Tuesday, May 22, 2018

என் ஆள பார்க்க போறேன் - கயல்

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…
என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேச போறேன்…

அவன் கண்ணுக்குள்ள,
என்னை வைக்க போறேன்.
அவன் நெஞ்சுக்குள்ள,
என்னை தைக்க போறேன்.
நானே…. என்னை…தர போறேன்!

வீட்டுவிட்டு வந்துட்டேனு,
சொல்ல போறேன்.
கூட்டிகிட்டு போயிடுனு,
சொல்ல போறேன்.
இதை தான் எதிர்பார்த்து
நான் கிடந்தேன் உயிர் வேர்த்து’
என சொல்லி,
ஆசையில், அல்லடுவான்!
மனம் துள்ளி காதலில் தள்ளடுவான்!
அதனா பார்த்தே, அழ போறேன்!

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…

உன்னால் தான் தூங்கலைனு,
சொல்ல போறேன்!
சோறு தண்ணி சேரலைனு,
சொல்ல போறேன்!
புதுசா புளுகாம, ரொம்ப பெருசா வழியாம,
அடி எப்ப நீ எனக்கு பொண் ஜாதியா
ஆக போறேன்னு ? அப்பாவியா
நானே… கேட்டு… வர போறேன்!

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்...

வருமான வரித் துறையில் , தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு

மத்திய வருமான வரித் துறையில் காலியாக உள்ள 30 வருவாய் வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 30 (தமிழக விளையாட்டு வீரர்கள்)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:Inspector of Income-tax - 07

சம்பளம்: மாதம் ரூ.9,300 முதல் 34,800 + தர ஊதியம் ரூ.4,600 (PB-2)

பணி: Tax Assistant - 11

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi-Tasking Staff - 14

தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2.400(PB-1) வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை:விளையாட்டு டிரயல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnincometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.06.2018

மேலும் சம்மந்தபட்ட விளையாட்டுத்துறைகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய :https://www.tnincometax.gov.in/download.php?a=1&filename=image1_2018-05-195aff7c8e2693c.pdf

Monday, May 21, 2018

செளத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வரும் பிரபல பொதுத்துறை வங்கியான செளத் இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் ஏராளமான கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் தற்போது காலியாக உள்ள 150 புரபெஷனல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 25க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 150

பணி: Probationary Officers (PO)

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ தேர்ச்சியுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2017 தேயின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. மற்ற பிரிவினருக்கு ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விணணப்பிக்க வேண்டும். அன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
\
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.05.2018

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 2018-இல் நடைபெறும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்:புதுச்சேரி, சென்னை, கோவை, திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.

எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும் முழுமையான விவரங்களுக்கு: : https://www.southindianbank.com/UserFiles/file/Notification_Probationary_Officers_May2018.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...