தமிழக அரசில் 805 உதவி தோட்டக்கலை அலுவலர் வேலை

தமிழக அரசில் காலியாக உள்ள 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசில் காலியாக உள்ள 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 24க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 805

பணி: Assistant Horticultural Officer (Code No.3104) - 757

பணி: Assistant Horticultural Officer (Code No.3104) - 48

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அல்லது தோட்டக்கலை மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் இயக்குநர் அல்லது காந்திகிராம் கிராம நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இரண்டு ஆண்டு தோட்டக்கலை டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பில்லை.

சம்பளம்:  மாதம் ரூ.20,600 - 65,500

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்:  ரூ.100, பதிவுக் கட்டணம் ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:11.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tnpsc.gov.in/notifications/2018_10_AHO.pdf
சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.