751007, Odisha,
Tel. No. 0674 - 257 6187/6186

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு: 

வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

ஏ.எஸ்.ஆர்.பி என அழைக்கப்படும் வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 6 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 31

பணிகள்: இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர், திட்ட இயக்குநர், திட்ட துணை இயக்குநர்.

வயதுவரம்பு: 04.06.2018-ஆம் தேதியின்படி 60 க்குள் இருக்க வேண்டும்.

வேளாண் சார்ந்த குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் முனைவர் (பி.எச்டி) முடித்திருப்பதுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://asrb.org.in

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு ஆபரேட்டர் பணி

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 58 ஜூனியர் ஆபரேட்டர் மற்றும் ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  58

பணியிடம்: ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி

பணி: ஜூனியர் ஆபரேட்டர்

பணி: ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐடிஐ முடித்தவர்கள், பிளஸ் டூ தேர்ச்சி பெற்று கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.6.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 30.7.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : www.iocl.com

தமிழ்நாடு தொழிலக முதலீட்டுக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு தொழிலக முதலீட்டுக் கழகத்தில் சி.ஏ./ ஐ.சி.டபிள்யூ.ஏ./ முதுகலைப் பட்டத்துடன் எம்பிஏ படித்தவர்களுக்கு வேலை.

பதவி: சீனியர் ஆஃபிஸர் (ஃபினான்ஸ்)

காலியிடங்கள்: 23

கல்வித் தகுதி:  சி.ஏ. / ஐ.சி.டபிள்யூ.ஏ. / முதுகலைப் பட்டத்துடன் எம்.பி.ஏ  முடித்திருக்க வேண்டும் அல்லது இந்திய மேலாண்மைக் கழகத்தில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: ஓராண்டு முன் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

பதவி: சீனியர் ஆஃபிஸர் (டெக்னிக்கல்)

காலியிடங்கள்: 20

கல்வித் தகுதி: பி.இ. , பி.டெக் , ஏ.ஐ.எம்.இ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி. / எம்பிசி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை: www.tiic.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர், பிசி, எம்பிசி, பட்டியலிடப்படாத வகுப்பினர், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500; எஸ்சி/ எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250.கட்டணம்.

மேலும் விபரங்களுக்கு: http://meta-secure.com/TIIC-live/Pdf/Recruitment_Notification.pdf

Tuesday, May 29, 2018

தேசிய அனல் மின் கழகத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை

டிப்ளமோ முடித்தவர்களுக்கு தேசிய அனல் மின் கழகத்தில் வேலை.


பதவி: டிப்ளமோ இன்ஜினியர் (எலெக்ட்ரிக்கல்)

காலியிடங்கள்: 10

கல்வித் தகுதி: எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

பதவி: டிப்ளமோ இன்ஜினியர் (மெக்கானிக்கல்)

காலியிடங்கள்: 14

கல்வித் தகுதி: மெக்கானிக்கல், புரடஷ்ன் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

பதவி: டிப்ளமோ இன்ஜினியர் (சி & ஐ)

காலியிடங்கள்: 06

கல்வித் தகுதி: இன்ஸ்ட்ரூமென்டேஷன் / எலெக்ட் ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமோ 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர், ஓபிசி பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ntpccareers.net என்ற இணையதளத்துக்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் / ஓபிசி ரூ.300, மற்ற பிரிவினர்களுக்கு கட்டணமில்லை.


மேலும் விபரங்களுக்கு:  http://www.ntpccareers.net/DT2018_1/files/SRENG.jpg என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 04.06.2018.

தேசிய காசநோய் ஆய்வு நிறுவனத்தில் முதுகலை பட்டதாரிகளுக்கு வேலை

முதுகலை பட்டதாரிகளுக்கு தேசிய காசநோய் ஆய்வு நிறுவனத்தில் வேலை .

பதவி: கன்சல்டன்ட் (Non Medical)

காலியிடங்கள்: 03

கல்வித் தகுதி: சமூக அறிவியல்/ உயிரி அறிவியல்/ நோய் தொற்றியல் / பொது ஆரோக்கியம்/ உளவியல் துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில்  5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

பதவி: கன்சல்டன்ட் (Accountant)

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். சீனியர் ஆஃபிஸர் / அசிஸ்டெண்ட் / அக்கவுண்டன்ட் பணியில் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:https://icmr.nic.in/icmrnews/vacancy%20advt%20consultant%20-%2099DOTS-final.pdf

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:04.06.2018

முகவரி: 

தேசிய காசநோய் ஆய்வு நிறுவனம், 
எண்.1, மேயர் சத்தியமூர்த்தி சாலை,
சேத்துப்பட்டு, சென்னை-600031.

டி.ஆர்.டி.ஓ.வில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

பொறியியல் பட்டதாரிகளுக்கு  டி.ஆர்.டி.ஓ.வில் சயின்டிஸ்ட் வேலை.

பதவி: Scientist "B" - Electronics & Communication Engg. (EC)

காலியிடங்கள்: 22 

கல்வித் தகுதி:- பி.இ. அல்லது பி.டெக் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பதவி: Scientist B - Computer Science  Engg.

காலியிடங்கள்: 19

கல்வித் தகுதி:  பி.இ./ பி.டெக் ;கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினர் 28 வயதுக்குள்ளும், ஓபிசி (நான் கிரீமிலேயர்) 31 வயதுக்குள்ளும், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் 33 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rac.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு} ரூ.100, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: https://rac.gov.in/cgibin/2018/advt_132/public/pdf/advt_132.pdf?87e58e78ef2f4cbd4aaafc691d89d519=1 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 01.06.2018.

மும்பை அணுசக்தி கனநீர் வாரியத்தில் வேலை

மும்பை அணுசக்தி கனநீர் வாரிய நிறுவனத்தில் காலியாக உள்ள 226 ஸ்டிபென்டரி டிரெயினி, டெக்னீசியன், சயின்டிபிக் ஆபீசர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 226

பணி: Stipendiary Trainee

1. Chemical - 35
2. Mechanical - 16
3. Electrical - 08
4. Chemistry (Laboratory) - 08 
5. Bioscience - 03


பணி: Stipendiary Trainee

6. Process/ Plant Operator - 60 
7. Electrical - 28
8. Mechanical (Fitter) - 34 
9. Turner - 04
10. Machinist - 05
11. Welder - 06
12. Draughtsman (Civil / Mechanical) - 02

பணி: Technician - C / D (Crane / Forklift Operator) - 02
பணி: Scientific Officer/D (Medical - General Medicine) - 02
பணி: Nurse/A - 05
பணி: Stenographer Grade-II - 02
பணி: Stenographer Grade-III - 02
பணி: Upper division clerk (UDC) - 07


தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிஸ்ட்ரி, பயோசயின்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் ஸ்டிபென்டரி டிரெய்னி பணிக்கும், 12-ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்தவர்கள் மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின் ஐடிஐ படித்தவர்களுக்கும், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர் போன்ற பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஆராய்ச்சி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, உடல் பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.hwb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : www.hwb.gov.in

தமிழக அரசில் 805 உதவி தோட்டக்கலை அலுவலர் வேலை

தமிழக அரசில் காலியாக உள்ள 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 24க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 805

பணி: Assistant Horticultural Officer (Code No.3104) - 757

பணி: Assistant Horticultural Officer (Code No.3104) - 48

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அல்லது தோட்டக்கலை மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் இயக்குநர் அல்லது காந்திகிராம் கிராம நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இரண்டு ஆண்டு தோட்டக்கலை டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பில்லை.

சம்பளம்:  மாதம் ரூ.20,600 - 65,500

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்:  ரூ.100, பதிவுக் கட்டணம் ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:11.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tnpsc.gov.in/notifications/2018_10_AHO.pdf

Monday, May 28, 2018

ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் | 300 கி.மீ. மைலேஜ்

 Honda _ Jazz


2020ம் ஆண்டு ஹோண்டா நிறுவனத்தின் ஜாஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்சனை வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கார் பேட்டரி முழு சார்ஜில் இருந்தால் சுமார் 300 கி.மீ. வரை ஓடும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் கார்கள் குறித்து பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எலெக்ட்ரிக் கார்களால் பல நன்மைகள் கிடைப்பதால் இன்று ஆட்டோமொபைல் துறையில் கால் பதித்துள்ள பெரும் நிறுவனங்கள் வரும் காலம் குறித்த பயம் வந்து விட்டது.
எலெட்ரிக் வாகனங்கள் தயாரிப்பது மிக சுலபமாக இருப்பதால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையில் பெரும் ஜாம்பவான்களாக விளங்குள் நிறுவனங்களில் வாகனங்களுக்கு போட்டியாக வாகனங்களை தயாரித்து சவால் விட துவங்கி விட்டனர்.

இதை சமாளிக்க ஹோண்டா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதன் படி திட்டம் அனைத்தும் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. வரும் 2020ம் ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இத்திட்டத்தின் படி ஏற்கனவே மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க பெயரைபெற்றுள்ள ஜாஸ் காரில் எலெக்ட்ரிக் வேரியன்டை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார் குறித்து தற்போது ஹோண்டா நிறுவனம் திட்டமிட்ட தொழிற்நுட்பத்தை இந்த காரில் பொருத்தும் பட்சத்தில் இந்த கார் முழு பேட்டரி சார்ஜில் சுமார் 300 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அந்நிறுவனம் சீனாவை சேர்ந்த கான்டெம்ரரி அம்பெரெக்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அந்நிறுவனம் ஹோண்டா ஜாஸ் கார்களுக்கான பேட்டரியை தயாரித்து வழங்கவிருக்கிறது.

மேலும் சீனாவிலேயே இந்த காரை தயாரித்து விற்பனை செய்தால் பேட்டரி தயாரிப்பிலும் சீன அரசு சலுகைகளை வழங்குகிறது. தற்போது விற்பனையாகும் ஹோண்டா ஜாஸ் காரின் மாடல்கள் எதுவும் மாற்றப்படுகிறதா அல்லது இதே மாடலில் எலெட்ரிக் பாகங்கள் பொருத்தப்படுகிறதா என்பது குறித்து தகவலை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

தற்போது வந்துள்ள தகவலின் படி சீனாவில் இந்த காரை இந்திய மதிப்பின் படி ரூ16.34 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த கார் தயாரிப்பிற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது ஆண்டிற்கு 10,000 கார்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் எச்ஆர்-வி எஸ்யூவி கார்களை பிஜிங்கில் நடந்த ஒரு ஆட்டோ எகஸ்போவில் கண்காட்சிக்கு வைத்தது. இந்த கார் இந்தாண்டு விற்பனைக்கு வரும் என பேசப்படுகிறது. இந்த காரை சீனாவின் வென்சர் மார்க் என்ற நிறுனவத்துடன் ஒப்பந்தமிட்டு தயார் செய்துள்ளது.

தற்போது ஹோண்டா நிறுவனத்திடம் ஒரு, இரண்டாம் தலைமுறை எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே உள்ளன. இந்த கார் முழுவதும் கலிபோர்னியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த காரில் 25.5 கிலோ வாட்ஸ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 300 என்எம் டார்க் திறனை வழங்ககூடியது. முழு பேட்டரி சார்ஜில் 129 கி.மீ. வரை பயணம் செய்யலாம்.

இந்த காரை இந்தியாவில் விற்பனை செய்வது குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் இந்தியாவில் டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. டாடா டிகோர் காரின் எலெக்ட்ரிக் வேரியன்டை வெளியிட அந்நிறுவனம் தயாராகி வருகிறது.

Sunday, May 27, 2018

பெண்கள் பற்றிய அற்புதமான வார்த்தைகள்

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.

அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். 

அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்துஉடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். 

அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். 

இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.

“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.

அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். 

அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். 

கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். 

மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.

“ஓ………இந்த அளவுக்கு ஒரு பெண்ணால் யோசிக்க முடியுமா?” என்று தேவதை கேட்டது.

“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்றார் கடவுள்.

அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.

“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.


*பெண்மையை மதிப்போம்.

நரைமுடியை கருமையாக்க

நரைமுடியை போக்கி தலைமுடியை கருமையாக்க சில எளிய முறை , இதனை பின்பற்றலாமே...
தேவையான பொருட்கள்:

  1. பீட்ருட் சிறிய சைஸ்
  2. காபி பவுடர் - 3 ஸ்பூன்
  3. அரைத்த 10 செம்பருத்தி
  4. எலுமிச்சை

பீட்ரூட்டைத் துருவி, அதனுடன் காபி பவுடர், செம்பருத்தி பேஸ்ட் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அது 50 மில்லி அளவுக்கு சுண்ட வைக்க வேண்டும். 

சுண்டியதும் சிறிது நேரம் சூடு அடங்கும் வரை வைத்திருக்க வேண்டும்.

பின்னர் அதில் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தலையில் தேய்த்து 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை வைத்திருந்து பின் தலையை அலச வேண்டும். 

இதுபோன்று வாரம் ஒருமுறை செய்து வந்தால் கூடிய விரைவில் நரைமுடி கருமையாக மாறிவிடும்.

Saturday, May 26, 2018

எஸ்பிஐ வங்கியில் அதிகாரி வேலை

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: HR Specialist - 01

பணி: HR Specialist (Manpower Planning) - 01

பணி: Internal Comminication Specialist - 01

தகுதி: மனிதவளத் துறையில் எம்பிஏ, பிஜிடிஎம், சந்தையியல், மாஸ் மீடியா, நிதியியல், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ண்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2018

செளத் இந்தியன் வங்கியில் சட்ட, பாதுகாப்பு அதிகாரி வேலை

கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செளத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள சட்டம் மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Probationary Legal Officers

காலியிடங்கள்: 09

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தகுதி: குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் எல்எல்பி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Probationary Security Officers

காலியிடங்கள்: 07

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42.020

தகுதி: பொறியியல் துறையில், இசிஇ, இஇஇ, இன்ஸ்ரூமென்டேசன், பையர் மற்றும் சேப்டி பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத்


விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.200 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2018

Friday, May 25, 2018

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் குரூப் 'பி', 'சி' வேலை

மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் ஆந்திரப் பிரதேச மாநிலம் மங்கலகிரியிலும், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 60 லேப் டெக்னீஷியன், எழுத்தர், காசாளர், ஸ்டோர் கீப்பர் போன்ற குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தகுதி: பெரும்பாலான பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 18 முதல் 45க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கும், ஓபிசி பிரிவினர் ரூ.1,000. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.aiimsraipur.edu.in/upload/vacancies/5afaccbdc29c0__Final%20Web%20Advt%20DR%20_Nagpur_.pdf 

விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் மேலாண்மைப் பயிற்சியாளர் வேலை

விசாகப்பட்டினம் இரும்பு ஆலையின் (ராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட்) மனிதவளத் துறை மற்றும் மார்க்கெட்டிங் துறையில் காலியாக உள்ள 14 மேலாண்மைப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மேலாண்மைப் பயிற்சியாளர்

தகுதி:  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டுத் தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு:01.02.2018 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.100. விண்ணப்பக் கட்டணத்துக்கு 18 சதவீத ஜிஎஸ்டி உண்டு.


விண்ணப்பிக்கும் முறை: www.vizagsteel.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூன் 25 முதல் ஜூலை 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2018 ஜூலை 8-ஆம் தேதி நடைபெறும் யூ.ஜி.சி, நெட் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மட்டுமே இந்தப் பணிகளுக்குத் தகுதியுடையவராகக் கருதப்படுவார்கள்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.vizagsteel.com/code/tenders/jobdocs/22097MT%20_HR%20%20Marketing_%20Advertisement%20Final.pdf

கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை


மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள குரூப்-ஏ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரிகள் தரத்திலான உதவி கமாண்டன்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜெனரல் டியூட்டி, ஜெனரல் டியூட்டி பைலட், கமர்சியல் பைலட் போன்ற பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடியுரிமை பெற்ற மணமாகாத இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ் டூ படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.


பிளஸ் டூ படிப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: ஜெனரல் டியூட்டி (ஆண் - பெண்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1994 மற்றும் 30.06.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஜெனரல் டியூட்டி பைலட், மற்றும் கமர்சியல்பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1994 மற்றும் 30.06.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, மருத்துவ தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு: http://www.joinindiancoastguard.gov.in

தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள தோட்டக்காரர், காவலர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்:23

பணி: தோட்ட பராமரிப்பாளர் - 13

பணி:வாட்ச்மேன் - 10

தகுதி: குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

சுற்றுலா ஆணையர், 
சுற்றுலா ஆணையரகம், 
தமிழ்நாடு சுற்றுலா வளாகம், 
எண்.2, வாலாஜா சாலை, 
சென்னை- 600002.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018


மேலும், விண்ணப்ப மாதிரி,விண்ணப்ப படிவம், வயதுவரம்பு சலுகை, சம்பளம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை பற்றி தெரிந்துக்கொள்ள :
www.tamilnadutourism.org  என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆர்.எ.சி நிறுவனத்தில் வேலை

டி.ஆர்.டி.ஓ என அழைக்கபடும் ராணுவ பாதுகாப்பு மேம்பாடு மற்றும் வளர்ச்சி கழக நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையம் (ஆர்.எ.சி.) நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் - பி, பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஜூன் 1க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 41

பணி: சயின்டிஸ்ட் - பி

வயதுவரம்பு: 01.6.2018 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு :rac.gov.in

Thursday, May 24, 2018

சருமத்தை பொலிவு பெற செய்ய வேண்டியவை


மஞ்சள் மற்றும் தயிர்:

தயிரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும் இப்படி செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் பொலிவு பெறும்.

தேங்காய் எண்ணெய்:

கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுதுவதற்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்தால் சரும செல்களுக்கு சத்துகள் கிடைப்பதோடு, வறண்ட சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கற்றாழை:

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசி சுமார் ½ மணி நேரம் ஊறவிட்டு அதன் பின்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இதன் மூலம் கற்றாழை ஜெல்லில் உள்ள மருத்துவ குணங்களால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்பட்டு, சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் சருமத்தின் அழகும் அதிகரிக்கும்

மெட்டி அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

மெட்டி அணிவது ஏன்?



பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.

ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்.

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். 

கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். 

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். 

காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

Wednesday, May 23, 2018

பேங்க் ஆஃப் பரோடா பைனான்சியல் சொல்யூஷன் நிறுவனத்தில் வேலை

பேங்க் ஆஃப் பரோடா பைனான்சியல் சொல்யூஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவி: ஏரியா சேல்ஸ் மேனேஜர்

கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எம்பிஏ அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 8 ஆண்டுகள் முன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.


பதவி: டீம் லீடர்

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 
5 ஆண்டுகள் முன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.


பதவி: சேல்ஸ் எக்ஸிகியூடிவ் - Gradutes

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஓராண்டு முன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.


பதவி: சேல்ஸ் எக்ஸிகியூடிவ் - Under Gradutes

தகுதி: பட்டப்படிப்பில் முதலாமாண்டு முடித்து இன்னும் முழு படிப்பையும் முடிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறு நிதி நிறுவனங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் சேல்ஸ் பிரிவில் பணியாற்றியிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.


பதவி: சேல்ஸ் எக்ஸிக்யூடிவ் - Freshers

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.


பதவி: மேலாளர்/ உதவி மேலாளர் - புராஸஸிங்

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஹெச். ஆர். ஆபரேஷன்ஸ் துறை/ எம்ஐஎஸ் துறை/ நிதித்துறையில் குறைந்தது 8 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

காலியிடங்கள்: சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவ் -500, டீம் லீடர்ஸ்-65, ஏரியா சேல்ஸ் மேனேஜர் -25


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுய விவரங்கள், மதிப்பெண் பட்டியல், அனுபவம் உள்ளிட்டவை அடங்கிய பயோ-டேட்டாவைத் தயார் செய்து, salesforce.bob@bobcards.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அவ்வாறு அனுப்பும்போது, எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறோம் என்ற விவரத்தை Subject என்னும் இடத்தில் குறிப்பிட வேண்டும்.

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 25.05.2018.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

மத்திய அரசில் மெடிக்கல் ஆபிஸர் வேலை

மத்திய அரசில் மெடிக்கல் ஆபிஸர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பதவி: மெடிக்கல் ஆபிஸர்

காலியிடங்கள்: 445

தகுதி: எம்பிபிஎஸ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.5.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.upsc.gov.in/sites/default/files/Notification-CMSE-2018-Engl.pdf

Tuesday, May 22, 2018

என் ஆள பார்க்க போறேன் - கயல்

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…
என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேச போறேன்…

அவன் கண்ணுக்குள்ள,
என்னை வைக்க போறேன்.
அவன் நெஞ்சுக்குள்ள,
என்னை தைக்க போறேன்.
நானே…. என்னை…தர போறேன்!

வீட்டுவிட்டு வந்துட்டேனு,
சொல்ல போறேன்.
கூட்டிகிட்டு போயிடுனு,
சொல்ல போறேன்.
இதை தான் எதிர்பார்த்து
நான் கிடந்தேன் உயிர் வேர்த்து’
என சொல்லி,
ஆசையில், அல்லடுவான்!
மனம் துள்ளி காதலில் தள்ளடுவான்!
அதனா பார்த்தே, அழ போறேன்!

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…

உன்னால் தான் தூங்கலைனு,
சொல்ல போறேன்!
சோறு தண்ணி சேரலைனு,
சொல்ல போறேன்!
புதுசா புளுகாம, ரொம்ப பெருசா வழியாம,
அடி எப்ப நீ எனக்கு பொண் ஜாதியா
ஆக போறேன்னு ? அப்பாவியா
நானே… கேட்டு… வர போறேன்!

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்...

வருமான வரித் துறையில் , தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு

மத்திய வருமான வரித் துறையில் காலியாக உள்ள 30 வருவாய் வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 30 (தமிழக விளையாட்டு வீரர்கள்)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:Inspector of Income-tax - 07

சம்பளம்: மாதம் ரூ.9,300 முதல் 34,800 + தர ஊதியம் ரூ.4,600 (PB-2)

பணி: Tax Assistant - 11

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi-Tasking Staff - 14

தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2.400(PB-1) வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை:விளையாட்டு டிரயல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnincometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.06.2018

மேலும் சம்மந்தபட்ட விளையாட்டுத்துறைகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய :https://www.tnincometax.gov.in/download.php?a=1&filename=image1_2018-05-195aff7c8e2693c.pdf

Monday, May 21, 2018

செளத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வரும் பிரபல பொதுத்துறை வங்கியான செளத் இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் ஏராளமான கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் தற்போது காலியாக உள்ள 150 புரபெஷனல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 25க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 150

பணி: Probationary Officers (PO)

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ தேர்ச்சியுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2017 தேயின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. மற்ற பிரிவினருக்கு ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விணணப்பிக்க வேண்டும். அன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
\
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.05.2018

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 2018-இல் நடைபெறும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்:புதுச்சேரி, சென்னை, கோவை, திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.

எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும் முழுமையான விவரங்களுக்கு: : https://www.southindianbank.com/UserFiles/file/Notification_Probationary_Officers_May2018.pdf

பல் வலியை உடனடியாக குணப்படுத்த

  • முதலில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் (தேங்காய் எண்ணெய் கிருமிகளை அழிக்கும்), சிறிதளவு கிராம்பு பொடி (இது வலியை மரத்து போக செய்யும்) சேர்த்து பேஸ்டு செய்ய வேண்டும். 
  • பின்பு மிதமான சூட்டில் உள்ள நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். 
  • பிறகு தயார் செய்த பேஸ்டை வலி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.
  • 15 நிமிடம் கழித்து இளஞ்சூடான நீரால் வாய் கழுவவும். இப்பொழுது பல்வலி நிச்சயமாக குறைந்து இருக்கும்.

108 ஆம்புலன்ஸ் சேவை பணிகளில் 116 பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் சேவை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 116 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் 104 ஆலோசனை மையம் மருத்துவச் சேவைகளை ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உள்பட தமிழகத்தின பல்வேறு மாவட்டங்களில் உள்ள 7 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர், அவசரகால உதவியாளர், தொலைபேசி கட்டுப்பாட்டு மைய ஊழியர் ஆகிய பணியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 30 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் 335 பேர் பங்கேற்றனர். இவர்களில் அவசரகால உதவியாளர் பணியிடங்களுக்கு 65 பேரும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 51 பேரும் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday, May 20, 2018

அரிய தகவல்கள்

  • கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
  • யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
  • கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்.
  • மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
  • ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயிரினம் - ஈரிதழ்சிட்டு.
  • வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
  • ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
  • பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணி நேரம் பேசியுள்ளார்.
  • அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள்11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
  • ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
  • தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.
  • காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது. தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.
  • சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
  • விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
  • சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
  • யானை,குதிரை நின்று கொண்டே தூங்கும்.
  • நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
  • டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.
  • மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.
  • எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
  • உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
  • தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். ஆண்டு 1219.
  •  கத்தரிக்காயின் தாயகம் இந்தியாவே.
  • வெண்மை என்பது நிறம் இல்லை. அது ஏழு வண்ணங்களின் கலவையே.
  • உலகில் 44 நாடுகளுக்கு கடற்கரை இல்லை.
  • இந்தியாவில் தமிழில் தான் ‘பைபிள்’ முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • இறாலின் இதயம் தலையில் இருக்கிறது.

இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 20 ஆயிரம் காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணி

இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் சுமார் 20 ஆயிரம் காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில், இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படையில் (ஆர்பிஎஸ்எஃப்) காலியாக உள்ள 2018-19 ஆண்டிற்கான 9 ஆயிரத்து 739 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிக்காக காத்திருக்கும் இரு பாலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரும் ஜூன் 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மொத்த காலியிடங்கள்: 9739

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: Constable & Sub Inspector

2018-19 Zone Wise RPF/ RPSF Sub Inspector (SI) Vacancy Details:




தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஆண் விண்ணப்பத்தாரர்கள் 165 செ.மீ உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.


வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, அளவீட்டு தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம், சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்குமுறை: http://constable.rpfonlinereg.org  மற்றும் https://si.rpfonlinereg.org/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 01.06.2018

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018


Saturday, May 19, 2018

மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை

தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர், திட்ட மேலாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Accounts Assistant - 01

சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Programme Manager -01 

சம்பளம்: ரூ.35,000

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவர். 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.05.2018 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

செயலாளர் / ஆணையர், 
மாநில குழந்தை பாதுகாப்பு சங்கம், 
சமூகப் பாதுகாப்பு துறை, 
எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, 
கெல்லிஸ், சென்னை-10, 
தொலைபேசி: 044-264221358


மேலும்விபரங்களுக்கு:http://cms.tn.gov.in/sites/default/files/announcement/TNSCPS_recruitment_140518.pdf

துறைமுகத்தில் லோயர் டிவிஷன் கிளார்க் வேலை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் காலியாக உள்ள லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் மே-31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: லோயர் டிவிஷன் கிளார்க்

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.16,300 - 38,200

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கில்டு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் அட்டெஸ்ட் செய்து அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Secretary,
V.O.Chidambaranar Port Trust,
Tuticorin-626 004.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.05.2018

Friday, May 18, 2018

108-ஆம்புலன்ஸ் சேவை வேலைவாய்ப்பு முகாம் | 19-05-2018

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் 19-05-2018 சனிக்கிழமை நடைபெற உள்ளது.

108 ஆம்புலன்ஸ் சேவையை அளிக்கும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் இந்த வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் இம்முகாம் நடைபெறும்.

மருத்துவ உதவியாளர்: பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, டிஎம்எல்டி அல்லது அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்பு படித்த, 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இரு பாலரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இந்தப் பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு ஆகியவை உண்டு.

ஓட்டுநர்: 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இலகுரக ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், உயரம் 162.5 செ.மீ.க்கும் குறையாமல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 73388 93080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்

காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன் 
நடந்தாய் திசை அறிந்தேன் 
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன் 
காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம் 
நிஜம் என்று நினைக்கவில்லை 
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான் 
நம்பி விட்டேன் மறுக்கவில்லை... 
அதிகாலை விடிவதெல்லாம் 
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில் தான் 
அந்தி மாலை மறைவதெல்லாம் 
உன்னைப் பார்த்த கிரக்கத்தில் தான்

காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன்

உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல் 
உள்ளுக்குள்ளே சுழலுதடீ 
உன்னிடத்தில் நான் பெசியது எல்லாம் 
உயிருக்குள் ஒழிக்குதடீ 
கடலோடு பேச வைத்தாய் 
கடிகாரம் வீச வைத்தாய் 
மழையோடு குளிக்க வைத்தாய் 
வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன் 
நடந்தாய் திசை அறிந்தேன் 
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன் ...

கறிவேப்பில்லையின் மருத்துவ குணங்கள்

பொதுவாக உணவில் நறுமணத்திற்க்காகவும், சுவைக்காகவும் சேர்த்து கொள்ளப்படும் கறிவேப்பில்லை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

கறிவேப்பில்லையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி1, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்பு சத்துகள் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் முடி வளர்ச்சிக்கும் இந்த கறிவேப்பில்லை உதவுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் 120 நாள்களுக்கு தினமும் கறிவேப்பில்லையை சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து உடலினை மெலிதாக வைத்து கொள்ள உதவுகிறது.

இரத்த சேகை உள்ளவர்கள் இந்த கறிவேப்பில்லை உடன் ஒரு பேரிச்சை பழத்தினை தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.

இரத்த சேகையை நீக்கும் வல்லமை கொண்டது இந்த கறிவேப்பில்லை.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் பச்சையாக இந்த கறிவேப்பில்லையை சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்ள இந்த கறிவேப்பில்லை உதவுகிறது.

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...