Sunday, May 20, 2018

அரிய தகவல்கள்

  • கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
  • யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
  • கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்.
  • மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
  • ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயிரினம் - ஈரிதழ்சிட்டு.
  • வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
  • ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
  • பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணி நேரம் பேசியுள்ளார்.
  • அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள்11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
  • ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
  • தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.
  • காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது. தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.
  • சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
  • விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
  • சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
  • யானை,குதிரை நின்று கொண்டே தூங்கும்.
  • நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
  • டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.
  • மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.
  • எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
  • உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
  • தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். ஆண்டு 1219.
  •  கத்தரிக்காயின் தாயகம் இந்தியாவே.
  • வெண்மை என்பது நிறம் இல்லை. அது ஏழு வண்ணங்களின் கலவையே.
  • உலகில் 44 நாடுகளுக்கு கடற்கரை இல்லை.
  • இந்தியாவில் தமிழில் தான் ‘பைபிள்’ முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • இறாலின் இதயம் தலையில் இருக்கிறது.

இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 20 ஆயிரம் காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணி

இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் சுமார் 20 ஆயிரம் காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில், இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படையில் (ஆர்பிஎஸ்எஃப்) காலியாக உள்ள 2018-19 ஆண்டிற்கான 9 ஆயிரத்து 739 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிக்காக காத்திருக்கும் இரு பாலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரும் ஜூன் 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மொத்த காலியிடங்கள்: 9739

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: Constable & Sub Inspector

2018-19 Zone Wise RPF/ RPSF Sub Inspector (SI) Vacancy Details:




தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஆண் விண்ணப்பத்தாரர்கள் 165 செ.மீ உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.


வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, அளவீட்டு தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம், சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்குமுறை: http://constable.rpfonlinereg.org  மற்றும் https://si.rpfonlinereg.org/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 01.06.2018

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018


Saturday, May 19, 2018

மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை

தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர், திட்ட மேலாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Accounts Assistant - 01

சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Programme Manager -01 

சம்பளம்: ரூ.35,000

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவர். 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.05.2018 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

செயலாளர் / ஆணையர், 
மாநில குழந்தை பாதுகாப்பு சங்கம், 
சமூகப் பாதுகாப்பு துறை, 
எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, 
கெல்லிஸ், சென்னை-10, 
தொலைபேசி: 044-264221358


மேலும்விபரங்களுக்கு:http://cms.tn.gov.in/sites/default/files/announcement/TNSCPS_recruitment_140518.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...