Sunday, April 29, 2018

பல் வலி புழுக்களை வெளியேற்றும் வைத்திய முறை

பல் வலி புழுக்களை வெளியேற்றும் வைத்திய முறை:

தேவையான பொருட்கள்:

(1) அகலமான அரிவாள் 1,
(2) தட்டு (plate) 1,
(3) கொட்டான்குச்சி எனும் ஒரு ஓட்டையுள்ள தேங்காய் சிரட்டை 1,
(4) கண்டங்கத்திரி விதை - கொஞ்சம்,
(5) சுத்தமான வேப்ப எண்ணெய் ,
(6) சிறிது தண்ணீர்.


செய்முறை: 

அகலமான தட்டில்  சிறிது தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். தட்டின்  மீது நன்கு பழுக்கக் காய்ச்சிய அரிவாளை வைக்கவும். அரிவாளின் அகலமான பகுதியில் சிறிது வேப்ப எண்ணெயை விடவும். புகை வரும். அதில் சிறிது கண்டங்கத்திரி விதையைப் போட்டு உடனடியாக ஒற்றை ஓட்டை உள்ள தேங்காய் சிரட்டையை (கொட்டான்குச்சி) கவிழ்த்து வைக்கவும்.

புகை நேரடியாக வாய்க்குள் செல்வதற்காகவே சிரட்டை உபயோகிக்கப்படுகிறது. 

சிரட்டை ஓட்டை வழியாக வரும் புகையை  வாயைத்திறந்து எல்லா பற்களிலும் படும் படி மூச்சை அடக்கிக் கொண்டு ஆவி பிடிக்கவும்.

புகையை வாயுடன் நிறுத்திக்கொள்ளவும். வாய் வழியாக சுவாசிக்க கூடாது.

மீண்டும் அரிவளை பழுக்கக் காய்ச்சி 2,3 தடவை செய்யவும். 

பின் தட்டில் உள்ள நீரில் பார்க்கவும். பல் சொத்தை  புழுக்கள் அதில் விழுந்து இறந்து கிடப்பதை காணலாம்.

இதனை தொடர்ந்து 3 நாட்கள் செய்யவும். நல்ல பலன் கிடைக்கும்.

பல்வலி,அரணை வீக்கம் குறைந்து முற்றிலும் குணமாகிவிடும்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...