Thursday, April 12, 2018

மாம்பழச் சாகுபடி: புழுக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

மா பயிர் பாதுகாப்பு:

பூப்பிடிக்கும் பருவத்தில் எண்ணைய்ப் பசை போன்று பளபளப்பாக இருந்தால் பூங்கொத்துகளை தத்துப்பூச்சி தாக்கியுள்ளது என அறிந்து கொள்ளலாம். இதை நாம் உற்று நோக்கினால் கண்டுபிடித்துவிடலாம். இப்பூச்சிகள் மாவிலைக் குருத்துகள் மற்றும் பூங்கொத்துகளில் உள்ள சாறை உறிஞ்சிவிடும். இதனால் பூங்கொத்துகள் வலுவிழப்பதோடு பூ மொட்டுகள் மற்றும் பிஞ்சுகள் ஆகியவை உதிரும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் கவாத்து செய்து அதை அகற்றி மாமரத்தை பாதுகாக்க வேண்டும்.

பாதிப்பைக் கட்டுப்படுத்த:

இந்த நோயைக் கட்டுப்படுத்த பாசலோன் 35 இசி 1.5 மில்லி மருந்தை, ஒரு ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கிளைகள், தண்டுகள், மரத்தின் இலைகள் ஆகியவற்றில் தெளிப்பான் மூலம் நன்கு படத் தெளிக்க வேண்டும். இதை மாலை நேரங்களில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அதேபோல், கார்பரில் 50 சதவீதம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதேபோல், பூப்பிடிக்கும் பருவம் என்பதால் பூங்கொத்துப் புழு தாக்குதலும் அதிகம் இருக்கும். இதை கட்டுப்படுத்த பாசலோன் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

தண்டு துளைப்பான் தாக்குதல்: இதேபோல் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் இருந்தால் தரை மட்டம் முதல் 1 மீட்டர் உயரத்தில் மரப்பட்டையை வடிவில் செதுக்கி, இடையில் பஞ்சை வைத்து மானோகுரோட்டாபாஸ் 10 மில்லி மருந்தை பஞ்சு நனையும் வரையில் தெளித்து, பின்பு பட்டையை மரத்தோடு பொருத்துவதோடு ஈரக்களிமண்ணால் மூட வேண்டும்.

அதேபோல், இலைப்புள்ளி தாக்குதல் இருந்தால் மாங்கோசெப் 2 கிராம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பென்டாசிம் 1 கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் அல்லது க்ளோராதலேனில் 2 கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து பிஞ்சுப் பருவத்திலிருந்து அறுவடை செய்வதற்கு முன்பு வரையில் 20 நாள்களுக்கு ஒருமுறை தெளித்து வந்தால் அனைத்து மா வகைகளையும் பாதுகாக்கலாம்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...