Tuesday, July 31, 2018

இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் : சான்றிதழ் சரிபார்ப்பு | TNPSC 8 A Certificate Verification

இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஆகஸ்ட் 9-இல் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலைப் பணி மற்றும் தொகுதி 8-ஏ-இல் அடங்கிய செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி 20-இல் நடைபெற்றது. அதில் 271 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விகிதாச்சாரம் மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டோரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 9-ஆம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் | Vacancies details in Government Schools

நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்க நிலை, உயர் நிலை பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஸ்வாஹா அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்க நிலை, உயர் நிலை பள்ளிகளில் மொத்தம் 51,03,539 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அந்த பணியிடங்களில், 9,00,316 காலியாக உள்ளன.

தொடக்க நிலை பள்ளிகளில் அதிக அளவில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் மாநிலங்கள் பட்டியலில், உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

அந்த மாநிலத்தில் 2,24,327 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கடுத்து பிகார் 2-ஆவது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 2,03,934 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சிக்கிம், ஒடிஸா, கோவா ஆகிய மாநிலங்கள் அதற்கடுத்து உள்ளன.

உயர் நிலை பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருக்கும் மாநிலங்கள் பட்டியலில் ஜம்மு-காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட 25,657 பணியிடங்களில், 21,221 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பட்டியலில் பிகார் 2ஆவது இடத்திலும், ராஜஸ்தான் 3ஆவது இடத்திலும் உள்ளன என்று குஸ்வாஹா குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு குஸ்வாஹா அளித்துள்ள பதிலில், 7 சதவீத பள்ளிகளில் முக்கிய பழுது பணி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Sunday, July 29, 2018

மத்திய தாது வள நிறுவனத்தில் வேலை | RECRUITMENT FOR VARIOUS POSTS IN MECL

எம்.இ.சி.எல் என அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான மத்திய தாதுவள ஆராய்ச்சி கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 245 துணை பொதுமேலாளர், மேலாளர், உதவியாளர், மெக்கானிக், ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  245

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Deputy General Manager (Finance) - 01
பணி: Manager - 03
பணி: Assistant Manager - 07
பணி: Accounts Officer - 03
பணி: Procurement &Contract Officer - 01
பணி: Foreman (Drilling) - 30
பணி: Technical Assistant (Survey & Draftsman) - 06
பணி: Hindi Translator - 01
பணி: Accountant - 03
பணி: Stenographer - 10
பணி: Technician (Drilling) - 41
பணி: Machinist - 12
பணி: Operator (Computer) - 07
பணி: Assistant (HR) - 29
பணி: Technician (Survey & Draftsman - 06
பணி: Assistant (Hindi) - 01
பணி: Assistant (Materials) - 18
பணி: Technician (Sampling) - 08
பணி: Assistant (Accounts) - 15
பணி: Library Assistant - 02
பணி: Electrician - 02
பணி: Mechanic - 09
பணி: Jr. Driver - 30

வயது வரம்பு: 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக். முடித்தவர்கள் அதிகாரி தரத்திலான பணிகளுக்கும், இளங்கலை பட்டம், பொறியியல் துறையில் டிப்ளமோ, ஐடிஐ, தட்டச்சு முடித்தவர்கள் அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mecl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mecl.gov.in/writereaddata/meclpdf/Detailed%20Advt%20no%20003%20Rectt%202018.pdf"

மருத்துவ துறையில் மருந்தாளுநர் பணிகள் | Corrigendum to Notification for Pharmacist (Siddha/Ayurveda/Homoeopathy/Unani)

தமிழக அரசு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 229 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 229

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. சித்தா - 148
2. ஆயுர்வேத - 38
3. ஓமியோபதி - 23
4. யுனானி - 20

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பார்மசிஸ்ட் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2018 தேதியின்படி 57-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  http://www.mrb.tn.gov.in

"என்சிசியில் சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை | Recruitment in Indian Army with NCC Certificate

என்.சி.சி. 45-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. ’சி’ சான்றிதழ் பெற்ற வீரர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் இந்திய ராணுவத்திற்கு தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமான மற்றும் திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 55 (ஆண்கள் - 50, பெண்கள் - 05)

வயது:  19 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1994 மற்றும் 01.1.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி. பயிற்சியில் ’சி’; சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும்ம் முறை: என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்டவர்களுக்கு தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு இரு நிலைகளில் தேர்வுகள் மற்றும் குழு தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு செய்யப்படுபவர்கள் 49 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : www.joinindianarmy.nic.in

சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் வேலை | Engagement of Apprentice in Integral Coach Factory

சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் ஐசிஎப் எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அளிக்கப்பட 707 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டீஸ் பயிற்சி

காலியிடங்கள்: 707

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. கார்பெண்டர் - 54
2. எலக்ட்ரீசியன் -116
3. பிட்டர் - 230
4. மெஷினிஸ்ட் - 48
5. பெயிண்டர் - 30
6. வெல்டர் - 219
7. எம்.எல்.டி. ரேடியாலஜி, எம்.எல்.டி. பேதாலஜி - 04
8. பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02

வயது வரம்பு: 01.10.2018 தேதியின்படி 15 வயது பூர்த்தி அடைந்தும் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ முடித்தவர்களும், சில பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள், உடல்தகுதிகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icf.indianrailways.gov.in

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி | Apprenticeship Training- Engineering Degree & Diploma at HAL Nasik.

இந்திய விமானப்படையின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமான விமான நிறுவனத்தில் அளிக்கப்படும் 61 தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டீஸ் பயிற்சி

காலியிடங்கள்: 61

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 26-க்குள் இருக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=861&Divkey=27 

Friday, July 27, 2018

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை | RECRUITMENT OF ASSISTANTS IN THE NEW INDIA ASSURANCE COMPANY LIMITED

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 685 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உளஅளவர்களிடமிருந்து வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 685 (தமிழகத்திற்கு - 83)

பணி:  Assistant - 685

சம்பளம்: மாதம் ரூ.14,435 - 40,080

வயது வரம்பு: 30.06.2017-ஆம் தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மாநிலம் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதியில் பேசப்படும் பிராந்திய மொழியில் நன்கு பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மண்டல மொழித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு நிலைகளாக தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மண்டல மொழியறிவு சோதனைக்குப் பின்பு பணியில் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.newindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2018

முதல்நிலை எழுத்துத் தேர்வு செப்டம்பர் 8,9-ஆம் தேதிகளிலும், முதன்மைத் தேர்வு அக்டோபர் 6-ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 25, 2018

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை | RECRUITMENT OF SPECIALIST OFFICERS IN INDIAN OVERSEAS BANK

சென்னையைத் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 20 மேலாளர், சீனியர் மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  20

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Manager (Information Security) - 04

பணி: Manager (Information System Audit) - 06

வயதுவரம்பு: 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

பணி: Senior Manager (Information Security) - 04

பணி: Senior Manager (Information System Audit) - 06

வயதுவரம்பு: 25 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மேலாளர், சீனியர் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500, எஸ்சி,எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.iob.in என்ற அதிகார்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iob.in/upload/CEDocuments/RECRUITMENT-IS-AUDIT-20072017.pdf

Tuesday, July 24, 2018

எஸ்பிஐ வங்கியில் ரிசர்ச் பெல்லோஷிப் பணி | Research Fellowship Recruitment in SBI

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CRPD/PDRF/2018-19/04

பணி: Research Fellowship

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.1,00.000

வயதுவரம்பு: 28 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Banking, Finance, IT, Economics போன்ற துறைகளில் முனைவர் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு விமான கட்டணம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை இணைத்து சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் அட்டெஸ் செய்யப்பட்ட நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

State Bank of India, 
Central Recruitment & Promotion Department, 
Corporate Centre, 3rd Floor, Atlanta Building,
Nariman Point, Mumbai - 400 021.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.sbi.co.in

துணை ராணுவப் படையில் வேலை | Recruitment in Indian Army

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவப் படைப் பிரிவுகளில் காலியாக உள்ள 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துணை ராணுவப் படைப் பிரிவான மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 21 ஆயிரத்து, 569 வீரர்கள் பணியிடம், எல்லைப் பாதுகாப்பு படை, இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்பட, 54 ஆயிரத்து, 963 பணியிடங்களை எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் நிரப்பப்படவுள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 முதல் 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிமுறைகளின் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 


ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற் தகுதி தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு விரைவில் அறிவிக்கப்பட உள்ள வேலைவாய்ப்பை அறிவிப்பை நாட்டு மக்களுக்காக சேவை செய்ய துடிப்புடன் இருக்கும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Sunday, July 22, 2018

விமானப்படையில் ஆள்சேர்ப்பு முகாம் | Airmen Selection Camp in Thanjavur

இந்திய விமானப் படையில் ஆள்சேர்ப்பு முகாமானது தஞ்சையில் ஜூலை 23-இல் தொடங்குகிறது.

இந்திய விமானப்படையில் குரூப்-ஒய் பணிக்கு ஆள்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக, ஏர்மேன் தேர்வு மையம் மூலம் தமிழகம், புதுச்சேரி பகுதியிலிருந்து திருமணமாகாத ஆண்கள் தஞ்சை அன்னை சத்யா மைதானத்தில் ஜூலை 23-ஆம் தேதி தொடங்கும் ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாம் ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதி 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், 1998, ஜூலை 14- க்கு பின்பும், 2002-ஆம் ஆண்டு ஜூன் 26-க்கு முன்னரும் பிறந்திருத்தல் வேண்டும். அதன்படி, ஜூலை 23-ஆம் தேதி முகாமில், அரியலூர், சென்னை, கோவை, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் கலந்துகொள்ளலாம்.

அதுபோல், ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ள முகாமில், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் கலந்துகொள்ளலாம். ஆள்சேர்ப்பு முகாமுக்கு வருவோர், கல்விச்சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்று, கல்விச் சான்றில் மாவட்டப் பெயர் குறிப்பிடாதோர், பிற மாநிலங்களில் கல்வி பயின்றோர் குடியுரிமை பெற்று சமர்ப்பிக்கவேண்டும். குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள விமானப் படை மையங்களில் பணிபுரியும் படைவீரர்களின் சிறார்கள் எஸ்.ஓ.ஏ.எஃப்.பி சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.


அதுபோல், குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் வாழும் முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் குறைந்தபட்சம் ஓராண்டு இருந்தமைக்கான சான்று, ஏ.எஃப்.ஆர்.ஓ-டி.ஏ.வி-ஆல் கொடுக்கப்பட்ட முன்னாள் படைவீரர்களின் படைவிலகல் புத்தக நகலை சமர்ப்பிக்க வேண்டும்.


எனவே, தகுதியுள்ள நபர்கள், முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் ஆகியோர் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திலும், www.airmenselection.gov.in என்ற இணையதள முகவரி அல்லது co.8asc-tn@gov.in எனும் மின்னஞ்சல் முகவரி, 044-2239561, 22395553 (extn:7833) என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்லலாம் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, July 21, 2018

தேசிய அஸ்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி வேலை | Openings for Administrative Trainees in National Centre for Radio Astrophysics, Pune | NCRA

புனேயில் செயல்பட்டு வரும் தேசிய அஸ்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 25-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer Trainee (Electronics) - 03

சம்பளம்: மாதம் ரூ.25,00

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Technical Trainee (Electrinics) - 02

சம்பளம்: மாதம் ரூ.16,000

தகுதி: இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் பி.எஸ்சி பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Trainee (Electrical) - 01

சம்பளம்: மாதம் ரூ.16,000

தகுதி: எலக்ட்ரானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Administrative Trainee - 02

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன், தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய : http://www.ncra.tifr.res.in/ncra/opportunities/non-academic/old-advertisements/2018/2018-2

இஸ்ரோவில் தொழில்பழகுநர் பயிற்சி | SDSC SHAR invite applications for Apprenticeship in ISRO

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் கீழ் செயல்பட்டு வரும் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் அளிக்கப்பட உள்ள 435 தொழில்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

I. Trade Apprentice

1. Fitter - 75
2. Electrician - 20
3. Motor Mechanic - 05
4. Electronic Mechanic - 42
5. Chemical -10
6. Drafts Man-CIVIL - 05
7. Air Condition - 10
8. Diesel Mechanic - 04

II. Technician - Graduate Apprentice

9. DCCP +Vocational Apprentice-(Office Assistant+ Comp. Science) - 125
10. -Mechanical - 17
11. Mechanical - 14
12. ECE - 13
13. ECE - 09
14. EEE - 06
15. EEE - 05
16. E&EI - 05
17. E&EI - 06
18. CSE - 05
19. CSE - 03
20. CIVIL - 05
21. CIVIL - 05
22. Chemical - 13
23. Chemical - 02
24. Automobile - 03
25. Agriculture Engr - 05
26. CateringTechnology - 03
27. Photography - 01
28. Library Science - 04
29. Aeronautical - 01
30. Nursing/ MultiPurpose Health Worker - 06
31. Lab Technician - 04
32. ConstructionTechnology - 04

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடம் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள், பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 28.07.2018 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.shar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.shar.gov.in/RMT/01_2018.pdf

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி | MANONMANIAM SUNDARANAR UNIVERSITY - RECRUITMENT

திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 46 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

காலியிடங்கள் உள்ள துறைகள்: தமிழ், English, History,Sociology,Communication, Commerce, Economics, Chemistry,Physics, Mathematics, Physical Education and Sports, Psychology, Education, Environmental Sciences,Geo-Technology, Bio-Technology, Animal Science, Marine Science & Technology, Library Science, Energy Science .

பணி: Professor - 08

சம்பளம்: மாதம் ரூ. 37,400 - 67,000 + AGP ரூ.10,000

பணி: Associate Professor - 16

சம்பளம்: மாதம் ரூ.37400 - 67000 + AGP ரூ.9,000

பணி: Assistant Professor - 22

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39100 + AGP ரூ.6,000

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500. இதனை The Registrar, Manonmaniam Sundaranar University, Tirunelveli, Tamil Nadu என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://msuniv.ac.in/Teaching/1.Notification.pdf"

சட்டக்கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி | DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVERNMENT LAW COLLEGES

அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 186 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி பேராசிரியர், உதவி பேராசிரியர் (சட்டம்)

காலியிடங்கள்: 186

தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் வழக்கறிஞர் பார் கவுன்சில் ஒரு வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும். தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விரிவான தகவலுக்கு இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: போட்டி எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமன அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை வங்கி அட்டைகள் மூலம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரும் 23-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி: 06.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://trb.tn.nic.in/law2018/notification_law.pdf

Friday, July 20, 2018

ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர் பணி | Aavin Recruitment Sivagangai DCMPU Ltd - Karaikudi

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர், ஓட்டுநர் போன்ற பல பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   இதற்கு எட்டாம் வகுப்பு முதல் எம்.பி.ஏ வரை தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager - 03

பணி: Manager (Marketing) - 01

பணி: Deputy Manager (Diary) - 01

பணி: Private Secretary Grade-III - 01

பணி: Executive (Office) - 03

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Executive (Office) - 01

பணி: Heavy Vehicle Driver - 01

பணி: Technician (Electrical) - 02

பணி: Senior Factory Assistant - 07

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் இருக்க வேண்டும்.

தகுதிகள்: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள், கூட்டுறவு துறையில் பி.ஏ, பி.காம் அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் கூட்டுறவு பயிற்சி வேண்டும். 

ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி, கால்நடை அறிவியல், உணவு அறிவியல், உணவு தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் பட்டம் பி.டெக், எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை The General Manager, Sivagangai D.C.M.P.U. Ltd., Karaikudi-இல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் இணைத்து பதிவு அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The General Manager, 
Sivagangai District Cooperative Milk Producer’s Union Limited, ”O” 
Siruvaryal Road, Kalanivasal, Karaikudi - 630 002.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.07.2018

மேலும், முழுமையான விவரங்கள் அறிய : http://www.aavinmilk.com/hrsiv050718.html

Wednesday, July 18, 2018

பெல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை | BHEL Recruitment 2018 | FTA Recruitment

நாடு முழுவதும் செயல்பட்டு பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்தின் (BHEL) பெங்களூரு கிளையில் காலியாக உள்ள திட்ட பொறியாளர், மேற்பார்வையாளர் என 74 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 74

பணி மற்றும் காலியிடங்கள்:

பணி: Project Engineer - 40

பணி: Supervisor - 34

1. Engineer-Electrical (FTA-1) - 5

2. Engineer-Civil (FTA-2) - 6

3. Engineer-Mechanical (FTA-3) - 6

4. Supervisor-Electrical (FTA-4) - 22

5. Supervisor-Civil (FTA-5) - 8

6. Supervisor-Mechanical (FTA-6) - 4

7. Engineer-Electrical (FTA-7) - 10

8. Engineer-Civil (FTA-8) - 3

9. Engineer-Mechanical (FTA-9) - 10

சம்பளம்: Project Engineers பணிக்கு மாதம் ரூ. 56,580, Supervisor பணிக்கு மாதம் ரூ.28,180 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.07.2018-ஆம் தேதியின்படி 33-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bheledn.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளமான www.bheledn.com-இல் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை | Walk-In Interview Project Assistant (Social Work) and Data Entry Operator

தேசிய நோய்தொற்றியல் நிறுவனத்தின் கீழ் மாதிரி கிராமிய சுகாதார ஆராய்ச்சி பிரிவில் (திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இணைக்கப்பட்டுள்ளது) முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான திட்ட உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Project Assistant (Social work) - 01

தகுதி: சமூக அறிவியல், நோய்தொற்றியல், புள்ளியியல் துறைகளில் இளங்கலைப் பட்டத்துடன் சம்பந்தப்பட்ட பணியில் மூன்றாண்டு அனுபவம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: Data Entry Operator - 01

கல்வித் தகுதி: பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான படிப்புடன், ஆங்கில தட்டச்சில் ,தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: www.nie.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 

Model Rural Health Research Unit, 
Govt.Primary Health Centre, Kallur, 
Tirunelveli District, Tamil Nadu.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 19.07.2018 மற்றும் 20.07.2018.

மேலும் விவரங்களுக்கு: : http://nie.gov.in/images/careers/Recuritment_MRHRU_101.pdf

பெரியார் பல்கலைக்கழகத்தில் கள உதவியாளர் வேலை | Advertisement for Supporting Staff (Field Assistant) in Periyar University

பெரியார் பல்கலைக்கழகத்தில் நரேடியாக நிரப்பப்பட உள்ள கள ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Supporting Staff (Field Assistant) - 01

தகுதி: Bilogocial Science, Life Science, Geology, Chemistry அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பி.எஸ்சி பட்டம் பெற்ற்று சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து, தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வரும் 20 -ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:  20-07-2018 காலை 11 மணி.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 

Department of Environmental Science,
Periyar University, Salem - 636 011.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.periyaruniversity.ac.in/Documents/2018/NSEV/Advt_field_assitance.pdf

Tuesday, July 17, 2018

தமிழக அரசின் நீர்வழங்கல் துறையில் வேலை | Recruitment in Water Resources Department

தமிழ்நாடு அரசின் நீர்வழங்கல் துறை கீழ் உலக வங்கியின் உதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் (TN-IAMP) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும்                     23-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 15

பணி: Agri. Business Specialist - 01
பணி: Social Development Specialist - 01
பணி: Environmental Specialist - 01
பணி: GIS Specialist - 01
பணி: Communication Specialist - 01
பணி: Programmer - 01
பணி: Typist with Computer knowledge and shorthand - 02
பணி: Data Entry Operator - 05

சம்பளம்: மாதம் ரூ.20,000 - 50,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Head Administration, 
TN-IAM Project, MDPU Office, 
Dam Safety Building, P.W.D Complex, 
Chepauk, Chennai - 600 005.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:23.07.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iamwarm.gov.in/IAMP/Recruitment-Advertisement.pdf

அரசு இசைப் பள்ளியில் ஆசிரியர் வேலை | Jobs In Department of Art and Culture

இசைத்துறையில் அனுபவமும், இசைக் கல்லூரிகளில் இளங்கலை பட்டம் பெற்று வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பாக தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் இசைப் பள்ளிகளில் காலியாக உள்ள இசையாசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் இடமிருந்து வரும் 20-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:

பணி: இசையாசிரியர் (குரலிசை) - 04
பணி: இசையாசிரியர் (நாதசுரம்) - 02
பணி: இசையாசிரியர் (தவில்) - 04
பணி: இசையாசிரியர் (தேவாரம்) - 06
பணி: இசையாசிரியர் (பரதநாட்டியம்) - 02
பணி: இசையாசிரியர் (வயலின்) - 05

சம்பளம்: மாதம் ரூ. 35,300 - 1,12.400

பணியிடம்: சென்னை மற்றும் தமிழ்நாடு

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட இசைப் பிரவில் 5 ஆண்டு பணி அனுபவம் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைக் கல்லூரிகளில் இளங்கலை படட்ம் அல்லது டிப்ளமோ முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: artandculture.tn.gov.in இனையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பத்தை தேர்வு செய்து அறிவிப்பை கவனமாக படித்து, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தி, பூர்த்தி செய்து, சமீபத்திய புகைப்படம், தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

ஆணையர், 
கலை பண்பாட்டு இயக்கம், 
தமிழ்வளர்ச்சி வளாகம், 2-வது தளம், 
தமிழ்ச் சாலை, எழும்பூர், 
சென்னை - 600 008. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய :  artandculture.tn.gov.in

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலை | Opportunity to work in R&D Organisation

போபாலில் செயல்பட்டும் வரும் "Advance Materials & Process Research Institute"-இல் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களிடமிருந்து,  23-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.45,468

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது அறிவியல் பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ampri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://ampri.res.in/wp-content/uploads/2018/06/New-pdf-2.pdf

Sunday, July 15, 2018

முதல் ஆட்டோ பவுன்சிங் ஃப்ளாஷ். கேமரா கேட்ஜெட் | WORLD'S FIRST AUTO BOUNCING FLASH GADGET FROM CANON


Canon DSLR

இந்த ஃப்ளாஷின் தலைப் பகுதி ஆட்டோ முறையில் மேலும் கீழுமாக 120° டிகிரி அளவிற்கு இயங்கவும் மற்றும் இடது வலதாக 180° டிகிரி அளவிற்குச் சுழலும் திறன் கொண்டது. உயர் செயல் திறன் கொண்ட CPU இதில் பொருத்தப்பட்டுள்ளது.


DSLR கேமரா தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான கேனான் நிறுவனம் தன் புதிய படைப்பான உலகின் முதல் ஆட்டோ பௌன்ஸிங் ஸ்பீடுலைட் 470 எஸ் ஃப்ளாஷை அறிமுகப்படுத்தியுள்ளது. புதியதாகப் புகைப்படங்கள் எடுக்கப் பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கும், ஆரம்ப நிலை புகைப்படக் கலைஞர்களுக்கும் ஏற்ற வகையில் செயற்கை நுண்ணறிவு (Auto Intelligent) பௌன்ஸிங் முறையில் வெளியாகியுள்ளது கேனான் ஸ்பீடுலைட் 470 எஸ் ஃப்ளாஷ். இதுவே உலகின் முதல் ஆட்டோ பௌன்ஸிங் பிளாஷ்.


இதற்கு முன்னதாக வெளிவந்த கேனான் ஸ்பீடுலைட் 430 EX III-RT, ஸ்பீடுலைட் 580 ex ii, marrum ஸ்பீடுலைட் 600 EX II-RT, இவை அனைத்தும் மேனுவல் (manual) மற்றும் E-TTL முறைகளைக் கொண்டது. இந்த வகை ஃப்ளாஷ்களை தலைப் பகுதியை நம் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் மேலும் கீழுமாக திருப்பிக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த ஸ்பீடுலைட் 470 எஸ் ஃபிளாஷ் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது. தானாகவே சுவரில் அல்லது மேற் கூரையுடனான தூரத்தைக் கணக்கிட்டு அதன் தானியங்கி திறன் மூலம் ஃப்ளாஷ் செயல்படுகிறது. ஸ்பீடுலைட் 470 எஸ் ஃபிளாஷ் முழுக்க முழுக்க இண்டோர் போட்டோ ஷூட்டுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது.


இதன் முக்கிய அம்சங்கள்:

இந்த ஃப்ளாஷின் தலைப் பகுதி ஆட்டோ முறையில் மேலும் கீழுமாக 120° டிகிரி அளவிற்கு இயங்கவும் மற்றும் இடது வலதாக 180° டிகிரி அளவிற்குச் சுழலும் திறன் கொண்டது. உயர் செயல் திறன் கொண்ட CPU இதில் பொருத்தப்பட்டுள்ளது. CPU வேகமாக, தூரத்தின் அளவுகளைக் கணக்கிட்டு செயல்படுகிறது.

முழுமையாகத் தானியங்கி (AI.B Full-auto) மற்றும் அரை தானியங்கி (AI.B Semi-auto) பவுன்ஸ் முறைகளிலும் செயல்படவும், முன்னால் இருக்கும் பொருளுக்கு ஏற்றார் போல் பவுன்ஸ் கோணத்தை கணக்கிட்டுச் செயல்படும் விதத்திலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னாள் இருந்த ஃப்ளாஷ்களை விட முழுவதும் தானியங்கி முறையில் ஜூம் செட்டிங் செயல்படுகிறது. ஜூம் முறையில் ஓளி செலுத்தும் வரம்பு 24-105mm2. இந்தச் செயல்முறை ஃப்ரேம்களின் நான்கு மூலைகளிலும் ஒளியைச் செலுத்துவதற்கு உதவுகிறது. வைட் ஆங்கிள் லென்ஸ் பயன்படுத்தினாலும் கேமராவுக்கு முன்னால் இல்லாத பொருட்களின் மீதும் இதன் வெளிச்சம் பரவலாக கிடைக்கிறது.

மற்ற ஃப்ளாஷ்களை காட்டிலும் அதிகப்படியான வெளிச்சத்தைச் செலுத்தக்கூடிய திறன் கொண்டது. Gn 47 (ஐஎஸ்ஓ 100 / மீட்டர்) ஒளியின் செயல் திறன் மிகுந்த தாராளமான மற்றும் மென்மையான வெளிச்சத்தை வழங்குகிறது.




சமீபத்திய தொழில்நுட்பம் பெரும்பாலும் கொஞ்சம் பழைய மாடல்களில் பொருத்துவதில் சில சிக்கல்களோடு வருகிறது, மேலும் EOS ரெபெல் T5 / 1200D, EOS ரெபெல் SL1 / 100D, EOS ரைபிள் T5i / 700D, EOS 70D, EOS 6D, EOS 5D Mk III மற்றும் EOS-1D X உட்பட 2014-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கப்பட்ட கேமராக்களைப் பயன்படுத்தும்போது தானாக AI தானியங்கி முறையில் கிடைக்காது.

புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவந்த EOS ரெபேல் T6 / 1300D மற்றும் mirrorless EOS M3, EOS M5 மற்றும் EOS M6 கேமராக்களில் புகைப்படங்கள் எடுக்கும்போது நீங்கள் அரை தானியங்கி (AI.B Semi-auto) முறையில் AI பவுன்ஸ் பயன்படுத்த முடியும்.

Saturday, July 14, 2018

மத்திய மின்னணுவியல் லிமிடெட் நிறுவனத்தில் வேலை | CENTRAL ELECTRONICS LIMITED RECRUITMENT

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மத்திய மின்னணுவியல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப மேலாளர், திட்ட மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காளியிடங்கள் விவரம்:

பணி: Assistant General Manager/Chief Manager (SSG) - 01
பணி: Chief Manager ( QA-C) -01
பணி: Senior Technical Manager (Production) Manufacturing - 01
பணி: Project Manager (Project Execution/O&M) - 02
பணி: Technical Manager (R&D) - 01
பணி: Manager - Material Management - 02
பணி: Assistant Manager (Civil) - 01
பணி: Assistant Manager Accounts - 02
பணி: Accounts Officer - 01
பணி: Security Officer - 01
பணி: Deputy Engineer (R&D) - 01

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.8.26 லட்சம் முதல் ரூ.17.87 லட்சம் வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான சம்பளம் அறிவிக்கப்பட்டுள்லதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வெவ்வேறாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பணி: Sr. Manager & New Product Development (Contract Basis) - 01
பணி: Manager (Defence Marketing) (Contract basis) - 01
பணி: Marketing Manager (Contract basis) - 02
பணி: Assistant
பணி: Technical Manager
பணி: Manufacturing/Maintenance) (Contract basis) - 02
பணி: Officer - Material Management (Contract basis) - 02
பணி: Officer (HR) (on contract) - 01
பணி: Marketing Officer (on contract) - 10

சம்பளம்: ஒப்பந்தகால அடிப்படையிலான பணிகளுக்கு மாதம் ரூ.40,000 + ஊக்கத்தொகை வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் Electronics & Communication, Electronics, Production, Mechanical/ Electrical, Civil, Electronics/ Electronics & Communication/ Electronics &Telecommunication, MBA/PGDM/PGP, CA/ICWA போன்ற சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.cellindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2018

மேலும் பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.celindia.co.in/drupal7/sites/default/files/CEL-Advertisement-102-PERS-1-2018_0.pdf

தமிழ்நாடு மருத்துவத்துறையில் வேலை | Corrigendum Pharmacist ISM | MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB)

தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பார்மசிஸ்ட் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Pharmacist (Siddha) - 148

பணி: Pharmacist (Ayurveda) - 38

பணி: Pharmacist (Homoeopathy) - 23

பணி: Pharmacist (Unani) - 20

சம்பளம்:  மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைககளில் மருந்தியல் துறையில் டிப்ளமோ பார்மசி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 57-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய :http://www.mrb.tn.gov.in/pdf/2018/Corrigendum_Pharmacist_ISM_10072018.pdf

Friday, July 13, 2018

சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை | NCC CHENNAI RECRUITMENT

சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டெண்ட், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடம்: 05

பணி: Driver - 01

சம்பளம்: ரூ.19,500 - 62,000

பணி: Store Attendant - 01

சம்பளம்: ரூ.15,900 - 50,400

பணி: Office Assistant - 02

சம்பளம்: ரூ.15,700 - 50,000

பணி: Boat Lascar - 01

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி:  எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். போட் லஸ்கர் பணிக்கு நீச்சல் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 

Commander,
NCC Group Headquarters, 
Madras "B",
Chennai.


பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 10.09.2018.


விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய : https://drive.google.com/open?id=1PzzUofyyPqrJJTYemE4hU8Ze6l0vf6Lr

Thursday, July 12, 2018

உதவி காவல் ஆய்வாளர் பணியிடத் தேர்வு | RECRUITMENT FOR THE POST OF SUB - INSPECTOR OF POLICE(TECHNICAL) - 2018 | LAST DATE AUGUST 10





தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 309 காவல் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு ஆகஸ்ட் 10 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழக காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள 309 காவல் உதவி ஆய்வாளர் (சார்பு ஆய்வாளர்) பணியிடத்துக்கு விரைவில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புவோர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் இணைய தளம் www.tnusrbonline.org வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால், 044-4001 6200, 044 - 2841 3658, 94990 08445, 91762 43899, 97890 35725 என்ற தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி எண்களில் தொடர்புக் கொண்டு பேசலாம். இந்த உதவி மையம் காலை 9 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். அதேபோல் அனைத்து மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலங்களும் உதவி மையம் செயல்படுத்தப்படும்.

இந்த தேர்வு இருகட்டமாக நடத்தப்படும். முதலில் நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கு 80 மதிப்பெண்களும், நேர்காணல் தேர்வுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும். கூடுதல் கல்வித் தகுதிக்கும், சிறப்பு மதிப்பெண்ணுக்கும் தலா 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும். இத்தேர்வில் காவல் துறையினருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tuesday, July 10, 2018

கொங்கன் ரயில்வேயில் வேலை | Recruitment of Junior Scale Executives in Konkan Railway

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (கேஆர்சிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Scale Executives, Accounts பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள கணக்கியல், வர்த்தகம் போன்ற துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  06

பணி: Junior Scale Executives (Traffic)

பணி: Accounts

பணி: Junior Scale Executives (Personnel)

தகுதி: சிஏ, சிஎம்ஏ, மார்கெட்டிங், சேல்ஸ், லாஜிஸ்டிக், டிரான்போர்ட்ஸ், எச்ஆர் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.konkanrailway.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Senior Recruitment Officer, 
Konkan Railway Corporation Ltd, 
Belapur Bhavan, Sec-11, CBD/ Belapur, 
Navi Mumbai-400614.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.07.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.7.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.konkanrailway.com/uploads/vacancy/1529403124NOTIFICATION_12-2018.pdf"

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி | Vacancies in Madras Veterinary College | TANUVAS

சென்னை வேப்பேரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள லேபரேட்டரி, அனிமல் அட்டெண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 18-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம்.

பணி: Laboratory/ Animal attendant

காலியிடங்கள்:  02

சம்பளம்: மாதம் ரூ.10,000 வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் உயர்வு அளிக்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 18.07.2018.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

The Director,
Directorate of Clinics,
Madars Veterinary College,
Tamil Nadu Veterinary and Animal Sciences University,
Vepery, Chennai-7.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tanuvas.tn.nic.in/nea/vacancies/dc_laa_pmu_2018.pdf

Sunday, July 8, 2018

ரயில்டெல் நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை | Railtel Corportion of India Ltd Recruitment

மினி ரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்டெல் கார்ப்பரேசன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Manager (Technical) 

காலியிடங்கள்:08

சம்பளம்:மாதம் ரூ. 40,000-1,40,000 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் Electronics &  Telecom; Telecom; Electronics அல்லது Electronics & Instrumentation போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக், பி.எஸ்சி (என்ஜினீரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.500. எஸ்சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250.

வயது வரம்பு: 14.07.2018 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE 2018 மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.railtelindia.com/images/careers/Vacancy%20notice%20-for%20website_29%20june.pdf

முதுகலை பட்டதாரிகளுக்கு பிரசார் பாரதியில் வேலை | Engagement of Monitoring-cum-Content Assistants

மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான இந்திய வானொலியின் பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஓப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Monitoring-cum-Content Assistants

காலியிடங்கள்: 10

தகுதி: இதழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ. 25,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பத்தார்கள் தங்களது சுய விபரத்தை ஏ4 வெள்ளத்தாளில் தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Assistant Director (Programmes),
Room No.403, New Broadcasting House,
External Services Division,
All India Radio,
Parliament Street,
New Delhi - 110001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2018

டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை | Careers in TNPL Medical Officer Posts

கரூரில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனத்தில் (டிஎன்பில்) நிரப்பப்பட உள்ள மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 02>

பணி:Medical Officer (Junior Officer grade) - 01

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 48,600

பணி: Medical Officer (Assistant Officer grade)- 01

சம்பளம்: மாதம் ரூ. 66,100

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி 3 மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  http://www.tnpl.com/careers/biodataform.pdf விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

CHIEF GENERAL MANAGER (HR),
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,
KAGITHAPURAM-639 136,
KARUR DISTRICT, TAMIL NADU.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.07.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/tnpl_medical_officer_posts_04-07-18.pdf

இந்திய அஞ்சல் துறையில் வேலை | Recruitment in India Postal Department Southern Region

இந்திய அஞ்சல் துறையின் மதுரையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:  மதுரை

பணி: ஓட்டுநர் - 02

சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:56க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.07.2018.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Manager, 
Mail Motor Services, 
Madurai 625 002.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/uploadssouthernregion.pdf"

கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை | RECRUITMENT OF MEDICAL EXECUTIVES IN COAL INDIA LIMITED

இந்திய நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 28-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 528

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Sr. Medical Specialist in E4 Grade

பணி: Medical Specialist in E3 Grade

காலியிடங்கள்:  172

தகுதி: இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பல்கலைக்கழகம்,அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

பணி: Sr.Medical Officer in E3 Grade - 86

தகுதி: மருத்துவத்தில் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: Sr. Medical Specialist பணிக்கு 01.04.2018 தேதியின்படி 42க்குள்ளும், Medical Specialist மற்றும் Sr.Medical Officer பணிகளுக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.07.2018

மேலும் சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.coalindia.in/DesktopModules/DocumentList/documents/Detailed_Advertisement_27062018.pdf

என் பொண்டாட்டி நீ | Pondattee Song Lyrics In Tamil | Golisoda-2

ஆத்தோர பேரழகி                               

எங்க நீ வந்தழகி
உன்ன பாக்குறேன் உள்ள ஒளறுறேன்
நான் காதல

ஆத்தாடி ஆட்டுக்குட்டி
நான் போடும் சோப்பு கட்டி
போல மனக்குற என்ன இழுக்குற
நீ போகையில


அரும்பாத மீசையை நீ தான்
முறுக்கியே திரிய வச்ச
விளங்காத ஏதோ ஒன்ன தான்
நீ விளங்க வச்ச

அட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான்தான்
தாய கட்ட தாய கட்ட நீதா
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

ஆத்தி என் மஞ்சணத்தி
சேவ் வான செங்கலத்தி
உன் கூத்துல ஒரு குருவி தான் இடம் தேடுது

சின்னூண்டு கண்ணொருத்தி
செந்தொரு கை பிடிச்சி
வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது

ஓ கணக்கா கண்ண ஏது
பாத்து போற
கூட்டி கொஞ்சம் கழிச்சி பாத
மிச்சம் நீ வார

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே


அடியே என் அழகியே
ஏ புள்ள என்ன விட்டு எங்க போற
நீ வெக்கத்தை விட்டு வாடி
வீட்டை விட்டு வெளிய வாடி
உன் அழகான முகத்தை
நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேன்

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

Saturday, July 7, 2018

வனத்துறையில் பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணி | Tamil Nadu Forest Subordinate Service

தமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Forest Apprentice - 148 (Regular)

பணி: Forest Apprentice -10 (Shortfall vacancies for SC applicants only)

சம்பளம்: மாதம் ரூ. ரூ.37,700 முதல் 1,19,500

தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பை பார்த்து முழுமையான தகுதி விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு சலுகை வழங்கப்படும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.08.2018.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/notifications/2018_12_notfy_Forest_Apprentice.pdf

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...