Friday, June 8, 2018

தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரி வேலை

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தன்னாட்சி அமைப்பான தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  10. (ஆண்கள் 5, பெண்கள் 5)

பணி: ஊக்க மருந்து தடுப்பு அதிகாரி (Doping Control Officer) - 10

சம்பளம்: மாதம் ரூ.30,000

வயது வரம்பு: 25 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி:  Life Science, Medical Science, Nursing, Pharmacology, Physiotherapy, Medical Lab Technology, Biotechnology போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கணினி குறித்த அறிவு பெற்றிருப்பது அவசியம்.

தேர்ந்தேடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Director General National Anti Doping Agency, 
A-Block, Pragati Vihar Hostel, 
Lodhi Road, New Delhi-110003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.06.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://www.nadaindia.org/upload_file/document/1527243884.pdf

என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, அரசு வேலை

பொதுத்துறை நிறுவனமான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 64

பணி: எக்ஸிகியூட்டிவ் டிரெயினி (EXECUTIVE TRAINEES)

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. ET (Electrical) - 45
2. ET (Computer Science) - 19

பணி: எக்ஸிகியூட்டிவ் டிரெயினி (EXECUTIVE TRAINEES)

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்ணுடன் பி.இ, பி.டெக், பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் கேட்-2018 தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் .

சம்பளம்: மாதம் ரூ.24900 - 50500

வயது வரம்பு: 31.7.2017 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட் 2018 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.6.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://posoco.in/IA/rectdoc/CC_ET(Electrical)_ET(CS)_Detailed_Advert.pdf

இந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கொல்கத்தா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர்களிடமிருந்து வரும் ஜூலை 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 14

பணியிடம்: கொல்கத்தா

பணி: ஸ்டாப் கார் ஓட்டுநர் (Staff Car Driver(Ordinary Grade))

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,500

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Senior Manager, 
Mail Motor Services, 
139, Beleghata Road, 
Kolkata‐700015.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/DRNotification_Kolkata.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...