Saturday, April 14, 2018

இந்திய அஞ்சல் துறையில் 5778 கிராமின் டாக் சேவகர்கள் வேலை

மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையின் மேற்கு வங்கம் அஞ்சல் வட்டத்தில் 2018-ஆம் ஆண்டிற்கான 5778 கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 5778 

பணி: Gramin Dak Sevaks (GDS)

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. OBC - 1328
2. PH-HH - 86
3. PH-OH - 83
4. PH-VH - 51
5. SC - 1184
6. ST - 286
7. UR - 2760

தகுதி: 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 


வயதுவரம்பு: 

05.04.2018 தேதியின்படி 18 - 40க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000 

தேர்வு செய்யப்படும் முறை: 

வந்து சேர்ந்த விண்ணப்பங்களைக் கொண்டு மெரிட் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.05.2018 

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...