Tuesday, July 31, 2018

இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் : சான்றிதழ் சரிபார்ப்பு | TNPSC 8 A Certificate Verification

இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஆகஸ்ட் 9-இல் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலைப் பணி மற்றும் தொகுதி 8-ஏ-இல் அடங்கிய செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி 20-இல் நடைபெற்றது. அதில் 271 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விகிதாச்சாரம் மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டோரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 9-ஆம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...