Sunday, April 22, 2018

விருதுநகரில் ஏப்.27 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏப். 27 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஏப். 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 5 முன்னணி நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.

இதில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ, பி.இ. (சிவில்) முடித்த ஆண்கள் மற்றும் தையல் தெரிந்த பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் முகவராக 30 வயது முதல் 45 வயது முடிய உள்ளவர்கள் தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பிற நிறுவனங்கள், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். 

தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றார்.




No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...