ஐஐடி மாணவர்கள் 832 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை ஐஐடி மாணவர்கள் நடப்பாண்டில் அதிக வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
வளாகத் தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக வேலைவாய்ப்புகளை சென்னை ஐஐடி மாணவர்கள் நடப்பாண்டில் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2017-18-ஆம் கல்வியாண்டுக்கான வளாகத் தேர்வு முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில், சென்னை ஐஐடி மாணவர்கள் 832 பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இது வளாகத் தேர்வில் பதிவு செய்த மாணவர்களில் 70 சதவீதமாகும்.

அதேபோன்று, ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள், கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

கடந்த 2015 -16 -ஆம் கல்வியாண்டில் 17 சதவீதமாகவும், 2016-17-ஆம் கல்வியாண்டில் 23 சதவீதமாகவும் இருந்த ஐஐடி ஆராய்ச்சி (பிஎச்.டி.) மாணவர்களின் வளாகத் தேர்வு வாய்ப்புகள் 2017-18-ஆம் கல்வியாண்டில் 36 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எம்.எஸ். ஆராய்ச்சி மாணவர்களுக்கு 2015 -16 -ஆம் கல்வியாண்டில் 59 சதவீதமாகவும், 2016 -17 -ஆம் கல்வியாண்டில் 63 சதவீதமாகவும் இருந்த வளாகத் தேர்வு வாய்ப்புகள், 2017-18 -ஆம் கல்வியாண்டில் 71 சதவீதமாக உயர்ந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.