Thursday, May 17, 2018

வாழைப்பழத் தோலின் பலன்கள்

வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். 



முள்ளை எடுக்க வேண்டுமா? 

எளிய வழி: 

வாழைப் பழத் தோல் இருந்தா போதும் கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி வேண்டாம்.

வாழைப் பழம் கைவசம் இருந்தால் போதுமானது. முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.

சோரியாஸிஸ் பிரச்சனையா?

சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி .

மருக்கள் காணாமல் போகச் செய்ய :

மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.

சரும அலர்ஜியா?

ஏதாவது சிறு பூச்சி கடித்தால், அல்லது வேறு பிரச்சனைகளால், சருமம் தடித்து, அரிப்பு ஏற்படும். எரிச்சலும் ஆகும். இதற்கு முதலுதவியாய் வாழைப்பழத் தோலினை ட்ரை பண்ணுங்க. வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவுங்க. விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

முகப்பருவை எதிர்க்கிறது:

முகப்பருவை எளிதில் போக்க இன்ஸ்டென்டாய் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.

வெண்மையான பற்கள் பெற :

மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற எல்லாருக்கும் ஆசை. இதற்காக, பற்களை ப்ளீச் செயும் பேஸ்ட், ஜெல் என வாங்கி பல் கூச்சத்தையா பெற வேண்டும். இயற்கையான ப்ளீச்சான நம்ம வாழைப்பழத் தோல் இருக்கு பாஸ். அதை எடுங்க. தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு உங்கள் பற்களை தேயுங்கள். அப்புறம் பாருங்க. பற்கள் மின்னும்.

காயங்கள் ஏற்பட்டுள்ளதா?

பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னாங்க. காயம் வந்த அது ஆறதுக்குள்ள அங்கேயே திரும்ப அடிபடும். இதை நிறைய பேர் அனுபவப்பட்டிருப்பார்கள். வாழைப்பழத் தோலிலுள்ள சில காரணிகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. இதுக்கு சிம்பிள் வழி தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க. அதன் தோலை காயத்துக்கு பூசுங்க. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. காயமும் விரைவில் ஆறிடும்.

தலைகீழாக விழும் கோபுர நிழல் | விருபாட்சா கோயில்



இந்தியாவின் மிக பழமையான இடங்களில் ஒன்று கர்நாடக மாநிலத்திலுள்ள ஹம்பி. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த செய்திதான். நமக்கு புதிரளிக்கும் வகையில் இங்குள்ள கோயில் ஒன்றில் கோபுரத்தின் நிழல் தரையில் விழும்போது தலைகீழாக தெரிகிறது. அந்த கோயில்தான் விருபாட்சா கோயில். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோயில், கட்டடக்கலைக்கும், பல மர்மங்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது.




இந்த கோயிலில் கோபுரதுங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் பெரும்பாலும் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த கோயில் பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் அமைந்துள்ளது.


கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழுகிறது. இந்த மர்மம் என்னவென்று தெரியாமல் பலர் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதன் மத்தியில் அமைந்துள்ள மைய மண்டபம் ரங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இது 1510ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாக தெரிகிறது.




ஹம்பி பகுதியில் இன்னும் பல அரிய பொக்கிஷங்கள் இருந்ததாகவும், அதையெல்லாம் படையெடுத்து வந்தவர்கள் அழித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருபாட்சா கோயிலின் சிறப்பு எத்தனை படையெடுப்புகள் வந்தாலும் இந்த கோயிலை எதும் செய்யமுடியவில்லையாம். 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் கம்பீரத்துடன் காட்சி தருகிறது.

ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இயங்கி வரும் இந்த கோயிலில் இதுவரை எந்த இடையூறுகளும் ஏற்பட்டதில்லையாம். இந்தியாவின் வெகுகாலமாக இயங்கிவரும் ஒரே கோயில் என்று வழங்கப்படுகிறது இந்த விருபாட்சா கோயில்.




இதன் அமைவிடம் மிக முக்கியமானதாகும். ஏனென்றால் இந்த சிறிய கோயில் துங்கபத்திரை நதிக்கரையில் இயற்கை எழில் கொஞ்சும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. 

இங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் சில ஆதாரங்கள் இந்த கோயில் சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர் கட்டியதற்கான உறுதிப்பாட்டை தருகின்றன. அதன் பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து கழகம் கர்நாடக மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் ஹம்பிக்கு பேருந்துகளை இயக்குகின்றது.

எதுக்காக கிட்ட வந்தாலோ | நானும் ரவுடி தான்

எதுக்காக கிட்ட வந்தாலோ,
எதத் தேடி; விட்டுப் போனாலோ..., விழுந்தாலும்,
நான் ஒடன்ஜே போயிருந்தாலும், நினைவிருந்தாலே போதும்!
நிமிர்ந்திடுவேனே நானும்..!

அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை,
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

எனை மாற்றும் காதலே!
எனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!


எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!


எதுக்காக கிட்ட வந்தாலோ,
எதத் தேடி; விட்டுப் போனாலோ..., விழுந்தாலும்,
நான் ஒடன்ஜே போயிருந்தாலும்,
நினைவிருந்தாலே போதும்!
நிமிர்ந்திடுவேனே நானும்..!

அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை,
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

எனை மாற்றும் காதலே!
எனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...