Wednesday, May 2, 2018

ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் அதிகாரிகள் வேலை

அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கி. நாடு முழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கி இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக தற்போது 2 ஆயிரம் புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தமுள்ள 2 ஆயிரம் பணியிடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 1010 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 540 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 300 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 150 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பணி: Probationary Officer (PO)

காலியிடங்கள்: 2000

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 01.04.2018 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.04.1988 மற்றும் 01.04.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு தேர்வுகளை கொண்டதாக இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்திய இளைஞர்கள் www.sbi.co.in அல்லது www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://www.sbi.co.in/webfiles/uploads/files/15214699781_SBI_PO_2018_ENGLISH.pdf

Tuesday, May 1, 2018

சிவில் எஞ்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10

பணி: Engineer (Civil)

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியில் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் 2 புகைப்படங்கள், சாதி, பிறப்பு சான்று, தகுதி சான்றுகள், அடையாள அட்டைகள், பணி அனுபவ சான்று, பொதுப்பணித்துறை சான்று போன்றவற்றின் அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு: www.rites.com

தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள்

தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day அல்லது Labor Day) என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன.

தொழிலாளர் தினத்தின் கொண்டாட்டம் அதன் மூலங்களை எட்டு மணிநேர நாள் இயக்கத்தில் கொண்டிருக்கின்றது, இது எட்டு மணிநேர வேலை எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை வாதிட்டது.

தொழிலாளர் நாள்: 

பெரும்பாலான நாடுகள் மே 1 இல் கொண்டாடுகின்றனர், அது மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. ஐரோப்பாவில் இந்த நாளானது தொழிலாளர் நாள் இயக்கத்தை விடவும் மிகவும் முக்கியமானதாக, வல்லமையுடையதாக இருக்கும் கிராமப்புற திருவிழாவாக பழைய முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. இந்த விடுமுறை நாளானது சர்வதேசமயமாக்கப்பட்டு இருக்கின்றது மற்றும் பல நாடுகள் அணிவகுப்புகள், காட்சிகள் மற்றும் நாட்டுப்பற்று மற்றும் தொழிலாளர் சம்பந்தமான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலநாள் கொண்டாட்டங்களைக் கொண்டிருந்தன. இருப்பினும், வடக்கு ஐரோப்பாவில் வால்புர்கிஸ் இரவானது முன்னதான இரவில் கொண்டாடப்படுகின்றது, மேலும் இந்த விடுமுறை நாளானது சில நாடுகளில் தொழிலாளர் நாளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பொலிவியா, போசினியா, பிரேசில், பல்கேரியா, கேமரூன், சிலி, கொலம்பியா, கோஸ்டா ரிகா, சீனா, கரோடியா, கியூபா, சைப்ரஸ், செக் குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு, டென்மார்க், டொமினிக் குடியரசு, ஈக்வடார், El சல்வடார், எகிப்து, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், கௌதமாலா, ஹைட்டி, ஹோண்ட்ரூஸ், ஹாங்காங், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இந்தியா, இந்தோனேசியா (உள்ளூரில் இது ஹரி புரூஹ் என்று அறியப்படுகின்றது), இத்தாலி, ஜோர்டன், கென்யா, லத்வியா, லூதியானா, லெபனான், மெசடோனியா, மடகாஸ்கர், மலேசியா, மால்டா, மொரூஷியஸ், மெக்சிகோ, மொராக்கோ, மியான்மர் (பர்மா), நைஜீரியா, வடகொரியா, நார்வே, பாகிஸ்தான், பனாமா, பராகுவே, பெரு, போலந்து, பிலிப்பைன்ஸ், போர்சுக்கல், ரோமானியா, ரஷ்யா கூட்டமைப்பு, சிங்கப்பூர், ஸ்லோவகியா, ஸ்லோவேனியா, தென்கொரியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், இலங்கை, செர்பியா, சூரிநாம், ஸ்வீடன், சிரியா, தைவான், தாய்லாந்து, துருக்கி, உக்ரைன், உகாண்டா, உருகுவே, வெனிசுலா, வியட்னாம், ஏமன், ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் மே 1 தேசிய விடுமுறை தினமாக உள்ளது.

சால்வேனியா, செர்பியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் மே 2 ஆம் தேதியும் தேசிய விடுமுறை நாளாக உள்ளது.

போலந்தில் மே 1 தேசிய விடுமுறை நாளாக இருக்கின்ற வேளையில், அது தொழிலாளர் நாள் என்பதிலிருந்து எளிமையாக "மாநில விடுமுறை நாள்" என்று 1990 இல் மறுபெயரிடப்பட்டது.

இங்கிலாந்து மற்றும் சில கரீபிய நாடுகளில், தொழிலாளர் விடுமுறை தினமானது மே மாதத்தின் முதல் திங்கள் கிழமை அன்று வழங்கப்படுகிறது, இது மே 1 இல் ஒரே சமயத்தில் நேரிடலாமே தவிர அடிக்கடி நிகழாது. இங்கிலாந்து, ஆண்டிகுவா மற்றும் பார்புடா, டோமினிக்கா, டொமினிக் குடியரசு, மாந்த்சேர்ரட்டின் பிரிட்டிஷ் பிரதேசம், செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ், மற்றும் செயிண்ட் வின்சண்ட் மற்றும் கிரேனேடியன்ஸ் ஆகியவை இந்த நாடுகளாகும். மேலும், கீழே ஆஸ்திரேலியா பிரிவில் விவரித்துள்ளது போன்று, குயின்ஸ்லாந்து மற்றும் வடக்குப் பிரதேசத்தின் இந்தக் கொள்கையைப் பின்பற்றுகின்றன.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...