Thursday, March 22, 2018

இஞ்சி சூள் தஞ்சை

இஞ்சி சூள் தஞ்சை :

நாம் இக்காலத்தில் பயன்படுத்துகிற தமிழுக்கும், சங்க காலத்தில் பயன்படுத்திய தமிழுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. நமக்கு நன்கு தெரிந்த பெயர்களில் ஒன்று இஞ்சி. சமையலுக்கும்,மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.

ஆனால், அந்த காலத்தில் இஞ்சி என்றால் கோட்டையின் மதில் சுவரை குறிக்கும். “ இஞ்சி சூள் தஞ்சை “ என்று தேவாரத்தில் ஒரு வரி வருகிறது. கோட்டை மதில் சுவர்களால் சூழப்பட்ட தஞ்சாவூர் என்பது இதற்கான பொருள். மதுரை மாவட்டத்தில் வட பழஞ்சி, தென் பழஞ்சி என்ற ஊர்கள் உள்ளன். மன்னராட்சிக் காலத்தில் பெரிய கோட்டை மதில் சுவர்கள் இருந்திருக்கலாம்.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...