Monday, May 21, 2018

பல் வலியை உடனடியாக குணப்படுத்த

  • முதலில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் (தேங்காய் எண்ணெய் கிருமிகளை அழிக்கும்), சிறிதளவு கிராம்பு பொடி (இது வலியை மரத்து போக செய்யும்) சேர்த்து பேஸ்டு செய்ய வேண்டும். 
  • பின்பு மிதமான சூட்டில் உள்ள நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். 
  • பிறகு தயார் செய்த பேஸ்டை வலி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.
  • 15 நிமிடம் கழித்து இளஞ்சூடான நீரால் வாய் கழுவவும். இப்பொழுது பல்வலி நிச்சயமாக குறைந்து இருக்கும்.

108 ஆம்புலன்ஸ் சேவை பணிகளில் 116 பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் சேவை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 116 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் 104 ஆலோசனை மையம் மருத்துவச் சேவைகளை ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உள்பட தமிழகத்தின பல்வேறு மாவட்டங்களில் உள்ள 7 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர், அவசரகால உதவியாளர், தொலைபேசி கட்டுப்பாட்டு மைய ஊழியர் ஆகிய பணியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 30 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் 335 பேர் பங்கேற்றனர். இவர்களில் அவசரகால உதவியாளர் பணியிடங்களுக்கு 65 பேரும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 51 பேரும் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday, May 20, 2018

அரிய தகவல்கள்

  • கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
  • யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
  • கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்.
  • மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
  • ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயிரினம் - ஈரிதழ்சிட்டு.
  • வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
  • ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
  • பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணி நேரம் பேசியுள்ளார்.
  • அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள்11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
  • ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
  • தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.
  • காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது. தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.
  • சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
  • விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
  • சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
  • யானை,குதிரை நின்று கொண்டே தூங்கும்.
  • நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
  • டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.
  • மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.
  • எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
  • உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
  • தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். ஆண்டு 1219.
  •  கத்தரிக்காயின் தாயகம் இந்தியாவே.
  • வெண்மை என்பது நிறம் இல்லை. அது ஏழு வண்ணங்களின் கலவையே.
  • உலகில் 44 நாடுகளுக்கு கடற்கரை இல்லை.
  • இந்தியாவில் தமிழில் தான் ‘பைபிள்’ முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • இறாலின் இதயம் தலையில் இருக்கிறது.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...