Thursday, June 21, 2018

குரூப் 4 தேர்வு முடிவுகள் 10 நாட்களில்.... | Group-4 Results Within 10 Days


குரூப் 4 தேர்வு முடிவுகளை 10 நாள்களில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வும், குரூப் 4 தொகுதியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்து கடந்த பிப்ரவரி 11-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 

இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 14-இல் வெளியிடப்பட்டது.

மொத்தம் 9,351 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வினை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர்.

 இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வரும் 10 நாள்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...