Saturday, June 2, 2018

தொடு வானம் – அநேகன்

தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கமாகிறாய்
தொடும் போதிலே தொலைவாகிறாய்
தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்

இதயத்திலே தீப்பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளிப் போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே

வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உனை நீங்கியே உயிர்க் கரைகிறேன்
வான் நீலத்தில் எனைப் புதைக்கிறேன்
வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உனை நீங்கியே உயிர்க் கரைகிறேன்
வான் நீலத்தில் எனைப் புதைக்கிறேன்

இதயத்திலே தீப்பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே 
கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளிப் போல் 
இங்குமங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம் 
பொன்னே பூந்தேனே

காதல் என்னைப் பிழிகிறதே 
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை 
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே

காட்டில் தொலைந்த மழைத்துளிப் போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீரினைத்தேடும் வேரினைப்போல 
பெண்ணே உன்னைக் கண்டெடுப்பேன்

கண்கள் ரெண்டும் மூடும் போது 
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது 
லோகம் சூன்யம் ஆகுதே

சிறுபொழுது பிரிந்ததற்கே 
பல பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ...........................

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...