Sunday, November 23, 2025

தமிழ் மணி - Antique Tamil Bell

 

தமிழ் மணி என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி. இது மிசினரி வில்லியம் சேலேன்சோ என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்திவந்தனர்.


இந்த மணி 13 செமீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. 


மேலும் மாவோரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையலாம்.


இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய கண்காட்சியகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

Monday, November 17, 2025

கார்த்திகை மாதத்தின் முக்கிய சிறப்புகள்

🔥கார்த்திகை மாதம் – தமிழரின் ஒளி நிரம்பிய பாரம்பரியம்!

தமிழ் ஆண்டின் எட்டாவது மாதமான கார்த்திகை,
ஒளி, ஆன்மிகம், அன்பு மற்றும் தமிழர் பண்பாட்டின் மிகச் சிறப்பான காலம்.

இந்த மாதம் முழுவதும் தீ விளக்கு, திருவிழா, அறிவு — இவை ஒன்றோடொன்று கலந்திருக்கின்றன.

🌟 கார்த்திகை மாதத்தின் 7 முக்கிய சிறப்புகள்

திருக்கார்த்திகை தீபம்

இருளை அகற்றி ஒளியை வரவேற்கும் மிகப் பழமையான தமிழ் திருவிழா.
வீட்டின் முன், குளம், வாசல், தெரு—எங்கும் மண் விளக்குகள் ஏற்றப்படும்.

திருவண்ணாமலை மகாதீபம்

அருணாசல மலையின் உச்சியில் ஏற்றப்படும் “மகாஜோதி” —
சிவனின் அக்னி-தத்துவத்தை குறிக்கும் உலகப் புகழ்பெற்ற பாரம்பரியம்.

 முருகனின் சக்தி மிகும் மாதம்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த முருகப் பெருமானின் திருநாள்.
கந்த சஷ்டி அனுபவத்திற்குப் பின் வரும் ஆன்மீக நிறைவு.

விண்மீன் தொடர்பான தமிழர் அறிவு
கார்த்திகை நக்ஷத்திரம் = பிளையட்ஸ் (அழகிய தீ விண்மீன் குழு).
பழந்தமிழர்கள் நட்சத்திரங்களை வைத்து காலமும் வேளாண்மையும் கணித்தார்கள்.

வீடு, மனம், வாழ்க்கை – ஒளியின் சுத்தம்
இந்த மாதத்தில் விளக்கு ஏற்றுவது

👉 வீட்டு நலன்
👉 கிருமி நாசனம்
👉 மன அமைதி

என அனைத்தையும் குறிக்கும் ஒரு தமிழ்ச் சின்னம்.

பெண்களின் கார்த்திகை நோன்பு

குடும்ப நலன், செல்வம், நீண்ட ஆயுள், ஒற்றுமை
என பல நன்மைகளை வேண்டி பெண்கள் வழிபடும் நாள்.

உணவுப் பாரம்பரியம் – இனிப்புகள் & அன்பு

கார்த்திகை அப்பம்
பொரி உருண்டை
எல்லாத் தரப்பு மக்களும் சுவைப்பதற்கான மரபு உணவுகள்.


Saturday, August 4, 2018

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அனைத்துறையைச் சேர்ந்த தகுதியான டிப்ளமோ, பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.:  CEPTAM-09/STA-B

மொத்த காலியிடங்கள்: 494

பணி: Senior Technical Assistant ' B ' (STA ' B' )

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Agriculture - 04
2. Automobile Engineering - 06
3. Botany - 03
4. Chemical Engineering - 13
5. Chemistry - 24
6. Civil Engineering - 04
7. Computer Science - 79
8. Electrical & Electronics Engineering - 16
9. Electrical Engineering - 35
10. Electronics & Instrumentation - 07
11. Electronics or Electronics & Communication or Electronics & Telecommunication Engg - 100
12. Geology - 03
13. Instrumentation - 05
14. Library Science - 11
15. Mathematics - 08
16. Mechanical Engineering - 140
17. Metallurgy - 08
18. Photography - 02
19. Physics - 16
20. Psychology - 05
21. Zoology - 05

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 29.08.2018 தேதியின்படி 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2018

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.drdo.gov.in/drdo/ceptam/download/poster_ceptam09_stab.pdf

Friday, August 3, 2018

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஓட்டுநர் வேலை | TNAU Recruitment - Driver post -Coimbatore

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தில் நிரப்பப்பட உள்ள 21 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்: R1/ 14192 /2018 Dated: 25.07.2018

பணி: ஓட்டுநர் (Driver)

காலியிடங்கள்:  21

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி:  எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.06.2018 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750, மற்ற பிரிவினருக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை The Comptroller, TNAU, Coimbatore என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.dri.tnausms.in/Reports/DRIVER%20Recruitment-%202018.pdf

CPCL நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி | Engagement of Trade Apprentices in CPCL

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 142

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Fitter - 19
2. Welder - 07
3. Electrician - 09
4. Mechanic (Motor Vehicle) - 10
5. Mechanic Machine Tool Maintenance - 08
6. Machinist - 05
7. Turner - 04
8. Mechanic Auto Electrical and Electronics - 02
9. Instrument Mechanic - 03
10. Mechanic Repair and Maintenance of Vehicle - 02
11. Draughtsman (Civil) - 03
12. Draughtsman (Mechanical) - 2
13. Computer Operator and Programming Assistant - 06
14. Laboratory Assistant (Chemical Plant) - 05
15. Attendant Operator (Chemical Plant) - 07
16. Advanced Attendant Operator (Process) - 14
17. Accountant - 05
18. Back Office Assistant - 10
19. Executive (Marketing) - 02
20. Executive (Human Resource) - 06
21. Executive (Computer Science) - 06
22. Executive (Finance & Accounts) - 03
23. Security Guard - 04

தகுதி: சம்மந்தபட்ட துறைகளில் ஐடிஐ அல்லது பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 12 மாதங்கள். சில பணியிடங்களுக்கு 18 முதல் 15 மாதங்கள்.

விண்ணபிக்கும் முறை: cpcl.co.in என்ற இணைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://www.cpcl.co.in/Recruitment

இந்தியன் வங்கியில் வேலை | RECRUITMENT OF PROBATIONARY OFFICERS ON INDIAN BANK

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 417 தரத்திலான 145 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 417

பணி: Probationary Officer (PO)

(எஸ்சி - 62, எஸ்டி - 31, ஓபிசி - 112, பொதுப்பிரிவினர் - 212)

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது இணையான தகுதிகள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 30-க்குள் இருக்கும். அரசுவிதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2018

ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 06.10.2018

ஆன்லைன் முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 04.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.indianbank.in/pdfs/rec/31072018porecprocess.pdf"

Wednesday, August 1, 2018

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு | Central Teacher Eligibility Test (CTET)

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தத் தேர்வுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கான அறிவிப்பை ஏற்கெனவே ஜூன் மாதம் சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. அதில் இந்தத் தேர்வானது வரும் செப்டம்பர் 16 -ஆம் தேதி நடத்தப்படும் எனவும், இதற்கு ஜூன் 22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

பின்னர், திடீரென இந்த அறிவிப்பு நிறுத்தப்பட்டு, விண்ணப்பிப்பதற்கான மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்தது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் அறிவிப்பு: இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான புதிய அறிவிப்பை சி.பி.எஸ்.இ. செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி, சி.டி.இ.டி. தேர்வுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 27 கடைசி நாள் எனவும், கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 30 கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த முழு விவரங்களும் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

கல்வித் தகுதி: கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகளில் 5 -ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

8 -ஆம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப்படிப்புடன், 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்; அல்லது பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, July 31, 2018

இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் : சான்றிதழ் சரிபார்ப்பு | TNPSC 8 A Certificate Verification

இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஆகஸ்ட் 9-இல் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலைப் பணி மற்றும் தொகுதி 8-ஏ-இல் அடங்கிய செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி 20-இல் நடைபெற்றது. அதில் 271 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விகிதாச்சாரம் மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டோரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 9-ஆம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் | Vacancies details in Government Schools

நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்க நிலை, உயர் நிலை பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஸ்வாஹா அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்க நிலை, உயர் நிலை பள்ளிகளில் மொத்தம் 51,03,539 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அந்த பணியிடங்களில், 9,00,316 காலியாக உள்ளன.

தொடக்க நிலை பள்ளிகளில் அதிக அளவில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் மாநிலங்கள் பட்டியலில், உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

அந்த மாநிலத்தில் 2,24,327 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கடுத்து பிகார் 2-ஆவது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 2,03,934 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சிக்கிம், ஒடிஸா, கோவா ஆகிய மாநிலங்கள் அதற்கடுத்து உள்ளன.

உயர் நிலை பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருக்கும் மாநிலங்கள் பட்டியலில் ஜம்மு-காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட 25,657 பணியிடங்களில், 21,221 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பட்டியலில் பிகார் 2ஆவது இடத்திலும், ராஜஸ்தான் 3ஆவது இடத்திலும் உள்ளன என்று குஸ்வாஹா குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு குஸ்வாஹா அளித்துள்ள பதிலில், 7 சதவீத பள்ளிகளில் முக்கிய பழுது பணி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Sunday, July 29, 2018

மத்திய தாது வள நிறுவனத்தில் வேலை | RECRUITMENT FOR VARIOUS POSTS IN MECL

எம்.இ.சி.எல் என அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான மத்திய தாதுவள ஆராய்ச்சி கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 245 துணை பொதுமேலாளர், மேலாளர், உதவியாளர், மெக்கானிக், ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  245

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Deputy General Manager (Finance) - 01
பணி: Manager - 03
பணி: Assistant Manager - 07
பணி: Accounts Officer - 03
பணி: Procurement &Contract Officer - 01
பணி: Foreman (Drilling) - 30
பணி: Technical Assistant (Survey & Draftsman) - 06
பணி: Hindi Translator - 01
பணி: Accountant - 03
பணி: Stenographer - 10
பணி: Technician (Drilling) - 41
பணி: Machinist - 12
பணி: Operator (Computer) - 07
பணி: Assistant (HR) - 29
பணி: Technician (Survey & Draftsman - 06
பணி: Assistant (Hindi) - 01
பணி: Assistant (Materials) - 18
பணி: Technician (Sampling) - 08
பணி: Assistant (Accounts) - 15
பணி: Library Assistant - 02
பணி: Electrician - 02
பணி: Mechanic - 09
பணி: Jr. Driver - 30

வயது வரம்பு: 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக். முடித்தவர்கள் அதிகாரி தரத்திலான பணிகளுக்கும், இளங்கலை பட்டம், பொறியியல் துறையில் டிப்ளமோ, ஐடிஐ, தட்டச்சு முடித்தவர்கள் அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mecl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mecl.gov.in/writereaddata/meclpdf/Detailed%20Advt%20no%20003%20Rectt%202018.pdf"

மருத்துவ துறையில் மருந்தாளுநர் பணிகள் | Corrigendum to Notification for Pharmacist (Siddha/Ayurveda/Homoeopathy/Unani)

தமிழக அரசு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 229 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 229

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. சித்தா - 148
2. ஆயுர்வேத - 38
3. ஓமியோபதி - 23
4. யுனானி - 20

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பார்மசிஸ்ட் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2018 தேதியின்படி 57-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  http://www.mrb.tn.gov.in

"என்சிசியில் சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை | Recruitment in Indian Army with NCC Certificate

என்.சி.சி. 45-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. ’சி’ சான்றிதழ் பெற்ற வீரர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் இந்திய ராணுவத்திற்கு தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமான மற்றும் திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 55 (ஆண்கள் - 50, பெண்கள் - 05)

வயது:  19 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1994 மற்றும் 01.1.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி. பயிற்சியில் ’சி’; சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும்ம் முறை: என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்டவர்களுக்கு தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு இரு நிலைகளில் தேர்வுகள் மற்றும் குழு தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு செய்யப்படுபவர்கள் 49 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : www.joinindianarmy.nic.in

சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் வேலை | Engagement of Apprentice in Integral Coach Factory

சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் ஐசிஎப் எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அளிக்கப்பட 707 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டீஸ் பயிற்சி

காலியிடங்கள்: 707

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. கார்பெண்டர் - 54
2. எலக்ட்ரீசியன் -116
3. பிட்டர் - 230
4. மெஷினிஸ்ட் - 48
5. பெயிண்டர் - 30
6. வெல்டர் - 219
7. எம்.எல்.டி. ரேடியாலஜி, எம்.எல்.டி. பேதாலஜி - 04
8. பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02

வயது வரம்பு: 01.10.2018 தேதியின்படி 15 வயது பூர்த்தி அடைந்தும் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ முடித்தவர்களும், சில பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள், உடல்தகுதிகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icf.indianrailways.gov.in

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி | Apprenticeship Training- Engineering Degree & Diploma at HAL Nasik.

இந்திய விமானப்படையின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமான விமான நிறுவனத்தில் அளிக்கப்படும் 61 தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டீஸ் பயிற்சி

காலியிடங்கள்: 61

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 26-க்குள் இருக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=861&Divkey=27 

Friday, July 27, 2018

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை | RECRUITMENT OF ASSISTANTS IN THE NEW INDIA ASSURANCE COMPANY LIMITED

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 685 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உளஅளவர்களிடமிருந்து வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 685 (தமிழகத்திற்கு - 83)

பணி:  Assistant - 685

சம்பளம்: மாதம் ரூ.14,435 - 40,080

வயது வரம்பு: 30.06.2017-ஆம் தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மாநிலம் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதியில் பேசப்படும் பிராந்திய மொழியில் நன்கு பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மண்டல மொழித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு நிலைகளாக தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மண்டல மொழியறிவு சோதனைக்குப் பின்பு பணியில் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.newindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2018

முதல்நிலை எழுத்துத் தேர்வு செப்டம்பர் 8,9-ஆம் தேதிகளிலும், முதன்மைத் தேர்வு அக்டோபர் 6-ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 25, 2018

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை | RECRUITMENT OF SPECIALIST OFFICERS IN INDIAN OVERSEAS BANK

சென்னையைத் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 20 மேலாளர், சீனியர் மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  20

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Manager (Information Security) - 04

பணி: Manager (Information System Audit) - 06

வயதுவரம்பு: 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

பணி: Senior Manager (Information Security) - 04

பணி: Senior Manager (Information System Audit) - 06

வயதுவரம்பு: 25 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மேலாளர், சீனியர் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500, எஸ்சி,எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.iob.in என்ற அதிகார்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iob.in/upload/CEDocuments/RECRUITMENT-IS-AUDIT-20072017.pdf

Tuesday, July 24, 2018

எஸ்பிஐ வங்கியில் ரிசர்ச் பெல்லோஷிப் பணி | Research Fellowship Recruitment in SBI

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CRPD/PDRF/2018-19/04

பணி: Research Fellowship

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.1,00.000

வயதுவரம்பு: 28 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Banking, Finance, IT, Economics போன்ற துறைகளில் முனைவர் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு விமான கட்டணம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை இணைத்து சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் அட்டெஸ் செய்யப்பட்ட நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

State Bank of India, 
Central Recruitment & Promotion Department, 
Corporate Centre, 3rd Floor, Atlanta Building,
Nariman Point, Mumbai - 400 021.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.sbi.co.in

துணை ராணுவப் படையில் வேலை | Recruitment in Indian Army

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவப் படைப் பிரிவுகளில் காலியாக உள்ள 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துணை ராணுவப் படைப் பிரிவான மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 21 ஆயிரத்து, 569 வீரர்கள் பணியிடம், எல்லைப் பாதுகாப்பு படை, இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்பட, 54 ஆயிரத்து, 963 பணியிடங்களை எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் நிரப்பப்படவுள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 முதல் 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிமுறைகளின் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 


ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற் தகுதி தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு விரைவில் அறிவிக்கப்பட உள்ள வேலைவாய்ப்பை அறிவிப்பை நாட்டு மக்களுக்காக சேவை செய்ய துடிப்புடன் இருக்கும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Sunday, July 22, 2018

விமானப்படையில் ஆள்சேர்ப்பு முகாம் | Airmen Selection Camp in Thanjavur

இந்திய விமானப் படையில் ஆள்சேர்ப்பு முகாமானது தஞ்சையில் ஜூலை 23-இல் தொடங்குகிறது.

இந்திய விமானப்படையில் குரூப்-ஒய் பணிக்கு ஆள்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக, ஏர்மேன் தேர்வு மையம் மூலம் தமிழகம், புதுச்சேரி பகுதியிலிருந்து திருமணமாகாத ஆண்கள் தஞ்சை அன்னை சத்யா மைதானத்தில் ஜூலை 23-ஆம் தேதி தொடங்கும் ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாம் ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதி 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், 1998, ஜூலை 14- க்கு பின்பும், 2002-ஆம் ஆண்டு ஜூன் 26-க்கு முன்னரும் பிறந்திருத்தல் வேண்டும். அதன்படி, ஜூலை 23-ஆம் தேதி முகாமில், அரியலூர், சென்னை, கோவை, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் கலந்துகொள்ளலாம்.

அதுபோல், ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ள முகாமில், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் கலந்துகொள்ளலாம். ஆள்சேர்ப்பு முகாமுக்கு வருவோர், கல்விச்சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்று, கல்விச் சான்றில் மாவட்டப் பெயர் குறிப்பிடாதோர், பிற மாநிலங்களில் கல்வி பயின்றோர் குடியுரிமை பெற்று சமர்ப்பிக்கவேண்டும். குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள விமானப் படை மையங்களில் பணிபுரியும் படைவீரர்களின் சிறார்கள் எஸ்.ஓ.ஏ.எஃப்.பி சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.


அதுபோல், குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் வாழும் முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் குறைந்தபட்சம் ஓராண்டு இருந்தமைக்கான சான்று, ஏ.எஃப்.ஆர்.ஓ-டி.ஏ.வி-ஆல் கொடுக்கப்பட்ட முன்னாள் படைவீரர்களின் படைவிலகல் புத்தக நகலை சமர்ப்பிக்க வேண்டும்.


எனவே, தகுதியுள்ள நபர்கள், முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் ஆகியோர் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திலும், www.airmenselection.gov.in என்ற இணையதள முகவரி அல்லது co.8asc-tn@gov.in எனும் மின்னஞ்சல் முகவரி, 044-2239561, 22395553 (extn:7833) என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்லலாம் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, July 21, 2018

தேசிய அஸ்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி வேலை | Openings for Administrative Trainees in National Centre for Radio Astrophysics, Pune | NCRA

புனேயில் செயல்பட்டு வரும் தேசிய அஸ்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 25-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer Trainee (Electronics) - 03

சம்பளம்: மாதம் ரூ.25,00

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Technical Trainee (Electrinics) - 02

சம்பளம்: மாதம் ரூ.16,000

தகுதி: இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் பி.எஸ்சி பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Trainee (Electrical) - 01

சம்பளம்: மாதம் ரூ.16,000

தகுதி: எலக்ட்ரானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Administrative Trainee - 02

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன், தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய : http://www.ncra.tifr.res.in/ncra/opportunities/non-academic/old-advertisements/2018/2018-2

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...